search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99898"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள "பாரத் ஜோடோ யாத்திரை" தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஐரோப்பாவுக்கு புறப்பட்டு சென்றார். வருகிற 17-ந்தேதி அவர் நாடு திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போட திரும்பி வருவார் என்றும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் அவர் பங்கேற்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை (14-ந்தேதி) நடைபெற உள்ளது. மேலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள "பாரத் ஜோடோ யாத்திரை" தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் கோவாவில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாயமாகி திரும்பிய விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

    இந்த பிரச்சினைகளுக்கிடையே ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியை எப்படி வளர்ப்பது என்றும் அவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

    கட்சியில் பிரச்சினைகள் இருக்கும் போது ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததை இதுவரை பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே விமர்சித்து வந்தன. ஆனால் தற்போது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் அவர் எதற்கும் கவலைப்படாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

    பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் கடந்த மே மாதம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இரவு விடுதியில் பொழுதை போக்கியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

    5 மாநில தேர்தலின் போது மற்ற கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலிக்கு சென்ற ராகுல்காந்தி கடந்த ஜனவரி மாதம் தான் நாடு திரும்பினார்.

    மேலும் கடந்த மே மாதம் மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி ஓட்டு போட்ட பிரச்சினை இருந்த நிலையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்-க்கு ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டார். இப்படி காங்கிரஸ் கட்சியில் முக்கிய விவகாரங்கள், பிரச்சினைகள் இருக்கும் போதெல்லாம் அவர் வெளிநாடு செல்வது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    • ராகுல்காந்தியிடம் அமலாக்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம்.
    • அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் முறைகேடு நடந்ததாக 2012-ம் ஆண்டு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடந்தப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து கடந்த 13- ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் அமலாக்கத் துறை முன்பு ராகுல்காந்தி ஆஜரானார்.

    சோனியா காந்தியின் உடல்நிலை காரணமாக ராகுல்காந்தி 4-வது நாள் விசாரணையை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் கடந்த 17-ந் தேதி நடைபெற இருந்த விசாரணை 20-ந் தேதி அதாவது நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து ராகுல்காந்தி 4-வது நாளாக நேற்று அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜரானார். காலை 11.05 மணிக்கு அமலாக்கத்துறை அலவலகத்துக்கு வந்த அவரிடம் மதியம் 3 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மதியம் 3.15 மணியளவில் மதிய உணவுக்காக புறப்பட்டு சென்ற அவர் 4.45 மணிக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜரானார். நள்ளிரவு 12.30 மணி வரை ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை நீடித்தது. நேற்று சுமார் 12 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ராகுலிடம் 4 நாட்களில் சுமார் 40 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்றும் (21-ந் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுகுகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மத்திய டெல்லி அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ராகுல்காந்தி இன்று 5-வது நாளாக ஆஜரானார்.

    காலை 11 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் வந்த அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவரிம் பல கேள்விகள் எழுப்பப்பட்டு பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

    ராகுல்காந்தியிடம் அமலாக்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி 23-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. உடல் நலக்கோளாறு காரணமாக அவர் நேற்றுதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராவாரா? அல்லது விசாரணை தேதியை தள்ளி வைக்க விலக்கு கேட்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமேதி தொகுதியில் தோல்வியடைந்தது தொடர்பாக ஆராய 2 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

    அமேதி தொகுதியில் 3 தடவை தொடர்ச்சியாக வென்று எம்.பி.யாக தேர்வான ராகுல் இந்த தடவை வயநாடு தொகுதிக்கு தாவியது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி போட்டியிட்டார். இந்த தடவை அவரது பிரசாரம் மிக தீவிரமாக இருந்தது. எனவே ராகுல் தோல்வி அடைந்து விடுமோ என்று கருதி வயநாடுக்கு சென்று விட்டதாக விமர்சனம் எழுந்தது.

    அதை உறுதிப்படுத்துவது போல அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார். அவரை ஸ்மிதிரி ராணி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.வயநாடு தொகுதியில் மட்டுமே அவ ரால் வெற்றி பெற முடிந்தது.



    அமேதி தொகுதியானது காங்கிரசின் கோட்டையாக திகழும் தொகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக நேரு குடும்பத்தினருக்கு இந்த தொகுதி மிகவும் கை கொடுப்பதாக இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை மக்கள் ராகுலை கைவிட்டது ஏன் என்பது புரியாமல் காங்கிரசார் தவித்து வருகிறார்கள்.

    ராகுலுக்கும் அமேதி மக்கள் தனக்கு வெற்றியை தராதது ஏன் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு விடை காண்பதற்காக அவர் 2 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜூபைர்கான், ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா இருவரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் அமேதி தொகுதிக்கு செல்ல இருக்கிறார்கள். ராகுல் மீது அதிருப்தி ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது பற்றி அவர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்.

    அந்த ஆய்வை அவர்கள் அறிக்கையாக தயாரித்து ராகுல்காந்தியிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ராகுல் தன்னை மாற்றிக் கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    ராகுல்காந்தி நேற்று ஒரே நாளில் மன்மோகன்சிங், சரத்பவார், குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசி இருப்பதால், தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அதுபற்றி ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே இடையில் வெளியேறிவிட்டார்.

    ஒரு வாரமாக கட்சியில் எந்த பணிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. மூத்த தலைவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இடையில் ஜவகர்லால் நேரு நினைவு நாள் நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்று அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டுக்கும் சென்ற அவர், அவருடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    தற்போது காங்கிரசுக்கு 52 எம்.பி.க்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் 55 எம்.பி.க்கள் தேவை. எனவே சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை (5 இடம்) காங்கிரசோடு இணைத்து விடலாம் என்ற திட்டம் உள்ளது. இதற்காக சரத்பவாரை சந்தித்து பேசி இருக்கலாம் என்று தெரிகிறது.

    பின்னர் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ராகுல்காந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.



    ஒருவாரமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் மவுனமாக இருந்து வந்த ராகுல்காந்தி நேற்று ஒரே நாளில் மன்மோகன்சிங், சரத்பவார், குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.

    இதன் மூலம் அவர் கட்சி பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கிறார். இதனால் அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. ராகுல்காந்தி பாராளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இது சம்பந்தமாக கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களை கொண்டுவர ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மாநில அளவில் பல தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு வசதியாக பல மாநிலங்களின் தலைவர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பிடிக்க முடியவில்லை.

    இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    ராகுல்காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருந்தார். நேரு குடும்பத்துக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்யலாம். நான் சாதாரண தொண்டனாக இருந்து கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறினார்.

    அதன்பிறகு ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்களும் ராகுல்காந்தியை சமரசம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட் கிழமையும் ராகுல்காந்தி யாரிடமும் பேசவில்லை. அவரை சமரசம் செய்ய சென்ற மூத்த தலைவர்களை அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில தலைவர்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநில காங்கிரஸ் ஆட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ராகுல்காந்தி அவர்களிடம் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் அக்கறை காட்டாத சில மூத்த தலைவர்கள் பற்றி புகார் தெரிவித்ததுடன் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். தனது ராஜினாமாவை திரும்பபெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.



    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று டெல்லி துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜிவாலா ஆகியோரும் சென்று ராகுல் காந்தியை சந்தித்து சமரசம் செய்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அவர்களிடம் ராகுல் காந்தி 3 மாநிலங்களில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறினார். அத்துடன் ராஜினாமா முடிவை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது. இது கட்சிக்கு முக்கியமான காலகட்டம். ராகுல்காந்தி ராஜினாமா செய்வது காங்கிரஸ் கட்சிக்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அவர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பது நல்லது என்று கருத்து கூறினார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமா முடிவை கைவிடுமாறு கூறினார்.

    ஆனாலும் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். அவரது மனநிலை மாறவில்லை. இன்று 5-வது நாளாக ராகுல் காந்தியின் பிடிவாதம் தொடருகிறது.

    ராகுல் காந்தியை சமரசம் செய்வதற்காக ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு மாதிரியான யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். ராகுல்காந்தி தலைவர் பதவியிலேயே நீடிக்கட்டும். மேலும் செயல் தலைவர் பதவியை உருவாக்கி செயல் தலைவர்களாக சிலரை நியமிக்கலாம். தலைவர் பொறுப்பை ராகுல் கவனித்தால் கட்சியின் மற்ற நடவடிக்கைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக வேண்டாம் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால் அதற்கும் ராகுல் காந்தி உறுதியான பதிலை சொல்லவில்லை.

    ராகுல்காந்தியை நேற்று சந்தித்து பேசிய மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் தொடர்ந்து 3 மாதங்கள் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். சிலர் புதிது புதிதாகவும் கருத்து சொல்லி வருகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி விரைவில் கேரள மாநிலம் வயநாடு செல்ல இருக்கிறார். அவர் வயநாடு செல்வதை பொறுத்து மீண்டும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் காரிய கமிட்டி கூடுமா என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக ராகுல்காந்தியை சமரசம் செய்வதிலேயே மூத்த தலைவர்கள் பலர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் சமரசம் ஆகாமல் தொடர்ந்து பிடிவாதமாகவே இருக்கிறார்.

    இதற்கிடையே பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் அவர் அந்த பதவியில் நீடித்த படியே கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மகன்களுக்கு டிக்கெட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய நேற்று டெல்லியில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங், பிரியங்கா, மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த முடிவை காரிய கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை.

    தோல்வி குறித்து ஆராயும் போது ராகுல் காந்தி கட்சியின் கீழ்மட்ட தலைவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை சரியாக பிரசாரம் மூலமாக சேர்க்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

    மேலும் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கீழ்மட்ட தலைவர்கள் பிரசாரயுக்திகளை கையாளவில்லை. நான் மேற்கொண்ட பிரசார வி‌ஷயங்களை கூட வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட பிரசாரம் சரியில்லை என்று அவர் குறை கூறினார்.

    மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், ப.சிதம்பரம் போன்றவர்கள் தனது மகன்களுக்கு டிக்கெட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

    நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை ஏற்க மறுத்தார்கள். விட்டுக் கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சியை நடத்துவது? என்று ஆதங்கத்துடன் ராகுல் பேசினார்.

    கட்சிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக இருக்கட்டும். நாங்கள் மட்டும் (இந்திரா காந்தி குடும்பம்)தான் தொடர்ந்து தலைவர்களாக இருக்க வேண்டுமா? என்று உணர்ச்சிவசமாக கூறினார்.


    அப்போது அவரை ஏ.கே. அந்தோணி, அகமது பட்டேல், ப.சிதம்பரம் ஆகியோர் அமைதிப்படுத்தினார்கள்.

    பிரியங்கா கூறும்போது, ராகுல் காந்தி தலைவராக இருக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா நினைக்கிறது. அவர் ராஜினாமா செய்தால் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஈடேறி விட்டதாக ஆகி விடும் என்றார்.

    சிலர் கூறும்போது, நீங்கள் ராஜினாமா செய்தால் அடுத்து கட்சிக்கு யார் தலைவர்? என்பதை சொல்ல முடியுமா? என்று ராகுல் காந்தியிடம் கேட்டனர்.

    மேலும் சிலர் கூறும் போது, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சை கடுமையாக தாக்கி பேசுவதால் நீங்கள் காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

    நீங்கள் ராஜினாமா செய்வதன் மூலம் அவர்கள் விருப்பம் நிறைவேறி விடும். இதற்கு இடமளிக்க கூடாது என்று சொன்னார்கள்.

    பங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி போன்றவையால் தான் மோடியின் செல்வாக்கு திடீரென உயர்ந்து அவர் வெற்றி பெற வாய்ப்பாக ஆகி விட்டது என்று பலரும் கூறினார்கள். பலர் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

    அப்போது ஏ.கே. அந்தோணி குறுக்கிட்டு முறைகேடுதான் காரணம் என்று நாம் பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. கட்சியை அடிப்படை ரீதியாக நாம் இன்னும் வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.

    அப்போது ராகுல் காந்தி கட்சியின் எல்லா மட்டத்திலும் ஆய்வு செய்து முழுமையாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கட்சி பணிகளில் மாற்று முறையை கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. அனைவரும் ஒத்துழைத்தால் தான் இதை செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் பாரதிய ஜனதாவை வளர்க்கும் பணியை கடுமையாக செய்கிறார்கள். அதே போன்று காங்கிரசிலும் பணிகள் இருக்க வேண்டும் என்று காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

    மதுரைக்கு இன்று பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வர இருப்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    மதுரை:

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். கொச்சியில் தனது பிரசாரத்தை முடிக்கும் அவர் விமானம் மூலம் இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலை தாஜ் ஓட்டலில் இரவில் தங்கும் அவர் நாளை(சனிக்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்கிறார்.

    அங்கு பகல் 11 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரவீந்திரநாத்குமார் (தேனி), ராஜ்சத்யன் (மதுரை), திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இதனை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் வரும் மோடி, பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கிருஷ்ணகிரி, சேலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு விமானம் மூலம் மதுரைக்கு இன்று மாலை 3.30 மணிக்கு வருகிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி செல்லும் அவர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.



    பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து மண்டேலா நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் மதுரையில் இருப்பதாலும், சித்திரை திருவிழா நடந்து வருவதாலும் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி தங்கும் பசுமலை தாஜ் ஓட்டல், அவர் விமான நிலையம் செல்லும் பாதை முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளனர்.

    அதே போல் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் மண்டேலா நகர் பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மோடி, ராகுல் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். #LokSabhaElections2019 #RahulGandhi
    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அவர் வருகிற 13-ந்தேதி காலை ராமநாதபுரத்திலும், அன்றையதினம் மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை தர உள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார்.



    இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி(நாளை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி, மதியம் 1 மணிக்கு சேலம், மதியம் 3 மணிக்கு தேனி, மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.6 ஆயிரம் வருமான உறுதி திட்டம் ‘கஜா’ புயலை விட வேகமாக பரவி இருக்கிறது.

    நான் நடிகர் ரஜினிகாந்த் ரசிகன். நான் தேர்தலில் அவருடைய ‘அண்ணாமலை’ சைக்கிளை வைத்து வெற்றி பெற்றிருக்கிறேன். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு அறிவிப்பை ரஜினிகாந்த் வரவேற்றிருப்பது, அவர் ஒரு சார்பாக இருக்கிறாரோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் நதிநீர் இணைப்புத்திட்டம் சாத்தியமில்லை. எதையாவது கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் வாக்குகளை பெற முடியாதா? என்று பா.ஜ.க. எண்ணுகிறது. இதில் ரஜினிகாந்த் பலிகடா ஆகிறார் என்பது தான் வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘தேசம் காக்கும் கை’ என்ற தலைப்பில் காங்கிரஸ் பிரசார பாடலை கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். இதனை கவிஞர் ஜோதி ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜி.கே.தாஸ், தணிக்காச்சலம், செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, எஸ்.சி.பிரிவு மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #RahulGandhi

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 13-ந் தேதி ராகுல்காந்தி மீண்டும் கர்நாடகம் வருகை தர உள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். #RahulGandhi #LokSabhaElections2019
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையடுத்து, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் பெங்களூரு, கலபுரகி, ஹாவேரியில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி இருந்தார்.

    இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 13-ந் தேதி ராகுல்காந்தி மீண்டும் கர்நாடகம் வருகை தருகிறார். அன்றைய தினம் ஒரே நாளில் சித்ரதுர்கா, கோலார், மைசூரு ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேச உள்ளதாகவும், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.



    முதலில் சித்ரதுர்காவுக்கு வருகை தரும் ராகுல்காந்தி, பின்னர் கோலாருக்கு செல்ல உள்ளார். அதன்பிறகு, தான் மைசூரு மாவட்டத்திற்கு அவர் செல்ல இருக்கிறார். மைசூரு மாவட்டம் கிருஷ்ணராஜநகரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச இருக்கிறார். கிருஷ்ணராஜநகர் மைசூரு மாவட்டத்தில் இருந்தாலும், அந்த பகுதி மண்டியா பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது.

    இதனால் மண்டியா தொகுதியின் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் நிகில் குமாரசாமியை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன், முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். #RahulGandhi #LokSabhaElections2019
    மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
    விழுப்புரம்:

    விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகமா?, பாசிசமா? என்ற கேள்விக்கு விடைகாணும் தேர்தல் இந்த தேர்தல். ஜனநாயகத்தை பாதுகாக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றைத்தன்மையை திணிப்பதற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் கேடு விளைவித்தது மத்திய அரசு.

    மேலும் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்தின் தஞ்சை தரணியை பஞ்சபிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டத்தை வகுத்து கொடுத்தது.

    இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்களுக்காக நிலங்களை அபகரித்து வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, விவசாயிகளை நசுக்குகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வணிகர்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது. அதனை விவசாயிகளுக்கு பெற்றுத்தர ஊழல் நிறைந்த அரசு தயாராக இல்லை. மத்திய அரசின் வஞ்சகத்தில் இருந்து தமிழகத்தை காக்க முடியாத அரசு உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்களுக்காக நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    பருப்பு கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல், உள்ளாட்சி துறையில் டெண்டர் விடுவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், குட்கா ஊழல் இப்படி எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

    மருத்துவமனைகளுக்கு சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோயுடையவரின் ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை நடந்துள்ளது. தற்போது ஓசூர் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும், கல்விக்கடன், விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Vaiko

    ராகுல் காந்தி சின்னப் பையன், மனதில் என்ன நினைக்கிறாரோ அதைப் பேசுகிறாரே தவிர வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள்” என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #RahulGandhi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா நகரில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மம்தா பானர்ஜி மாநிலத்தை முன்னேற்றாமல், வளர்ச்சிப்பாதைக்கு செல்லவிடாமல் வைத்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.



    இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், “ராகுல் காந்தி சின்னப் பையன். ராகுல் மனதில் என்ன நினைக்கிறாரோ அதைப் பேசுகிறார். இதைத் தவிர வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். #MamataBanerjee #RahulGandhi 
    ராகுல்காந்தி அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய உறுதித்திட்டம் வரவேற்கத்தக்கது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MKStalin #RahulGandhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதித்திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திட்டத்தை தி.மு.க. சார்பில் மனமார வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஏழைகளின் வாழ்வாதாரம் தான் முதலில் பறிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. சட்டம் போன்றவற்றால் பல லட்சக்கணக்கான சிறு தொழில்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன. வேலை வாய்ப்பின்மை 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வமான ஆய்வு முடிவுகளே வெளிப்படுத்தின.

    இந்நிலையில் ராகுல்காந்தியின், குறைந்தபட்ச ஊதிய உறுதித்திட்டம் மூலம் 25 கோடி ஏழைகள் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 72,000 ரூபாய் பெறுவார்கள் என்ற அறிவிப்பு பா.ஜ.க.வின் பாசிச ஆட்சியில் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற ஏழைகளுக்கு ஏற்ற வரப்பிரசாதம் மட்டுமல்ல, ஒரு அட்சய பாத்திரமாக கண்ணுக்குத் தெரிகிறது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. அதை ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் திருமண நிதியுதவி உதவித்திட்டம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் தமிழகம் கண்டிருக்கிறது.



    சமூக நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஒரு நாட்டிற்குத் தேவையான முதுகெலும்பு என்று நிரூபித்துக் காட்டியவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி. அதுபோல் இப்போது ராகுல்காந்தியால் அறிவிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஏழைகளின் முகத்தில் 5 வருடம் கழித்து இப்போதுதான் சிரிப்பைக் காண முடிகிறது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பா.ஜ.க.வினர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஏன் நிதி ஆயோக்கின் துணை தலைவராக இருக்கும் ராஜீவ்குமார் பா.ஜ.க. பிரசாரகராகவே மாறி செயல்படுத்த முடியாத திட்டம் என்று சொல்கிறார். இது எரிச்சலின் வெளிப்பாடே தவிர துளியும் உண்மை அல்ல. ஏழைகளுக்கான இந்த குறைந்தபட்ச ஊதிய உறுதித்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை திரட்டி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டிட முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முதன்முறையாக இந்தியாவில் கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்திற்கு தி.மு.க. இதயபூர்வமான ஆதரவினைத் தெரிவித்து, ஜூன் 3-ந் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் உருவாகும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.  #LokSabhaElections2019 #MKStalin #RahulGandhi
    ×