என் மலர்
நீங்கள் தேடியது "Spoken word"
- வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
- பெற்றோரை போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் அடுத்த சின்ன பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பூக் கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 25) இவரும், ஏழரைப்பட்டி பகு தியைச் சேர்ந்த திவ்யா (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கீர்த்தி வாசனும், திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று சூளகிரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு கேட்டு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
இது சம்பந்தமாக இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
- உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர்.
- பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர்:
பண்ருட்டி அருகேயுள்ள சேமக்கோட்டையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதனை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர். இருந்த போதும், சேமக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை.
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சேமக்கோட்டையில் விரைவில் பயணியர் நிழற்குடை கட்டித் தரபடுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.