என் மலர்
நீங்கள் தேடியது "small onion"
- மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள்.
வீரபாண்டி:
திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10க்கு விற்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள். தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் ரூ.50 வரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. உரங்களின் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 60 க்கு மேல் விற்றால் ஒரு அளவு லாபம் பெற முடியும். மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
- காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
காங்கயம்:
காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வாரம் கூடிய சந்தையில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், முதல் தரமான தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
- சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை.
- பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
குண்டடம், நவ.23-
குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.
இது குறித்து மேடுக்கடையை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-தற்போது இப்பகுதி விவசாயிகள், சின்ன வெங்காய நாற்றுகக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய ஒரு ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது
இந்த பயிர்கள் 40 முதல் 45 நாகளில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளதாலும் சில நாட்களாவே பரவலாக மழை பொழிந்துள்ளதால் தேனீ, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொங்கலூர், பூளவாடி, உடுமலை, உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.
இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கடந்தவருடம் ஒரு பாத்தி சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானதால் நல்ல லாபம் ஈட்டினர். இதனால் இந்தவருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
- பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும், தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம்:
காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில் திங்கட்கிழமை கூடிய சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும், தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காய செடிகள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
- முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.
- நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.
தாராபுரம் :
திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், குண்டடம், பொங்கலூா், குடிமங்கலம், மூலனூா், வெள்ளக்கோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.
இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்வதற்கு புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அறிமுகம் செய்து அரசு வாடகைக்கு விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இது குறித்து சின்னக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- 60 நாள் பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ஆள்கூலி, மருந்து, உரம், விதை, அறுவை கூலி என மொத்தம் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும்.
ஒரு ஏக்கருக்கு 7 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.
ஒரு கிலோ அசல் விலை ரூ.25 ஆகிறது. விவசாயிகளிடமிருந்து ரூ.45க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். தற்போது சின்ன வெங்காயம் விளைச்சல் இல்லை. மழையால் சின்ன வெங்காய உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. போதிய இருப்பு வெங்காயமும் இல்லை.
வெளி மாவட்ட, மாநில சின்ன வெங்காயம் வரத்தும் குறைவு. அதே சமயம் தேவை குறையவில்லை. அதனால் தற்போது ரூ.76 முதல் ரூ.80 வரை விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனா். இதனால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.
விதை சின்ன வெங்காயம் நடவு செய்ய மாா்கழி மாத பட்டம் சிறப்பானது. அதனால் இப்பட்டத்தில் நடவு செய்யவே விவசாயிகள் விரும்புவாா்கள். நடப்பாண்டில் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை நிலவுகிறது. அதனால் ஏற்றுமதியை எதிா்நோக்கியே அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் தண்ணீா் பிரச்சினை ஏதும் இல்லை. பல்லடம், பொங்கலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போதுதான் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அறுவடை சீசன் இல்லை.மாா்ச் மாதம் தான் இப்பகுதிகளில் அறுவடை தொடங்கும். தற்சமயம் தா்மபுரி, நாமக்கல், சேலம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் சின்ன வெங்காயம் கோவை, திருப்பூா் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சின்ன வெங்காயம் சாகுபடியை பொறுத்தவரையில் அறுவடையின்போது அதிக ஆள்கள் தேவைப்படுவா். அவா்களுக்கு தினக்கூலி ரூ.600 முதல் ரூ.800 வரை ஆகிறது. மேலும், விவசாய வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.
ஐரோப்பா, அமெரிக்கா,ஜொ்மனி போன்ற நாடுகளில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு நவீன தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆள்கள் தேவை அதிகம் இருக்காது. இன்றைய நிலையில் ஆள்கள் கூலி மற்றும் ஆள்கள் பற்றாக்குறையால்தான் விவசாயிகள் பலா் வேளாண்மை சாகுபடியில் ஈடுபடுவதில்லை.
புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அரசு அறிமுகம் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட்டால் வேளாண்மை சாகுபடி அதிகரிக்கும் என்றாா்.
- விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ. 40 ,உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20 ,பீன்ஸ் ரூ.40 ,கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60 ,பச்சைமிளகாய் ரூ.40 ,வெண்டைக்காய் ரூ.40 ,இஞ்சி ரூ.60 ,அவரைக்காய் ரூ.60 ,நேரோ காய் ரூ. 20, கோவக்காய் ரூ.30 ,முள்ளங்கி ரூ. 40 ,சுரக்காய் ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.
- அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.
குண்டடம்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்து வருகிறோம்.
மேலும் இந்த பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது.
சின்னவெங்காயத்தை 100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள சின்ன வெங்காய பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் அதிக லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர்.
- நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிமங்கலம்:
உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்கறி பயிர்களில் சின்னவெங்காயம் பிரதானமாக உள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் நாற்று நடவு முறை மற்றும் நேரடியாக காய் நடவு முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதிகளில் பிரதான சாகுபடியாக சின்ன வெங்காயம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நோய்த்தாக்குதல், விலை சரிவு, சாகுபடி செலவினம் என பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
இப்பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.சாகுபடியில் விதைப்பு பருவத்தில் மழை குறைந்தது, தொடர்ந்து பெய்த அதிக பனிப்பொழிவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களினாலும், களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்கள் குறித்து தொழில் நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில் நடப்பாண்டு 4 டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.
ஒரு சில பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஒட்டுமொத்த வெங்காய பயிரும் கருதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்களில் 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
சின்ன வெங்காயம் சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற இடு பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் நடப்பாண்டு கடுமையான பனிப்பொழிவு, வெயில், மழையில்லாதது என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மகசூல் குறைந்துள்ளதோடு விலையும் குறைவாக உள்ளது. பல இடங்களில் வெங்காயம் பயிர் கருகி வீணாகியுள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை பகுதிகளில் ஆண்டு தோறும் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. அதே போல் தக்காளி, புடலங்காய், அவரைக்காய், பாகற்காய் என பந்தல் சாகுபடியிலும், மஞ்சள் தேமல் நோய் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்புகள் ஏற்படுவதோடு விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.
மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.
குடிமங்கலம் :
உடுமலை பகுதியில் சின்னவெங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து ள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பா சனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.நாற்று நடவு முறையை பின்பற்றுகின்றனர். பிற காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது. எனவே அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த தை பட்டத்திலும், பின்பட்டத்தி லும் நடவு செய்யப்பட்ட சின்னவெ ங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இந்தாண்டு அறுவடை செலவும் பல மடங்கு அதிக ரித்து விட்டது.நடப்பு சீசனில் போதிய மழை இல்லாததால் பயிரின் வளர்ச்சி பாதித்தது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், கிலோ 20 - 30 ரூபாய்க்கு நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.எனவே அறுவடை சீசனில் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
- வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும்.
உடுமலை :
தற்போது வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. குளிர்ந்த காற்று, அளவான வெப்பநிலை காணப்படுவதால் இந்த சீசனில் வெங்காயம் ஆரோக்கியமாக வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை எதிர்பார்த்து விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்துவிலை 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஓராண்டு பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி போன்றவை இந்த சீசனில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் வருவாய் ஈட்டவும், முதன்மை பயிரை பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் இருப்பதாலும் விவசாயிகள் அதை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை இருக்காது. அந்த சீசனில் அதிக விலை கிடைக்கும்.
இந்த ஆண்டு மழை அதிகம் பொழிந்ததால் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான நீர் வளம் உள்ளது. இந்த சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இது சின்ன வெங்காய சாகுபடிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றனர்.
- உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
- பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை:
சமீப காலமாக காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் காய்கறி உற்பத்தி அதிகளவில் செய்யப்பட்டாலும் மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக காய்கறி மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் காய்கறி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.
நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டை, புடலை மற்றும் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக கிலோ 50 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று கிடுகிடுவென விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உழவர் சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதுபோல இஞ்சி கிலோ 220 ரூபாய்க்கு உழவர் சந்தைகளில் விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் 260 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சமீப காலமாக கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய் இன்று திடீரென விலை எகிறியது.
உழவர் சந்தையில் 130 ரூபாய்க்கு பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 160 ரூபாய் வரை விற்பனையானது. பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர மற்ற காய்கறிகள் உழவர் சந்தைகளில் இன்று விற்பனை செய்யப்பட்ட விலை விவரம் வருமாறு:-
உருளைக்கிழங்கு-ரூ.50, கேரட்-ரூ. 70, முட்டைகோஸ்-ரூ.28, பீட்ரூட்-ரூ.40, சவ் சவ்-ரூ.24, முருங்கை பீன்ஸ்-ரூ.110, பட்டர் பீன்ஸ்-ரூ.110, சோயா பீன்ஸ்-ரூ.110, பச்சை பட்டாணி-ரூ.170, நூல்கோல்-ரூ.70, டர்ணிப்-ரூ.60, குடை மிளகாய்-ரூ.70, காளிபிளவர்-ரூ.35, வெள்ளைபூண்டு-ரூ.200,
கத்தரிக்காய்-ரூ.42, வெண்டைக்காய்-ரூ.26, புடலை-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.60, சுரைக்காய்-ரூ.24, பெரிய வெங்காயம்-ரூ.25, பூசணி-ரூ.18, சர்க்கரை பூசணி-ரூ.24, அவரை-ரூ.90, சிறிய பாகற்காய்-ரூ.140, பெரிய பாகற்காய்-ரூ.60, கொத்தவரை-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.42, புதினா-ரூ.40, கொத்தமல்லி-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.25, மொச்சைக்காய்-ரூ.55, முள்ளங்கி-ரூ.24 ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களில் விற்கப்பட்ட விலையை ஒப்பிடுகையில் ஒவ்வொரு காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை விலை அதிகரித்துள்ளது.
உழவர் சந்தைகளில் இந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட்டாலும் காய்கறி மார்க்கெட்டுகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க உழவர் சந்தைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் மதுரை பீ.பி.குளம், பழங்காநத்தம், அண்ணாநகர் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.