என் மலர்
நீங்கள் தேடியது "அகிலேஷ் யாதவ்"
- மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும்.
- மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை எனத் தெரிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும். அதுவும் மிகப்பெரிய அளவிலான உற்பத்தியுடன் நடைபெற வேண்டும்" என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் உ.பி.யின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில் "மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் கருத்து குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் ாட்டுச் சாணம் மற்றும் கால்நடைகளை வெறுக்கிறார். ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மறந்துவிட்டாரா, அல்லது தனது திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பசு, கங்கை மற்றும் கீதையை அவமதிக்கிறாரா?" என பதில் அளித்துள்ளார்.
- சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர்.
- எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என அகிலேஷ் தெரிவித்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் ரூ.33 லட்சம் கோடி மதிப்புள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகளை முரண்பாடான தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர். எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கான்பூரில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அமைதியைக் குலைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என அழைத்துக் கொள்கிறது.
- ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது- அகிலேஷ்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது சமாஜ்வாடி கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது "பாஜக கட்சி உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என தாங்களாகவே கொள்கிறது. ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது" என கிண்டல் செய்யும் வகையில் கூறினார்.
அதற்கு பதில் அளித்த அமித் ஷா "இங்கு என் முன் அமர்ந்துள்ள அனைத்து கட்சிகளிலும், அவர்களுடைய தேசிய தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
நாங்கள் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து, 12 முதல் 13 கோடி உறுப்பினர்களிடமிருந்து தேர்வு செய்வோம். இதனால் கொஞ்சம் நேரம் பிடிக்கும். உங்களுடைய முறையில் அதிக நேரம் எடுக்காது. நீங்கள் இன்னும் 25 வருடத்திற்கு தலைவராக இருப்பீர்கள் எனச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். பாஜக கட்சி விதிப்படி பாஜக தலைவர், அரசு பதவியில் இருக்கக் கூடாது. இதனால் விரைவாில் பாஜக புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
- தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சிக்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையில் கருத்து மோதல் வலுத்துள்ளது.
சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கன்னோஜில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கன்னோஜ் தொகுதி எப்போதும் சகோதரத்துவத்தின் நறுமணத்தை பரப்பியுள்ளது. கன்னோஜ் மக்கள், இந்த பாஜக துர்நாற்றத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் (பாஜக) துர்நாற்றத்தை விரும்புகிறார்கள், அதனால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள்.
ஆனால், எங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும், அதனால் தான் நாங்கள் இங்கு ஒரு வாசனை திரவிய பூங்காவைக் கட்டினோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக தங்கள் அரசாங்கத்தால் கட்டப்பட்ட வாசனை திரவிய பூங்காயும், தற்போது பாஜக அரசால் அதிகளவில் கட்டப்பட்டுவரும் பசுத்தொழுவங்களையும் ஒப்பிட்டு அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் இதற்கு பதிலடி கொடுத்தார்.
அவர் கூறியதாவது, சமாஜ்வாதியினர் பசுவின் சாணம் நாற்றமடிப்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் பசுவதை செய்வோருடன் அவர்கள் பசுக்களை கொடுத்து வந்தனர்.
பசுக்கடத்தல், பசுவதை செய்வோருக்கும் சமாஜ்வாதியினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் பசுவதை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்ததால் தற்போது சமாஜ்வாதியினர் எங்களை கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
அவர்களுக்கு பசுவின் சாணம் நாற்றமடிகிறது. ஆனால் தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால்தான் கோமாதாவுக்கு சேவை செய்வதை அவர்களின் தலைவர் (அகிலேஷ் யாதவ்) நாற்றமாக நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
- நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?.
ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட பாஜக தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் இதை சொல்லக்கூடாது என்றாலும், முழுப்பொறுப்புடன் செல்கிறேன். பாஜக நாட்டை அரசியலமைப்பின்படி நடத்தவில்லை.
நீங்கள் பல வருடங்களாக ரம்ஜான் பண்டிகையை பார்த்து இருப்பீர்கள். இதுபோன்று அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?. போலீசார் காரணங்கள் ஏதுமின்றி என்னுடைய பாதுகாப்பு வாகனங்களை (Convoy) வேண்டுமென்றே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.
நான் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்டபோது, எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை. இதை நான் என்னவென்று அழைப்பது? சர்வாதிகாரமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? அல்லது பிற சமூகங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களை மிரட்டும் முயற்சியா?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
- மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது.
- பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது என்றார்.
மேலும், மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்ததற்காக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை கண்டது என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வெளியே சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகா கும்பமேளாவை ஒருங்கிணைத்து நடத்த மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது? உத்தரப் பிரதேச முதல் மந்திரியும், மத்திய பிரதேச முதல் மந்திரியும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்தனர். மக்கள் எல்லைக்குள் கூட நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
1000 இந்துக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ.க.வும், அதன் தொண்டர்களும் உதவ வேண்டும்.
காணாமல் போயுள்ள அந்த 1000 இந்துக்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு பா.ஜ.க. முறையான பதிலை வழங்கவேண்டும். காணாமல் போன அந்த 1000 இந்துக்களையாவது பா.ஜ.க. கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- கும்பமேளாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார்.
- கும்பமேளாவில் படகோட்டிக்கு எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார்.
ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமடைந்துள்ளது. பாஜக சமூகத்தை பலவீனப்படுத்தி பிளவை உருவாக்குகிறது. பாஜக நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது.
நமது முதல்வர் 30 என்ற எண்ணை நேசிப்பதால் இதைச் சொல்கிறேன். (கும்பமேளாவில்) எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார். (கும்பமேளாவில் படகோட்டிக்கு) எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார். இந்த வகையான கணக்கை எங்கள் முதல்வரைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பணம் சம்பாதித்தது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், "அலகாபாத்தில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக முதல்வர் கூறுகிறார். தனியார் வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் எப்போது முடிவு செய்தது என்று யாராவது எனக்கு விளக்கவும்?
144 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?" என்று மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்ற உ.பி. அரசின் கூற்றை கேலி செய்தார்.
மேலும் பேசிய அவர், "இப்போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்பதை நான் அனைத்து மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். இனிமேல் எதிர்காலத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை பரப்புவார்கள். 2027 இல் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்"
- விலைவாசி உச்சத்தில் உள்ளது.
- வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி :
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
'வருகிற 2024-ம் ஆண்டில் மத்தியில் மாற்று அரசை அமைப்பதற்கான தொடர் நடவடிக்கை தொடங்கியுள்ளது. நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் ஆகியோர் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பேத்கரால் அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலைவாசி உச்சத்தில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாற்று அரசு அவசியமாக உள்ளது.
உத்தரபிரதேச மாநில மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வளமை, மேம்பாட்டின் பாதையில் இம்மாநிலம் சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது தற்போது எந்த நிலையில் உள்ளது?
மாநிலத்தில் 5 ஆண்டுகால ஆட்சியைக் கடந்தபிறகுதான் முதலீட்டாளர்களை பா.ஜ.க. அழைக்க வேண்டுமா? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்?'
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மக்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
அவரது மாமனாரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மரணத்தால் காலியான மெய்ன்புரி தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வென்றார்.
இந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்ற டிம்பிள் யாதவ், பின்பு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், மக்களவை முன்வரிசைத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பகுதியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.
டிம்பிள் யாதவின் கணவரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து மனைவி பதவி ஏற்பதை பார்த்தார்.
- உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் ராகுல் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.
- காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.
இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம் ராகுல் நடந்துள்ளார்.
தற்போது வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான குளிர் நிலவுவதால் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக 9 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி மீண்டும் ராகுல்காந்தி ஒன்றுமை யாத்திரையை தொடங்க உள்ளார்.
உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் அவர் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது அந்ததந்த மாநில கட்சி தலைவர்களை யாத்திரைக்கு காங்கிரசார் அழைத்தனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் போது ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேத்தில் 2 பெரிய கட்சி தலைவர்கள் ராகுல்யாத்திரையை புறக்கணிப்பது காங்கிசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- உத்தர பிரதேசத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றார்.
- அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் வைத்து விடுவார்கள் எனக்கூறி குடிக்க மறுத்துவிட்டார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவராக உள்ள இவரது கட்சியின் டுவிட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அவரை விடுவிக்கும்படி கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் நேற்று சென்றார். அவருடன் கட்சித் தொண்டர்களும் சென்றுள்ளனர்.
முன்னாள் முதல் மந்திரியான அவருக்கு போலீஸ் அதிகாரிகள் குடிக்க தேநீர் கொடுத்தனர். ஆனால், உங்களுக்கு (தொண்டர்களிடம்) தெரியாது. எனது தேநீரில் அவர்கள் விஷம் வைத்து விடுவார்கள். எனக்கு தேவையான தேநீரை நானே வாங்கி குடித்துக் கொள்வேன். உங்களுக்கான தேநீரை நீங்களே குடியுங்கள் என போலீசாரிடம் கூறினார்.
அதன்பின், காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சி தொண்டர் ஒருவரிடம் அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சி தொண்டரான மணீஷ் ஜகனை லக்னோ போலீசார் கைது செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. வெட்கக் கேடானது. உடனடியாக அவரை போலீசார் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- கொல்கத்தாவில் அகிலேஷ் யாதவ், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
- மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார்.
கொல்கத்தா:
மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என தலைவர்கள் குரல் கொடுத்தாலும், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க முக்கிய கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது இந்த கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார். எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் மற்ற மாநில கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சமமான தூரத்தில் வைக்க வேண்டும் என்றே இந்த தலைவர்கள் விரும்புகின்றனர்.
- இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி வடிவம் எடுக்கும்.
- நாடு முழுவதும் பா.ஜனதா தோற்பதை சமாஜ்வாடி உறுதி செய்யும்.
லக்னோ :
சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்காக தத்தமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி வடிவம் எடுக்கும். அக்கூட்டணி, பா.ஜனதாவுக்கு எதிராக மோதும். அதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.
பல மாநிலங்களில் மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றன. அங்கெல்லாம் களத்திலேயே காங்கிரஸ் இல்லை. மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுடன் மோதுகின்றன.
பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் கோருவது உண்மைதான். அக்கட்சிகள் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளன.
இது ஒரு பெரிய போர். இதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சி கூட்டணியின் முகமாக யார் செயல்படுவது என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அது இப்போது பொருத்தமான கேள்வி அல்ல.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், உத்தரபிரதேசத்தில் வெற்றிபெற வேண்டும். ஆனால், உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பா.ஜனதா தோற்பதை சமாஜ்வாடி உறுதி செய்யும். அதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம். தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம். அமேதியில் எங்கள் கட்சி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு காங்கிரசார் ஆதரவாக நிற்பது இல்லை. எங்கள் தொண்டர்களே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.