search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stabs"

    • கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
    • அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததால் ஆண் நண்பர் மீது ஆத்திரம்.

    காதலன் காதலியுடன் செல்லும்போது எதேச்சையாக மற்ற பெண்களை பார்ப்பது உண்டு. சிலர் வேண்டுமென்றே பார்ப்பதும் உண்டு. அந்த நேரத்தில் காதலி காதலனை பார்க்கும் ஒரு முறைப்பை நாம் சினிமா படங்களில் பார்த்திருப்போம். சில சமயங்களில் இதுபோன்ற சம்பவத்தால் அடிதடியும் நடப்பது உண்டு.

    இப்படி ஆண் நண்பர் ஒருவர் மற்ற பெண்களை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

    அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். ஆண் நண்பர் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு நெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) ஆண் நண்பர் வீட்டில் வாங்கி வைத்துள்ள்ளார்.

    மற்ற பெண்களை ஆண் நண்பர் பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து ஆண் நண்பரின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    காயம் அடைந்த அந்த ஆண் நண்பர் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்று, ஆண் நண்பரை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்துள்ளனர்.

    போலீசார் விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், ஆண் நண்பர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

    • போதை தலைக்கேறிய நிலையில் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார்.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பழனியப்பா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலக்காடு ரோட்ைட சேர்ந்த ஸ்ரீரேகா (24) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீரேகா கணவரை பிரிந்து மகனுடன் பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் மனைவியின் இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீரேகாவின் தாயார் தீபா ராணி தடுக்க முயன்றார். அவரையும் விக்னேஷ் கத்தியால் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் தாய், மகள் ஆகியோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×