search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98068"

    • ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இரும்புப் பெட்டிகளைப் போலவே

    இடிபாடுகளுக்குள் சிக்கி

    இதயக்கூடும் நொறுங்கிவிட்டது

    பாதிக்கப்பட்ட

    ஒவ்வொரு குடும்பத்திற்கும்

    ஆழ்ந்த இரங்கல்

    மீட்புப் பணியாளர்க்குத்

    தலைதாழ்ந்த வணக்கம்

    இருந்த இடத்தில்

    எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்

    கண்ணீர்

    கன்னம் தாண்டுகிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


    • சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
    • இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது . மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் டுவிட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


    சீமான் -வைரமுத்து

    சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீமானுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வன்மையாகக் கண்டிக்கிறேன்

    சுட்டுரையை முடக்கிவிட்டால்

    சீமான் தீர்ந்து போவாரா?

    வெயிலுக்கு எதிராகக்

    குடைபிடித்தால்

    காணாமற் போகுமோ கதிரவன்?

    கருத்தைக்

    கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;

    கை கால்களைக் கட்டாதீர்கள்

    கருத்துரிமை இன்னும்

    உயிரோடு இருப்பதாக

    நம்புகிறவர்களுள்

    நானும் ஒருவன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து.
    • இவர் பாடல்கள் மட்டுமல்லாமல் கவிதை, நாவல் என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.


    வைரமுத்து

    கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும் வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகம் 2003-ம் ஆண்டு 'சாகித்ய அகாடமி' விருதை பெற்றது.


    கள்ளிக்காட்டு இதிகாசம் மொழிப்பெயர்ப்பு

    இந்நிலையில், 'கள்ளிக்காட்டு இதிகாசம்' தற்போது பஞ்சாபி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை மன்ஜித் சிங் என்பவர் மொழிப்பெயர்த்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

    அதில், "பஞ்சாபி மொழியில்

    கள்ளிக்காட்டு இதிகாசம்

    உலகில்

    12கோடி மக்களால் பேசப்படும்

    பெருமொழி பஞ்சாபி

    பரீதுதீன் முதல்

    அம்ரிதா ப்ரீத்தம் வரை

    11 நூற்றாண்டுகள்

    செழுமைப்படுத்தப்பட்டது

    பஞ்சாபின் பஞ்ச நதிகளோடு

    வைகை சங்கமிப்பது பெருமை

    மொழிபெயர்ப்பு

    மன்ஜித் சிங்

    நன்றி சாகித்ய அகாடமி" என்று பதிவிட்டுள்ளார்.


    • மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளனர். 


    வைரமுத்து

    இந்த கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து 'ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்' என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "சாராயம்

    ஒரு திரவத் தீ

    கல்லீரல் சுட்டுத்தின்னும்

    காட்டேரி

    நாம் விரும்புவது

    கள்ளச் சாராயமற்ற

    தமிழ்நாட்டை அல்ல;

    சாராயமற்ற தமிழ்நாட்டை

    மாநில அரசு

    கடுமை காட்டினால்

    கள்ளச் சாராயத்தை

    ஒழித்துவிடலாம்

    ஒன்றிய அரசு

    ஒன்றிவந்தால்

    சாராயத்தையே ஒழித்துவிடலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
    • இவருக்கு கவிஞர் வைரமுத்து நேரில் சென்று தங்கப் பேனாவை பரிசளித்தார்.

    பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார். மாணவி நந்தினிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, அவர் பெற்ற தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிதையின் வாயிலாக தெரிவித்திருந்தார்.


    மாணவி நந்தினிக்கு தங்க பேனா பரிசளித்த வைரமுத்து

    இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். மேலும் மாணவி நந்தினிக்கு தனது வாழ்த்துக்களை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். இந்நிலையில், தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திண்டுக்கல்

    ஏழை வீடு

    எளிய குடில்

    எட்டுக்கெட்டு அறை

    இங்கிருந்து வென்ற

    நந்தினிக்குத்தான்

    தங்கப் பேனா சேர்கிறது

    பட்ட பாடுகளை

    பெற்ற வெற்றிகளைப்

    பள்ளிகளுக்குச் சென்று

    சொல்லிக்கொடு மகளே

    வெற்றியைத் தாண்டித்

    தோற்றவர்களைத்

    தத்தெடுங்கள் ஆசிரியர்களே

    தோற்று வெல்பவர்க்கும்

    பரிசு தருவேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • திண்டுக்கல் மாணவி நந்தினி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
    • மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை பரிசளித்து கவிஞர் வைரமுத்து மகிழ்ந்தார்.

    பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார். மாணவி நந்தினிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, அவர் பெற்ற தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிதையின் வாயிலாக தெரிவித்திருந்தார்.


    நந்தினிக்கு தங்க பேனா பரிசளித்த வைரமுத்து
    நந்தினிக்கு தங்க பேனா பரிசளித்த வைரமுத்து

    இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். மேலும் மாணவி நந்தினிக்கு தனது வாழ்த்துக்களை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். 

    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
    • இதில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார்.


    நந்தினி -வைரமுத்து

    இந்நிலையில், மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு

    தச்சுத் தொழிலாளியின் மகள்

    மாநிலத் தேர்வில்

    உச்சம் தொட்டிருப்பது

    பெண்குலத்தின் பெருமை

    சொல்கிறது

    எப்படிப் பாராட்டுவது?

    அண்மையில் நான்பெற்ற

    தங்கப் பேனாவைத்

    தங்கை நந்தினிக்குப்

    பரிசளிக்கிறேன்

    திண்டுக்கல் வருகிறேன்;

    நேரில் தருகிறேன்

    உன் கனவு

    மெய்ப்படவேண்டும் பெண்ணே! " என்று குறிப்பிட்டுள்ளார்.


    • தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி.
    • இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.

    தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி (55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.

    அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, வரலாறு என பல படங்களை சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். மேலும், விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.


    எஸ்.எஸ்.சக்ரவர்த்தி

    இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு காலமானார்.


    எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வைரமுத்து

    எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு கவிஞர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது சமூக வலைதளத்தில்  "நண்பா!

    நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி!

    மறைந்துவிட்டாயா?

    அஜித்தை வைத்து நீ தயாரித்த

    வாலி, முகவரி, சிட்டிசன்

    ரெட், வில்லன், ஆஞ்சநேயா

    வரலாறு ஆகிய 7படங்களுக்கும்

    என்னையே எழுத வைத்தாயே

    தமிழ்க் காதலா!

    காசோலைகள்

    வந்த இடத்திலிருந்து

    சாவோலையா?

    கலங்குகிறேன்;

    கலையுலகம் உன் பேர்சொல்லும்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


    • கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • இதில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார்.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்பட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

    தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் நோக்கில் இந்த பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரசார கூட்டம் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்றனர். திடீரென குறுக்கிட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார். தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதுமட்டுமல்லாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கர்நாடகா மேடையில்

    தமிழ்த்தாய் வாழ்த்து

    பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு

    இடிவிழுந்த மண்குடமாய்

    இதயம் நொறுங்கியது

    ஒலிபரப்பாமல்

    இருந்திருக்கலாம்;

    பாதியில் நிறுத்தியது

    ஆதிமொழிக்கு அவமானம்

    கன்னடத்துக்குள்

    தமிழும் இருக்கிறது;

    திராவிடத்திற்குள்

    கன்னடமும் இருக்கிறது

    மறக்க வேண்டாம். " என்று பதிவிட்டுள்ளார்.


    • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

    இந்நிலையில் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், பிரிவுக்குப் பிறகு

    உறவுக்கு வந்த கணவனைக்

    கொஞ்சுகிறாள் மனைவி

    "வெட்கம் விடைகேட்குதே"

    என்கிறாள்

    "கொச்சையான சொற்கள்

    கொஞ்சம் செவிகேட்குதே"

    என்கிறாள்

    பாடல் பதிவைப் பாருங்கள்

    இயக்கம் ராஜசேகர்

    இசை ஜோகன்

    படம் 13ஆவது அட்சக்கோடு

    என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    • ஒரு தலைமுறை இறந்துவிட்டது; ஒரு தலைமுறை மறந்துவிட்டது; கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில்...
    • அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம் என்று கூறியுள்ளார்

    பிரபல திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,


    பி.எஸ்.வீரப்பா

    எஸ்.ஏ.அசோகன்

    மேஜர் சுந்தரராஜன்

    ஜெய்சங்கர், நாகேஷ்

    கலை உலகில்

    என் நெருக்கமான நண்பர்கள்


    யார் நினைக்கிறார்கள்?

    ஒரு தலைமுறை இறந்துவிட்டது;

    ஒரு தலைமுறை மறந்துவிட்டது;

    கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில்

    எல்லார்க்கும் இது நேரும்

    அறம் செய்து வாழ்வோம்;

    அன்பு செய்து போவோம் என்று கூறியுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.



    இந்நிலையில் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுப்பது வைரலாகி வருகிறது. அதில், கமல் இருக்கும் வரை

    ரஜினிக்கும்

    ரஜினி இருக்கும் வரை

    கமலுக்கும்

    விஜய் இருக்கும் வரை

    அஜித்துக்கும்

    அஜித் இருக்கும் வரை

    விஜய்க்கும்

    ஒரு பிடிமானம் இருக்கும்

    எனக்கிருந்த பிடிமானத்தைப்

    பிய்த்துக்கொண்டு

    போய்விட்டீர்களே

    வாலி அவர்களே

    காற்றில் கத்தி சுற்றிக்

    கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×