என் மலர்
நீங்கள் தேடியது "தக்காளி"
- தக்காளி விலை வீழ்ச்சி கண்டுள்ளது
- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை
கரூர்,
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மார்க்கெட்டுக்கு தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. இதனால், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்தது. இதனால், குறுகிய கால பயிரான தக்காளியை, விவசாயிகள், அதிக அளவில் சாகுபடி செய்தனர். தற்போது, மாநிலம் முழுவதும் தக்காளி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.கரூர் மாவட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலுார் மற்றும் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தக்காளி விற்ப னைக்கு கொண்டுவரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.கடந்த பிப்ரவரி மாதம், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய் வரை விற்றது.வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது, கரூர், உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 14 ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு தக்காளி விலை குறைவால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியும், விவசாயிகள் கவலையும் அடைந்துள்ளனர்.
- உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
- ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்வதும் விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
உடுமலை :
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்கு காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக தக்காளி,சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்தநிலையில் தக்காளி சாகுபடி என்பது பெரும்பாலான காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் பெரும் விலை சரிவு ஏற்படுவதும்,விலை உயர்வு ஏற்படும் காலங்களில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
உடுமலை பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில ங்களிலும் சமீப காலங்களாக ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்வதும் விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.விலை சரிவால் ஏற்பட்ட வேதனையின் உச்சத்தில் விவசாயிகள் தக்காளியை சாலை ஓரம் வீசுவதும்,தக்காளி செடிகளுடன் டிராக்டர் விட்டு அழிப்பதும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது.அதேநிலை தற்போதும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலையே ஏற்பட்டு வருகிறது.உடுமலை சந்தையில் மொத்த விற்பனையில் தற்போது சுமார் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 40 முதல் ரூ 80 வரை விற்பனையாகிறது.அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ .3 முதல் 5 வரை விற்பனையாகும் நிலையே உள்ளது.இது பறிகூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குக்கூட கட்டுப்படி ஆகாத விலையாகவே உள்ளது.இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதே நிலை நீடித்தால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு மாற்றுத் தொழில் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.
- கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
அதன்படி நேற்று வெள்ளகோவில் வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கும், கத்தரிக்காய் ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், சின்ன வெங்காயம் ரூ.35-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20-க்கும் விற்கப்பட்–டது
இதேபோல் பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.60-க்கும், இஞ்சி ரூ.100-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், மேரக்காய் ரூ.40-க்கும், கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
- நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
- இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் வாங்கி செல்கி றார்கள்.
இந்த நிலையில் தற்போது நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.
உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-
கத்தரி ரூ.20 முதல் 36, தக்காளி ரூ.10 முதல் 14, வெண்டைக்காய் ரூ.40 முதல் 48, அவரை ரூ.40 முதல் 50, கொத்தவரை ரூ.36, முருங்கைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ.16, புடலங்காய் ரூ.32 முதல் 40, பாகற்காய் ரூ.32 முதல் 36, பீர்க்கன்காய் ரூ.40 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ.30, தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.130, கோவக்காய் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் சி.வெங்கா யம் ஒரு கிலோ ரூ.25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ.16 முதல் 20, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 100, கேரட் ரூ.45 முதல் 50, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் 24, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.
கொய்யா ரூ.40 முதல் 50, மலை வாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லித்தழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30 முதல் 36, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ. 30, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.
- பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது.
- 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார்.
பல்லடம் :
பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்கா ளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து வருகின்றனர்.
இதற்கிடையே பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபா ளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி இவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- பரம்பரை பரம்பரையாக விவசாயம்செய்து வருகிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.கார்த்திகை பட்டத்தில்விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.இந்த நிலையில்வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளி பயிரிட உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது. தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது. தக்காளி ஒரு கிலோ ரூ.22க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
- பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது.
- தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி அவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார். தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.கார்த்திகை பட்டத்தில் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளி பயிரிட உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது.
தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது. தக்காளி ஒரு கிலோ ரூ.22க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
- விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்ச ந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டை க்காய் ரூ.60, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 30, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
- பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.120, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- தக்காளி சாகுபடி ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.
- ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.
உடுமலை :
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்கு தென்னை,நெல்,வாழை,கரும்பு,மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் சமீப காலங்களாக காய்கறிகள் சாகுபடியில் உரம்,பூச்சி மருந்து செலவு,கூலி உள்ளி ட்ட வை பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆனால் போதிய விலை கிடைக்காத நிலையால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.குறிப்பாக தக்காளி சாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.அறுவடை செய்த தக்காளியை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டு போய் விற்று விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலையே உள்ளது.போக்குவரத்துச் செலவு,அறுவடைக் கூலி கூட கட்டுப்படியாகாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது.இதனால் பல விவசாயிகள் தக்காளி விளைந்து கிடக்கும் நிலத்தை மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாற்றும் நிலையும்,டிராக்டரை விட்டு உழவு ஓட்டி அழிக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது.தற்போது ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.
இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விலை முன்னறிவிப்புப் படி தக்காளி விலை உயரும் வாய்ப்பு உள்ளதா என்பது விவசாயிகளின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.அதேநேரத்தில் விலை உயர்ந்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.தமிழ்நா டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் செயல்படுகிறது.விலை முன்னறிவிப்புத் திட்டக்குழு ஓட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி,வெண்டை,கத்தரி போன்ற காய்கறிகளின் விலையில் சந்தை ஆய்வு களை மேற்கொ ண்டது.அதன்படி நடப்பு மே மாதத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ .24 முதல் ரூ .27 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை காலமாக இருப்ப தால் மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தக்காளி விவசாயி களிடையே ஆச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தக்காளியை அழித்து விட்டு மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் எண்ணத்திலிருந்த விவசாயிகளும் இந்த அறிவிப்பால் முடிவை தள்ளிப் போடுவது குறித்து யோசிக்கத் தொடங்கி யுள்ளனர்.ஆனாலும் தற்போது தக்காளி விலை உயர்வது குறித்த வேளா ண் பல்கலையின் அறிவிப்பு குறித்து நம்பிக்கையின்மையே விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது.தக்காளிக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.தக்காளியிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கான குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாகவே தக்காளி விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
- காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.140, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.
- 14 கிலோ கொண்ட பெட்டி 40 முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.கேரள மாநிலம், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தற்போது 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.இதனால், சந்தைக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தக்காளி பெட்டி வரத்து காணப்படுகிறது. நடப்பு சீசனில், படிப்படியாக அதிகரித்து 1.50 லட்சம் பெட்டிகள் வரை வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி, கடந்த மாதம் 300 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது 40 முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடிக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடும் வறட்சி, திடீர் மழை காரணமாக நடப்பாண்டு மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. பறிப்பு கூலி, வண்டி வாடகை, கமிஷன் என பெட்டிக்கு 30 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு கிலோ 2 முதல் 5 ரூபாய்க்கு விற்கிறது. இதனால் நடப்பு சீசன் தக்காளி சாகுபடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
- கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 30. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.50, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.130, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.