search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    • வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது.
    • தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலுார் பகுதியில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது. எனவே, 13 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 100 ரூபாய்க்கு விலை போனது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. எனவே, அதிக ஈரப்பதம் காரணமாக தக்காளி அழுகும் நிலைமை அதிகரித்துள்ளது.

    தற்போது ஒரு பெட்டி தக்காளி 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் மழை அதிகரிக்கும் என்பதால் தக்காளி மேலும் அழுக வாய்ப்புள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

    இந்த தகவலை பொங்கலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளிவிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மொத்த விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.30ஆக உயர்ந்தது.

    போரூர்:

    தக்காளியின் விலை ரூ.100-யை கடந்து உச்சம் தொட்ட நிலையில் பின்னர் படிப்படியாக குறைந்தது. இதைத்தொடர்ந்து கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளிவிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.30ஆக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே பெரிய வெங்காயம், சின்னவெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலையும் திடீரென அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

    • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து குறை வினால் விலை உயர்ந்து கிலோ 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தக்காளி வரத்து குறைவால் விலை அதிகர்த்துள்ளது. விலை உயர வாய்ப்பு.

    மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இதன் மூலம் சராசரி தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 5ரூபாய் முதல் 7ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் வருவதையொட்டி தக்காளியின் விலை உயர்ந்து கிலோ தக்காளி 16 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையாக 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு சில மாதங்களில் மட்டுமே விலை உயர்வதால் விவசாயிகள் மாற்று பயிர் செய்வதால் ஆர்வம் காட்டுவதால் தக்காளி சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் சில வாரங்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றன்ரனர்.

    • விண்கலத்தில் 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.
    • குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர்.

    பீஜிங்:

    அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.

    கடந்த மே மாதம் 30-ந்தேதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர்.

    கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியகூறுகள் இல்லாததால் சீனா சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்த செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை உருவாக்கி இருந்தது.

    தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை அவர்கள் அறுவடை செய்துள்ளனர். இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.55,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது,

      வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 100. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.40, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.55,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
    • விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    தருமபுரி:

    தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த விலையில் தக்காளி விற்பனை ஆகி வந்துள்ளது. இருப்பினும், சராசரியாக கிலோ ரூ.15 என்ற நிலைக்கு குறையாத அளவில் விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது.

    இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தக்காளி விலையில் வேகமான சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை தக்காளியின் தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வந்தது.

    ஆனால், நடப்பு வாரத்தில் தக்காளியின் விலை சந்தையில் கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை என்ற நிலைக்கு கீழே சரிந்து விட்டது.

    விவசாயிகள் இடத்தில் தக்காளி கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் தக்காளி பயிரிட்டுள்ள தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் தக்காளிப் பழங்கள் சென்னை, மதுரை, திண்டுக்கல், கும்பகோணம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும், பெங்களூருவுக்கும் விற்பனைக்காக செல்கிறது.

    விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், தெரிந்த ஒரே தொழில் விவசாயம் தான் என்பதால் விவசாயிகள் நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விலை உயரும் என்ற நம்பிக்கையில் மீண்டும் சாகுபடிக்கு செல்கின்றனர்.

    தக்காளிக்கு மட்டுமன்றி இதர சில காய்கறி பயிர்களிலும் இதேபோன்ற விலைவீழ்ச்சி சிரமங்களை விவசாயிகள் அவ்வப்போது எதிர்கொள்கின்றனர்.

    இன்று உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.8 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    தக்காளி விலை கடந்த சில மாதங்களில் உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று அதனை கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60 வரை விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வு காரணமாக விவசாயிகள், தக்காளிகளை அதிகளவில் பயிரிடத் தொடங்கினர். இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்தது.

    உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யும் போது ரூ.10-க்கும் குறைவாக விலை கேட்கின்றனர்.

    இதனால் விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு நேற்று எடுத்துச் சென்ற போது மிகவும் குறைந்த விலையில் மட்டுமே விலை போனதால் மனவேதனை அடைந்தார். இதையடுத்து தக்காளியை விற்பனை செய்யாமல் காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுக்கு தீவனமாக போட்டு சென்றார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கும் தேவையான தக்காளியை எடுத்து சென்றனர்.

    • கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது.
    • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.18-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.25-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது. இதையடுத்து தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    பீன்ஸ்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.40, பீட்ரூட்-ரூ.20, அவரைக்காய்-ரூ.55, வெள்ளரிக்காய்-ரூ.20, உஜாலா கத்தரிக்காய்- ரூ.15, வரி கத்தரிக்காய்-ரூ.10, வெண்டைக்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.20, புடலங்காய்-ரூ.15, முட்டைகோஸ்-ரூ.8, கோவக்காய்-ரூ.8, பட்டை கொத்தவரங்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய் ரூ.40, பச்சை மிளகாய்- ரூ.30, இஞ்சி-ரூ.240, புது இஞ்சி- ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    • தக்காளி விலை அதிகரிப்பானது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
    • விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை வரலாறு காணாத அளவில் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் குடும்பப் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

    தக்காளி விலை அதிகரிப்பானது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்த வண்ணமே இருந்தது. காரணம் உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

    தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    • ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    திருப்பதி:

    தக்காளி வரத்து கடந்த மாதம் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் ரூ.200க்கு விற்பனையான தக்காளி தற்போது 3 ரூபாயாக குறைந்து உள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    விவசாயிகள் எதிர்பார்த்த அளவு தக்காளி விலை போகாததால் தக்காளி பறிக்கும் கூலி மற்றும் போக்குவரத்து செலவு கூட மிஞ்சவில்லை எனக்கூறி தக்காளியை சாலையோரங்களில் கொட்டி சென்றனர். ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    • தக்காளி விலை கிலோ ரூ.100-க்கும் மேல் விற்று உச்சம் தொட்டது.
    • தக்காளி விலை கிலோ ரூ.8 முதல் 10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தினந்தோரும் 10 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது . இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ.100-க்கும் மேல் விற்று உச்சம் தொட்டது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி , சோமனஹள்ளி, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, பேளார ஹள்ளி, எலங்காளப்பட்டி, கரகூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இதனால் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து இன்று மார்க்கெட்டில் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.8 முதல் 10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். மேலும் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.100 முதல் 150 -வரை விற்பனையாகி வருகிறது.  

    ×