என் மலர்
நீங்கள் தேடியது "stomach"
- கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப்பு பீடா வகையான பான் என்பது வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய பண்டம் ஆகும். சமீப காலங்களில் தென்னிந்தியாவிலும் இந்த பான் வகைகள் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன. ஐஸ் பான் முதல் ஃபயர் பான் வரை பான் வகைகள் உருவாகி இளைஞர்களின் விருப்பத்தை தூண்டியுள்ளது.

இதில் புகையுடன் கூடிய திரவ நைட்ரஜன் பான் வகை உண்ணும்போது திரில் ஆன அனுபவத்தை தருவதால் சிறுவர்கள் அதனை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் அதுவே ஒரு சிறுமிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. பெங்களூருவில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் பான் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருதுவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வயிற்றில் துளை உருவாகியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இந்த துளை உருவாகுதலுக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ் (perforation peritonitis) என்பது மருத்துவப் பெயர் ஆகும். வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பின் சிறுமி உடல் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் உணவில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவது கடுமையான விளைவுகளைத் ஏற்படுத்தும். திரவ நைட்ரஜனில் ஆவியாகும் இரசாயனமே இதற்கு காரணம் ஆகும். இந்த நீராவிகளை உள்ளிழுப்பது சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

- வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது.
- பெரிய அளவிலான துண்டு அந்த பெண்ணின் குடலில் சிக்கி இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அந்த பெண்ணின் வயிற்றில் டவலை வைத்து தைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
மருத்துவர்களின் அலட்சியப் போக்கை அறியாமல் பல மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் சென்று சுமார் 3 மாதங்களாக அந்த பெண் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வலி குறையவில்லை. இறுதியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்த பெண்ணின் வயிற்றில் 15x10 செமீ துண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த டவலை அகற்றினர்.
வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது. இது அவளது தாய்ப்பாலின் உற்பத்தியை கணிசமாகக் குறைத்துள்ளது. இதன் விளைவாக பிறந்த குழந்தைக்கு வெளியில் இருந்து பால் கொடுக்க வேண்டியிருந்தது.
இருப்பினும், சிஎம்எச்ஓ (Chief Medical Health Officer) அனில் ஜூடியா, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார் மற்றும் அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக, குடும்ப உறுப்பினர் மன்மோகன் கூறுகையில், அவர் மூன்று மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். ஆனால் வயிற்று வலிக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கூச்சமான் அரசு மருத்துவமனையிலும், மக்ரானாவில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் அவர் சிகிச்சை பெற்றார்.
அஜ்மீரில் கூட மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து, அவரது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் மருத்துவர்களின் அலட்சியம் தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷ் சோனி கூறுகையில், சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றுக்குள் ஏதோ இருப்பது தெரியவந்தது, அறுவை சிகிச்சையை முடிவு செய்ய மருத்துவர்களைத் தூண்டியது. அறுவை சிகிச்சையின்போது, ஒரு துண்டு கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரிய அளவிலான துண்டு அந்த பெண்ணின் குடலில் சிக்கி இருந்தது. வலியைத் தாங்கிய 3 மாதங்களில், அந்தப் பெண் நிவாரணத்திற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டுள்ளார். இது அவரது உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதித்துள்ளது" என்றார்.
அந்த பெண் நவம்பர் 15-ந்தேதி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 17-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. சுமார் எட்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அந்த பெண் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
- குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது.
- நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.
பெருகி வரும் வேலை வாழ்க்கையும் அருகி வரும் தனிப்பட்ட வாழ்க்கையும் இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.
ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் அபாயங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த வாழ்க்கை முறை இளமையையும் உடல்நலனையும் உறிஞ்சிவதாக உள்ளது.
இளைஞர்கள் உட்பட அனைவரின் வேலையும் நாள் முழுவதும் நாற்காலிகளுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. இது மனம் மற்றும் உடல் ரீதியான சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒன்றுதான் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள்.
நாள் முழுவதும் சேரில் உட்கார்ந்தே இருப்பது, வயிற்று உறுப்புகளை அழுத்துகிறது. இதனால் வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் தாமதமான குடல் இயக்கங்கள் ஏற்படுகின்றன.

உட்கார்ந்திருக்கும் தொடர் பழக்கம் குடலுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது மற்றும் செரிமான உறுப்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.
சீரில்லாத உட்காரும் முறை, உறுப்பு சீரமைப்பை சீர்குலைக்கிறது. செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் வாயு குவிவதற்கு வழிவகுக்கிறது.
கூடுதலாக, கட்டுப்படுத்தப்பட்ட உதரவிதான [diaphragm] இயக்கம் செரிமானத்தை எதிர்மறையாக பாதிக்கும். இந்த வாழ்க்கை முறை மலச்சிக்கல் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற பிரச்சினைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது.
நீடித்த அசைவற்ற தன்மை குடல் பாக்டீரியா சமநிலையையும் பாதிக்கிறது. இது செரிமான செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது. இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் செயல்திறனைக் மட்டுப்படுத்துகிறது. இது உணவில் இருந்து ஊட்டச்சத்து பெறுதல் மற்றும் குடல் செயல்திறனைத் தடுக்கிறது.
குடல் பாக்டீரியா சமநிலையற்றதாக இருக்கும்போது, செரிமானம் மெதுவாகிறது, கழிவுகளை அகற்றுவது கடினமாகிறது. இரத்த ஓட்டம் குறைவதோடு வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால் மலச்சிக்கல் மோசமடைகிறது. சர்க்கரை உணவுகள், மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பிற காரணிகள் குடல் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கின்றன.
குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம், ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன்கள், மன நல்வாழ்வு மற்றும் எடை ஒழுங்கை பாதிக்கிறது. ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பது, வீக்கத்தைக் குறைப்பது, மற்றும் நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.
குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, சீரான உட்காரும் முறையை பயிற்சி செய்யுங்கள், நீரேற்றமாக இருங்கள், மேலும் வெளியின்போது இடைவேளை எடுத்து எடுத்து நடக்க வேண்டும். உங்கள் உணவில் நார்ச்சத்து, புரோபயாடிக்குகள் மற்றும் புளித்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அதே நேரத்தில் சரியான தூக்கம், வழக்கமான, மிதமான உடற்பயிற்சியும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
- புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
- எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.
புதுச்சேரி:
புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த பொது மருத்துவர் டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் மருத்துவ குழுவினர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வாலிபரின் வயிற்று பகுதியில் சிறிய இரும்பு துண்டு இருப்பதும் அதன் காரணமாக அவர் வயிற்று வலியால் அவதிப்படுவதை உறுதி செய்தனர்.
உடனடியாக எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர் ரவீந்திர பாரதி, கூறியதாவது:-
வாலிபர் பல்வலிக்கு சிகிச்சைக்காக சென்ற–போது இந்த இரும்பு துண்டை விழுங்கியுள்ளார்.
அந்த இரும்பு துண்டு உணவுடன் கலந்து மிதந்ததால், அதனை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சி.ஆர்ம் என்று சொல்லக்கூடிய தொடர் எக்ஸ்ரே கருவி மூலம் நிதானமாக 3 மணிநேர முயற்சிக்கு பின் இரும்பு துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. வாலிபர் வீடு திரும்பினார்.
இவ்வாறு டாக்டர் ரவீந்திர பாரதி கூறினார்.
சிக்கலான இந்த சிகிச்சையை மயக்க மருந்து இல்லாமல் எண்டோஸ் கோப்பி மூலம் மேற்கொண்ட டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் குழுவினரை பிம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல், கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.