என் மலர்
நீங்கள் தேடியது "Suresh Gopi"
- மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்
- யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார். இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில் தனது கருத்து குறித்து சுரேஷ் கோபி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில், இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்று நான் கூறியது எனது இதயபூர்வமான கருத்து. எனது மனதில் உள்ளதையே நான் பேசினேன். அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.
யாரும் விரும்பினாலும் விருமாபாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரத்துக்கு பின் தனது இறுதி மூச்சுவரை இந்தியாவை கட்டியெழுப்பிய தலைவர் இந்திரா காந்தி. தேசத்துக்காக உழைத்த ஒரு தலைவரை அவர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கவும் மறக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

- நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன்.
- சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன்.
பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும். சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.
கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரிடம் நீட் குறித்து நடிகர் விஜய் பேசியது குறித்து கருத்து கேட்டபோது, அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
மேலும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசவிருக்கிறேன். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
- ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா?
- பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, 'முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? நீதிமன்றம் பதில் சொல்லுமா? அல்லது நீதி மன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது" என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றக்கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா? இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து ஒன்றிய அமைச்சரின் கருத்தா? பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
ஏற்கனவே காவிரி பிரச்சனையில் அண்டை மாநிலமான கர்நாடகத்தோடு உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை தவறாக வழி நடத்துகிறீர்கள்.
- நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.
2017-ம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கேரள மாநில அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சமர்பித்த அறிக்கை மலையாளம் சினிமா துறையில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நடிகைகள் தாங்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து புகார் தெரிவித்து வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாலையான சீனிமாவின் மூத்த நடிகரும், மத்திய தலைவருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-
நான் புரிந்து கொண்டது வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன.
நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள்.
புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.
இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
- திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
- திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்சில் பயணித்து சம்பவ இடத்திற்கு சுரேஷ் கோபி சென்றுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சுரேஷ் கோபி, "பூரம் திருவிழாவின் குளறுபடிக்கு பின்னல் சதி உள்ளது. இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்சில் சென்றேன்" என்று தெரிவித்தார்.
- தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக் காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார்.
- அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை முதலில் மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு தலைவர் திருச்சூர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சுரேஷ் கோபி மீது திருச்சூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) திருச்சூர் பூரம் நிகழ்வின் போது நடிகர் சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த விதிமுறைகளை சுரேஷ் கோபி மீறி வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், நடிப்புதான் முக்கியம் என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்
- புது லுக்குடன் முழு நேர அரசியல்வாதியாக தனது பதவியின் கடமைகளை சிரம் மேற்கொண்டு செய்ய உள்ளாராம்.
கேரளாவில் முதல் முறையாகக் கடந்த மக்களவை தேர்தலில் கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் நின்ற மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்த வெற்றியைத் தக்கவைக்கும் விதமாக சுரேஷ் கோபிக்கு மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சரானாலும் நடிப்பைக் கைவிட மறுக்கும் சுரேஷ் கோபி ஏற்கனவே சிலபடங்களில் கமிட்டாகி உள்ளார். தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், நடிப்புதான் முக்கியம், என்று சில மாதங்கள் முன்னர் சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிப்பதற்கு மேலிட உத்தரவை எதிர்பார்த்து பாஜக தலைமை அலுவலகத்தின் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த சுரேஷ் கோபிக்கு அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு ஒன்று வந்துள்ளது.

அதாவது, நடிப்பை மொத்தமாக ஒதுக்கிவிட்டு அமைச்சர் பதவியில் கவனம் செலுத்த சுரேஷ் கோபிக்கு கட்சி மேலிடம் கறாரான கண்டிஷன் போட்டுள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனிப்பட்ட முறையில் சுரேஷ் கோபியிடம் இவ்வாறு அறிவுறுத்தியதாகக் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலிடத்தின் உத்தரவை வேத வாக்காக எடுத்துக்கொண்ட சுரேஷ் கோபி தனது 250 வது படமான ஒற்றைக் கொம்பன் படத்துக்காக தான் வளர்த்து வந்த தாடியை சேவ் செய்துவிட்டாராம். மேலும் இனி வாரத்தில் 3 நாட்கள் டெல்லியில்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் சுரேஷ் கோபிக்கு போடப்பட்டதாகத் தெரிகிறது.
எனவே சேவ் செய்த புது லுக்குடன் முழு நேர அரசியல்வாதியாக தனது பதவிக்கான கடமைகளை சிரம் மேற்கொண்டு செய்ய சுரேஷ் கோபி ஆயத்தமாகி வருகிறார். இதற்கிடையே திருச்சூர் பூரம் விழாவுக்கு ஆம்புலன்சில் வந்தது அமளி செய்ததால் சுரேஷ் கோபி CASE வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கும் காரணத்திலேனாலேயே நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம்.
- எங்கள் அண்டை மாநிலமாக கேரளாவிற்கு இதே பிரச்சனை தான்
மத்திய அரசு, கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதி வழங்காமல் கையை விரித்துவிட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
இன்று மக்களவை பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "2014 முதல் 2020 வரை வெப்ப அலையால் இந்தியாவில் 5000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலையை மாநில பேரிடராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
மத்திய அரசு வழங்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் 30% நிதி மக்கள் தொகை மற்றும் மாநில பரப்பளவு அடைப்படையில் வழங்கப்படுகிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த தமிழ்நாடு அரசிற்கு இந்த விதிமுறைகள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இது நன்றாக படித்து நிறைய மதிப்பெண் வாங்கிய மாணவரை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைப்பதற்கு சமம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கும் காரணத்திலேனாலேயே நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். எங்கள் அண்டை மாநிலமாக கேரளாவிற்கு இதே பிரச்சனை தான்" என்று தெரிவித்தார்.
அப்போது கேரளாவை சேர்ந்த பாஜகவின் ஒரே ஒரு எம்.பி.யான சுரேஷ் கோபி கையை விரித்து காண்பித்தார்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி, "நீங்கள் கையை விரித்து காட்டுகிறீர்கள். அதே நிலைமைதான் கையை விரித்து விட்டார்கள். மத்திய அரசு நம்மை பார்த்து கைய விரிச்சிட்டாங்க" என்று தெரிவித்தார்.
- பழங்குடியினர் அல்லாத ஒருவர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சராக முடியாது என்பது இந்த நிலத்தின் மீதான சாபம்
- நான் மோடியிடம் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளேன்
ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரை பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக நியமித்ததால் முன்னற்றம் கிடைக்கும் என்று கூறி பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் முன்னணி மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்வில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் வென்றது இதுவே முதல்முறை. எனவே சுரேஷ் கோபிக்கு பெட்ரோலிய துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆம்புலன்சில் திருச்சூர் பூரம் விழாவுக்கு சென்றது, ஊடகவியலாளரை தவறான முறையில் நடத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு பெயர்போன கோபி தற்போது சாதீய ரீதியாக பேசி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி மலையாளிகள் அதிகம் வசிக்கும் மயூர் விகார் காலனியில் நேற்று கோபி, "பழங்குடியினர் அல்லாத ஒருவர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சராக முடியாது என்பது இந்த நிலத்தின் மீதான சாபம். 'உயர் சாதியில்' பிறந்த ஒருவர் பழங்குடியின சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பது எனது கனவு.

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களின் அமைச்சகத்தின் தலைவராக இருப்பதற்குப் பதிலாக 'உயர் சாதி' உறுப்பினர்களுக்கு அந்த இலாகா அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றம் நமது ஜனநாயக அமைப்பில் ஏற்பட வேண்டும்.
ஒரு பிராமணரோ அல்லது நாயுடுவோ பழங்குடி விவகாரங்களைக் கவனிக்கட்டும், அப்போது அதில் பெரிய மாற்றம் ஏற்படும். நான் மோடியிடம் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளேன், ஆனால் இதில் சில சட்டப்பூர்வ சிக்கல்கள் உள்ளன" என்று பேசியுள்ளார்.
தான் ராஜ்யசபா எம்.பி ஆனதில் இருந்தே தனக்கு பழங்குடியின இலாகாவை ஒதுக்க வேண்டும் என மோடியிடம் கேட்டதாக கோபி தெரிவித்தார்.
இந்த கருத்து சர்ச்சையான நிலையில் தான் பழங்குடியினரை முன்னேற்றும் நோக்கத்தில்தான் அந்த கருத்தை தெரிவித்ததாகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் அந்த கருத்தை திரும்பப்பெறுவதாகவும் சுரேஷ் கோபி இன்று தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி தற்போது பா.ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது சுவாமி ஐயப்பன் பெயரையோ அல்லது வழி பாட்டுத்தலங்களை குறிப்பிட்டோ பிரசாரம் செய்யக் கூடாது என்று மாநில தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியிருந்தார்.
இந்த நிலையில் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சுரேஷ்கோபி கலந்து கொண்டு பேசினார். அப்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் மக்களின் உணர்வாக உள்ளார். சபரிமலை கோவில் விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும் ஒருவன். ஆனால் இந்த விவகாரத்தை நான் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்த விரும்பவில்லை என்றார்.
தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று அந்த கூட்டத்திலேயே நான் கூறினேன். எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. இதற்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எனக்கு கலெக்டர் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு தகுந்த விளக்கம் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi