என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Succession"

    • அரசாணை 152 ஐ திரும்ப பெற வேண்டும்.
    • அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலக வாயில் முன்பு மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள், ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாநில பொருளாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், சி மற்றும் டி பிரிவு உழியர்களுக்கான அரசு பணிகளை உருவாக்கவும் பதவி உயர்வு மற்றும் மாநகராட்சி நகராட்சி அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 28 சீர்வரி சைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திரவுபதி அம்மன் கோவி லில் 3 ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, குத்து விளக்கு என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 28 சீர்வரி சைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் சுந்தேஷ்வரி உள்படல பலர் கலந்து கொண்டனர்.

    ×