என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suryakumar Yadav"

    • ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான்.
    • அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா, சூர்யகுமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய அணியையே வழி நடத்தும் 3 பார்மட் கேப்டன்கள் (ஒருநாள், டி20, டெஸ்ட்) மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூர்யகுமார் இந்திய டி20 அணியையும் வழி நடத்துகிறார். எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவரே சரியானவர். அது சுவாரசியமானதாக இருக்கும். கடந்த வருடம் ஒரு போட்டியில் தடைப் பெற்றது எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்.

    2 - 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்குப் பெரிதாக தெரியாது. அது துரதிஷ்டவசமானது என்றாலும் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இம்முறை ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான். அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.

    எனக் கூறினார். 

    • ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    • 23-ந் தேதி சென்னை- மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

    இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் கேப்டனாக செயல்படுவார்.

    கடந்த ஆண்டு மும்பை அணி விளையாடி கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி போட்டியில் விளையாடியது.
    • திலக் பந்து வீச்சில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

    ஒவ்வொரு அணியினரும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் திலக் வர்மா பந்து வீச்சில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அவரது விக்கெட்டை வீழ்த்தி மகிழ்ச்சியில் திலக் வர்மா கொண்டாடினார். மேலும் சூர்யகுமார் யாதவிடமும் சென்று கிண்டலாக வம்பிழுத்தார். இருவரும் சிரித்தப்படியே நகர்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • மும்பை அணி முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் பயிற்சியை துவங்கியுள்ளன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மைதானத்தில் ஷா பூ த்ரீ விளையாடினர்.

    பயிற்சின் போது மூவரும் ஒன்றுகூடிய நிலையில், தீவிரமாக ஆலோசனை செய்து பிறகு சா பூ த்ரீ விளையாடினர். உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகளின் போது யார் முதலில் தொடங்குவது என்பதை முடிவு செய்ய சா பூ த்ரீ போடுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி வீரர்களும் இதை விளையாடியது கவனம் பெற்றுள்ளது.

    பலரும் இந்த வீடியோவில் கமென்ட் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர். விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.


    • உலகக் கோப்பையில் இரண்டு அரைசதம் விளாசியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெர்த்தில் அடித்த அரைசதம் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் விராட் கோலி அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அவருக்கு இணையாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி 3 அரைசதம் அடித்துள்ள நிலையில், சூர்யகுமார் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். குறிப்பாக பெர்த் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்ய குமார் விளையாடிய விதம் அனைவரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது.

    மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை துரத்தும் வல்லவை அவரிடம் உள்ளது. இதனால் டி வில்லியர்ஸ்க்கு பின் 360 டிகிரி என ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு 360 டிகிரி என பெயர் வைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பீர் கூறியதாவது:-

    சூர்யகுமாரை 360 டிகிரி போன்ற பெயர்களால் அழைக்க வேண்டாம். அதற்காக அவர் இன்னும் அதிக அளவில் உழைக்க வேண்டும். அவருக்கு ஏராளமான திறமைகள் உள்ளது. அது 360 டிகிரி, 180 டிகிரி அல்ல ஒரு டிகிரி என்பது விஷயம் அல்ல.

    அவரிடம் விளையாட்டு இருக்கிறது. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். பாரம்பரிய பயிற்சியாளர் அவரை பார்க்கும்போது, அவர் திறமையான பேட்ஸ்மேனுக்கான லைனை தாண்டவில்லை என்றாலும், அவர் பெற்றுள்ள திறமையால் வெற்றிகரமாக திகழ்வார் என்று நிலையை எடுப்பார். முதல்தர கிரிக்கெட் மற்றும் எல்லா வகையிலான கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்தள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடித்து, சிறப்பாக செயல்படுவார் என் நம்பிக்கை உள்ளது'' என்றார்.

    மேலும், ''மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் போன்று கவர் டிரைவ் அடிக்காமல் இருக்கலாம். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்களை விட நினைத்து பார்க்க முடியாத வகையில் 180 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்'' என்றார்.

    • அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார்.
    • ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுகிறார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 61 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் மெல்போர்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து கூறியதாவது:

    அவர் (சூரியகுமார்) முற்றிலும் தனித்துவமானவர் என்றே நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுவது, புதிதாக ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கிறது.

    25 பந்துகளில் 61 ரன்கள் விளாசியது நம்ப முடியாதது. அதனால்தான் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார். 225 ரன்களுடன், இந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராக அவர் திகழ்கிறார். விராட் கோலி (246) மட்டுமே அவரை விட அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார்.

    தனது உடலை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார், உடற் பயிற்சிக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, நிறைய கடின உழைப்புக்கு அவர் வெகுமதியைப் பெறுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
    • நடப்பு ஆண்டில் டி20 போட்டிகளில் 1,026 ரன்களை எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. நேற்று நடந்த சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன் குவித்து பெவிலியன் திரும்பினார். அதிரடியில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 61 ரன்கள் குவித்ததன் மூலம் நடப்பு ஆண்டில் நடைபெற்ற டி 20 போட்டிகளில் 1,026 ரன்களை எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

    இதன்மூலம், டி 20 போட்டிகளில் ஒரே வருடத்தில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நடப்பு ஆண்டில் 28 போட்டிகளில் மொத்தம் 1026 ரன்களை எடுத்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு 29 போட்டிகளில் 1326 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யகுமார் யாதவ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அரைசதம் விளாசினார்
    • உலகக்கோப்பையில் ஐந்து போட்டிகளில் 3-ல் அரைசதம் கண்டுள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் வேற்றுகிரகவாசி: பாகிஸ்தான ஜாம்பவான்கள் புகழாரம்ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார்.

    எந்தவித அச்சமின்றி பந்துகளை நாலாபுறமும் விளாசுகிறார். இந்த பந்தையெல்லாம் அடிக்க முடியுமா? என்ற கேட்க தோன்றும் பந்துகளையெல்லாம் கீப்பருக்கு பின்னால் சிக்சராக விளாசுகிறார். அவருக்கு எப்படித்தான் வீசுவது என பந்து வீச்சாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நேற்று ஜிம்பாப்வே அணிக்கெதிராக கடைசி பந்தை விக்கெட் கீப்பருக்கு மேலாக அருமையாக சிக்ஸ் அடித்திருப்பார். அவரை புகழாத விமர்சகர்ளே இல்லை.

    ஐந்து பேட்டிகளில் 225 ரன்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 246 ரன்கள எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், சூர்யகுமார் வேற்று கிரகத்தில் இருநது வந்துள்ளார் என புகழாரம் தெரிவித்துள்ளார்.

    மேலும் ''சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளதாக நினைக்கிறேன். மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நபராக இருக்கிறார். அவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் ரன்கள் குவித்துள்ளார்'' என வாசிக் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    மற்றொரும் பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் கூறுகையில் ''டி20-யில் சூர்யகுமாரை ஆட்டமிழக்க செய்ய வழி என்ன?. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு நீங்கள் திட்டம் தீட்ட முடியும். ஆனால், டி20-யில் ஏற்கனவே பந்து வீச்சாளர்கள் சிரமப்படும்போது, ஒருவர் இந்த மாதிரியான ஃபார்மில் இருக்கும்போது பந்து வீசுவது கடினம்.

    பாகிஸ்தான் குரூப் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறேன். அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளால் தாக்கினார்கள். ஒருவேளை சூர்யகுமாரை அவுட்டாக்க இது ஒன்றுதான் வழியாக இருக்கலாம்'' என்றார்.

    • உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
    • 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 4 போட்டிகளிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாபேவுக்கு எதிரான சம்பிரதாய கடைசி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

    6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 61* (25) ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார்.

    இந்திய ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் அவரை இந்தியாவின் ஏபிடி என்றும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் புகழாரம் சூட்டி வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் ஒருமுறை நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய அவரை நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் போல மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படுகிறீர்கள் என்று போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டினார்.

    அதற்கு உலகிலேயே ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே 360 வீரர் என்று மறுப்பு தெரிவித்த சூர்யகுமார் யாதவ் அடக்கத்துடன் பேசியது பின்வருமாறு. உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார் என்று கூறினார். அவரது இந்த அடக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி ஏபி டீ வில்லியர்ஸ் கவனத்தை நேரடியாக ஈர்த்தது.

    அதனால் மகிழ்ச்சியடைந்த அவர் நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. "நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. (சொல்லப்போனால்) இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். அப்படி இந்திய வீரரை மனதார பாராட்டிய ஏபி டீ வில்லியர்ஸ் கொடுத்த அந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள்.
    • ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்ய குமார் யாதவின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் அடிலெய்டில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக ஜொலித்து வருகிறார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவர் அடிக்கும் சில ஷாட்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரமாதமாக உள்ளது. அவரது அதிரடியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சில சமயங்களில் பவுலர்கள் விழிபிதுங்குவதை பார்க்க முடிகிறது. தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் அவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்துக்கு எங்களால் அணைபோட முடியும் என்று நம்புகிறோம்.

    விராட்கோலியை பொறுத்தவரை எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் குவித்து இருக்கும் ரன்களே அவரது திறமையை பறைசாற்றும். ஒரு சில சமயங்களில் அவர் சரியாக ஆடாத போது, அவரது கதை முடிந்து விட்டது என்று விமர்சனங்கள் வருவது ஏன்? என்பது தெரியவில்லை. அவருக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். அவரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம்.

    எங்களிடம் இருந்து இன்னும் மெச்சத்தகுந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் சமாளித்து அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டோம். இப்போது இங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறோம். அதனால் போட்டியை உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளோம்.

    நாங்கள் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறோம். அவர்களை யாரும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். நாங்கள் எதிரணியை பற்றி அதிகமாக சிந்திக்காமல் எங்களுடைய அணி குறித்து அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்.

    ரோகித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடாவிட்டாலும், அவர் 20 ஓவர் போட்டியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் இந்த வடிவிலான போட்டியில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பென் ஸ்டோக்ஸ் பதில் அளிக்கையில், 'அப்படி நடந்தால் அது இந்தியா, பாகிஸ்தான் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் இதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காகவே வந்து இருக்கிறோம். அதனை செய்ய முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து எதிரணிகள் கலக்கம் அடைந்துள்ளன.
    • குரூப் 12 சுற்றில் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து அணியின் ஒரே கவலை, சூர்யகுமாரை எப்படி அவுட்டாக்குவதுதான். சூர்ய குமார் வித்தியாசமாக ஷாட்டுகளை இவ்வளவு எளிதாக எப்படி விளையாடுகிறார் என்பதுதான், கிரிக்கெட்டில் உலகில் தற்போதைய பேச்சாக இருக்கிறது.

    இங்கிலாந்து எதிராக நாளை அரையிறுதியில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில், இன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது சூர்யகுமார் யாதவை பெரிய அளவில் இந்தியா நம்புகிறது. இது அவருக்கு நெருக்கடியாக அமையாதா? என்பது போல் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    தன்னுடன் எந்த வகையான பேக்கேஜ்-ஐயும் எடுத்துச் செல்லாத நபரை போன்றவர் சூர்யகுமார் யாதவ். அவருடைய சூட்கேஸை மட்டுமல்லை. நான் சொல்வதின் அர்த்தம், அவர் ஏராளமான சூட்கேஸ்களை வைத்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் ஷாப்பின் செய்வதை மிகவும் விரும்புவார். ஆனால், கூடுதல் சுமையை (extra pressure) சுமக்கும்போது, அவரிடம் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடும்போது அதை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஒரு வருடமாக அவர் இப்படித்தான் விளையாடி கொண்டிருக்கிறார்.

    பேட்டியளிக்கும்போது அவரது பேச்சு உங்களுக்கு கேட்குமா என்று எனக்குத் தெரியாது. அதே பாணியில்தான் அவர் பேட்டிங் செய்கிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.
    • ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து இந்திய ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

    மேலும் இன்றைய சதம் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். மேலும் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார். 


    இந்நிலையில் சூரிய குமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர், டி20 போட்டிக்கு மட்டுமல்ல, மூன்று வடிவ போட்டிகளுக்கும் பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

    அவர் (சூர்யகுமார்) பல வழிகளில் அடிக்கக் கூடிய ஒரு வீரர். அவர் கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், அவர் இந்தியாவின் சிறந்த வீரராக மாற, தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது இறுதி ஓவரை வீசிய டிம் சவுத்தி, அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×