search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvsIND"

    • இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு போதும் உங்களால் மனநிறைவு கொள்ள முடியாது.
    • சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

    கொழும்பு:

    இந்திய அணியை விடவும் இலங்கை அணி சிறந்த கிரிக்கெட் விளையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியால் கவலைப்பட தேவையில்லை என்று கூறிய ரோஹித் சர்மா, ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கான திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

    தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிரமத்தை சந்தித்தார்கள் என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் தங்களது ஆட்டத்திட்டங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது எப்போதுமே மன நிறைவு அடையாது. அதிலும் கேப்டனாக அதற்கு வாய்ப்பே இல்லை.

    சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும். எங்களை விட இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் சூழலுக்கு ஏற்றவாறு காம்பினேஷனை பயன்படுத்தினோம். அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும், வாய்ப்பு மறுக்கப்படும் இருந்தது. இருந்தாலும் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.

    இந்த தொடரின் மூலம் சில விசயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது. இதுபோன்ற தோல்விகள் அவ்வப்போது வரும் ஆனால் அதிலிருந்து நாம் எப்படி கம்பேக் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

    இவ்வாறு ரோகித் கூறினார். 

    • காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் இன்று 2-வது நாளாக வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்க உள்ள நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா, காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவரது காயத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை சரியாக தெரியவில்லை. இவருக்கு மாற்று வீரரை விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை. சதீர சமரவிக்ரம மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் அணியில் இருந்து வெளியேறினர். அதற்கு பதிலாக சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்றவர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது.

    இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணி விவரம்:-

    சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வணிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மகேஷ் தீக்ஷனா, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரனா, நுவான் துஷாரா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ.

    ×