என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்நாத் சிங்"

    • இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
    • முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    டெல்லி வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் நகதாணியுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார்.

    தற்போதைய பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு நிலை குறித்து இருவரும் பேசினார்கள். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி அவர்கள் விவாதித்தனர்.

    இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடனான வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காக ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்கள் மகத்தான பங்களிப்புக்காக உங்களை பாராட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    லாவோஸ் நாட்டில் 2024-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் சந்தித்தனர். தற்போது 6 மாதங்களுக்கு பிறகு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் 2-வது முறையாக சந்தித்து உள்ளனர்.

    • நமது துணிச்சலான வீரர்கள் போர்க்களத்தில் போராடுகிறார்கள்
    • நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு.

    பாதுகாப்பு அமைச்சராக, இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லபட்டதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற, சம்ஸ்க்ருதி ஜாக்ரன் மஹோத்சவத்தில் பேசிய ராஜ்நாத் சிங், "ஒரு தேசமாக, நமது துணிச்சலான வீரர்கள் இந்தியாவை உடல் ரீதியாகப் பாதுகாக்கிறார்கள், அதே நேரத்தில் நமது முனிவர்களும் ஞானிகளும் இந்தியாவை ஆன்மீக ரீதியாகப் பாதுகாக்கிறார்கள் ஒருபுறம், நமது துணிச்சலான வீரர்கள் போர்க்களத்தில் போராடுகிறார்கள், அதே நேரத்தில் நமது முனிவர்கள் வாழ்க்கை என்ற களத்தில் போராடுகிறார்கள்.

    பாதுகாப்பு அமைச்சராக, நாட்டின் எல்லைகளையும், நமது வீரர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு.

    பிரதமர் நரேந்திர மோடியின் பணி செய்யும் பாணி மற்றும் வலுவான உறுதிப்பாடு அனைவருக்கும் தெரியும். மக்கள் எதை விரும்பினாலும், அது மோடியின் தலைமையின் கீழ் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ராஜ்நாத் சிங் உடன் பாபா ராமதேவ் உள்ளிட்டோரும் மேடையை பகிர்ந்து கொண்டனர்.

    • மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
    • இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்திருந்தது.

    இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.

    மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

    இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பிரதமர் மோடி தனது ரஷியா பயணத்தை ரத்து செய்தார்.

    இந்த விழாவில் இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அவரும் ரஷிய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி சஞ்சய் சேத் ரஷியாவில் நடக்கும் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. 

    • இரு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும், போர் ஏற்படலாம் என்ற நிலை நீடித்து வருகிறது.
    • அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

    இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடனான எல்லைகளில் வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவத்துக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.

    இரு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும், போர் ஏற்படலாம் என்ற நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நேற்று இரவு தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

    இதுகுறித்து பீட் ஹெக்செத் வெளியிட்டுள்ள X பதிவில், "கடந்த வாரம் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் சிங் @rajnathsingh உடன் பேசினேன்.

    எனது வலுவான ஆதரவை வழங்கினேன். நாங்கள் இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் நிற்கிறோம். இந்தியா பாதுகாத்துக் கொள்ளும் உரிமையையும் அமெரிக்கா ஆதரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் ஆகும்.
    • தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

    இதற்கிடையில், முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. கூட்டத்தில், ஜெனரல் சவுகான் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு விரிவாக விளக்கினார். மேலும் அதற்கான உத்திகள் மற்றும் அவற்றின் நிலைத்தன்மை குறித்து விவாதித்தார்.

    2019 இல் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் ஆகும்.  

    ஏப்ரல் 22 இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 23 முதல் பஹல்காமில் சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்களைத் தேடும் பணியை தேசிய புலனாய்வு முகமை (NIA) குழுக்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

    விசாரணையில் NIA ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஹல்காம் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
    • அமித் ஷா சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் உளவுத்துறையின் தோல்விதான் தாக்குதலுக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு இன்று காலை அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.

    இன்று அவரது இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமர் மோடி வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    • லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
    • பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம்.

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதன்பின் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், பஹல்காமில் நடந்த கோழைத்தனமான செயலில் பல அப்பாவி உயிர்களை இழந்தோம். நாங்கள் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம். அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். 

    இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, இதற்கு பின்னால் உள்ளவர்களையும் நாங்கள் கண்டுபிடிப்போம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் அதற்கான பலனை காண்பார்கள் என நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.   

    • ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
    • அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

    விண்வெளியில் ஆராய்ச்சி பணி மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    வெறும் 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவானது. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

    இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர். இந்த நிலையில், விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு டிராகன் விண்கலம் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியது. இதையடுத்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாசாவின் #Crew9 பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதில் மகிழ்ச்சி! இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பிற விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினர் விண்வெளியில் மனித சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியின் வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளனர்.

    சுனிதா வில்லியம்ஸின் நம்பமுடியாத பயணம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் போராடும் மனப்பான்மை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது பாதுகாப்பான வருகை விண்வெளி ஆர்வலர்களுக்கும் முழு உலகிற்கும் கொண்டாட்டத்தின் தருணம். அவரது தைரியமும் சாதனைகளும் நம் அனைவரையும் பெருமைப்படுத்துகின்றன.

    அவர்களை பூமிக்கு பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் ஒரு பெரிய நன்றி," என்று தெரிவித்துள்ளார்.

    • பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது.
    • இந்தியா அமைதியை தான் விரும்புகிறது.

    பெங்களூரு :

    பெங்களூரு இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா வசந்தபுராவில் உள்ள ராஜாதிராஜ கோவிந்தன் கோவிலில் வைத்து நேற்று நடைபெற்றது.

    இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பல மொழிகளில தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூலை வெளியிட்டு பேசியதாவது:-

    குருசேஷத்திர போர்க்களத்தில் தான் பகவான் கிருஷ்ணர் காவிய விரிவுரையை நிகழ்த்தினார். இது பகவத் கீதை என்று நம்மால் அறியப்பட்டது. பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது. பகவத் கீதையை படிப்பதும், அதை வாழ்க்கையில் உள் வாங்வதும் ஒரு நபரை அச்சமின்றி வாழ வழிகாட்டுகிறது.

    போர், வன்முறையை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. இந்தியா அதனை விரும்புவதும் இல்லை. அமைதியை தான் விரும்புகிறது. என்றாலும், அநீதி மற்றும் ஒடுக்கு முறைக்கு நடுநிலையாக இருக்க முடியாது. அநீதி மற்றும் அடக்கு முறைக்கு நடுநிலையாக இருப்பது நமது இந்தியாவின் இயல்பு கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் இஸ்கான் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • கலாச்சார மற்றும் ஆன்மீக மரபு ஆகியவை இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
    • கடந்த காலத்தில் இந்தியாவின் ஆன்மீக, அறிவுசார் மேலாதிக்கத்தை சர்வதேச அளவில் ஏற்றுக்கொண்டனர்

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடுனில், ஸ்வாமி ராம் ஹிமாலயன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 300 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியானது, இந்தியர்கள் தங்கள் புகழ்பெற்ற பாரம்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

    வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கு, நாட்டின் சிறப்புமிக்க கடந்த காலம், அதன் சிறந்த கலாச்சார மற்றும் ஆன்மீக மரபு ஆகியவை தொடர்பான வலுவான விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த காலத்தில் இந்தியாவின் ஆன்மீக மற்றும் அறிவுசார் மேலாதிக்கத்தை சர்வதேச அளவில் இயல்பாக ஏற்றுக்கொண்டனர் என்றும், பல்வேறு அறிவுத் துறைகளில் இந்தியாவின் பாதையை உடைக்கும் பங்கை ஒப்புக்கொண்ட சீன அறிஞர்களையும் ராஜ்நாத் சிங் மேற்கோள் காட்டினார்.

    சீன அறிஞர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி பேசிய அவர், "இருபடி சமன்பாடு, இலக்கணம் மற்றும் ஒலிப்பு முறை ஆகியவற்றில் இந்தியா சீனாவின் ஆசிரியராக இருந்தது" என்றார்.

    • போருக்கு தூண்டப்பட்டால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயார் என பாதுகாப்புத்துறை மந்திரி கூறினார்.
    • அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது என்றார்.

    இடாநகர்:

    அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா போரை விரும்பாத நாடு. அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது.

    இந்த தத்துவம் கடவுள் ராமர் முதல் கடவுள் புத்தரின் போதனைகள் வரை நமது மரபில் பெறப்பட்ட தத்துவம்.

    போருக்கு தூண்டப்பட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

    எல்லையில் எத்தகையை சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.

    • கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ளது.
    • இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது

    போபால்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது

    இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி, நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுல் காந்தியிடம் கேட்கிறேன். நாட்டில் வெறுப்பை உருவாக்குபவர் யார்? நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறுவதன் மூலம் இந்தியா அவமதிக்கப்படுகிறது. ராகுல் உங்களுக்கு என்ன ஆயிற்று?

    முன்பு போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்பட பாதுகாப்புத் துறைக்கான அனைத்தையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால் இப்போது இந்தியாவிலேயே அனைத்தையும் தயாரிக்கவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் திருப்பி அனுப்பவும் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    ×