search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan Govt"

    • இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம்.
    • வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    கொழும்பு:

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது எனவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழையாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை துறைமுகம், போக்குவரத்துத்துறை மந்திரி பிமல் ரத்னநாயகா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்தியா தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

    வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மன்னார், தலைமன்னாரில் வேறு எந்த தொழிற்சாலையும் இல்லை. மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுத்தால் அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என தெரிவித்தார்.

    எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. #FisherMen #TNFisherMen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 28-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர்.

    மறுநாள் அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 2 விசைப் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.



    அதே நாளில் எல்லை தாண்டி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்கள் வந்த படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட 17 தமிழக மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜுட்சன் முன்பு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 தமிழக மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து 17 மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3 படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 23-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  #FisherMen #TNFisherMen
    ×