என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 101245"

    மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் எதிரே திறந்தவெளியில், குறுகிய இடத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, கழிப்பறை, குடிநீர், உடமைகள் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் ஏதும் இல்லாமல் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    உலகப்பாரம்பரிய நகரமாக "யுனஸ்கோ" அங்கிகாரம், சிற்ப புவிசார் நகரம், சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடக்க இருக்கும் மாமல்லபுரத்தில் போதிய வசதி இல்லாமல் பஸ் நிலையம் இருந்து வருகிறது.

    மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது., பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் முயற்சி நடந்து அதுவும் நடைபெறவில்லை.

    பின்னர் கருகாத்தம்மன் கோயில் வடபுறம் அரசுக்கு சொந்தமான 6.80 ஏக்கர் நிலத்தில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட உறுதி செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு, தேர்தல், திட்ட மதிப்பீட்டில் குளறுபடி என அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் பூங்கா, தங்கும் அறை, டிஜிட்டல் வரைபட விளக்க போர்டு, சி.சி.டி.வி பாதுகாப்பு, அதை கண்காணிக்க காவல்துறை கட்டுப்பாட்டு அறை, தானியங்கி நடைமேடை, விசாலமான பார்க்கிங் போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான கள ஆய்வு மற்றும் புதிய வரைபட ஆலோசனை பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, கலெக்டர் ராகுல்நாத், எம்.பி செல்வம், எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அடுத்த மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கி 15 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் அ.தி.மு.க. பிரமுகரும், போலீசாரும் பணம் பறித்ததாக குற்றம்சாட்டி முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு சுமதி (30) என்ற மனைவியும், ருஜன்யா (7) என்ற மகளும், கந்தசாமி என்ற ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் மேல்வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நெல்லையப்பன் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பாக நெல்லையப்பன் தனது முகநூலில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் ஒரு ஓட்டலில் ரூ.30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தேன். பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதால் இதுவரை என்னிடம் அ.தி.மு.க. பிரமுகர் 7 வருடத்தில் ரூ.19 கோடிக்கும் மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்துவிட்டார். எவ்வளவு காசு கொடுத்தாலும் அவருக்கு பத்தாது. போதாக்குறைக்கு போலீசாருக்கும் மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும்.

    ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடிவிடுவார்கள். ஏண்டா இந்த தொழிலுக்கு வந்தோம் என்று பலமுறை நான் வருந்தி உள்ளேன். தமிழகத்தில் மதுவை ஒழிக்க ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகிய தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் மதுவை ஒழித்தால் 1 கோடி பெண்கள் நிம்மதியாக வாழ்வார்கள். நான் இறப்பதற்கு முன் இப்பதிவை வெளியிடுகிறேன்.

    இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நெல்லையப்பன் பேசி பதிவிட்டுள்ளார்.

    மேலும் அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க வந்த நெல்லையப்பனை போலீசார் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது தன் தற்கொலைக்கான முழு காரணத்தையும் அவர் நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்தது மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    திருப்போரூர்:

    புதுச்சேரி பந்துரெட்டி புரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (21). இவருடைய நண்பர் ரஞ்சித்குமார் (24).

    நேற்று இரவு தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.

     

    மாமல்லபுரம் அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் மனைவி விவாகரத்து கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடியை சேர்ந்தவர் முருகன் (வயது 36). சிற்பதொழில் செய்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபம் அடைந்த தீபா கடந்த மாதம் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் முருகன் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே விவாகரத்து கேட்டு தீபா வக்கீல் நோட்டீசும் அனுப்பியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியை சேர்ந்த மோகனா. இவர் உறவினருடன் கோவளம் அருகே உள்ள மருத்துவமணைக்கு சென்று விட்டு ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் கிருஷ்ணன்காரனை சாய்பாபா கோயிலுக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் இருவரும் இறங்கினார்கள்.

    அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் தன்னை சாதாரண உடையில் ரோந்து சுற்றும் ரகசிய போலீஸ் என அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு வழிப்பறி கொள்ளை அதிகமாக நடக்கும் பகுதி இது. அதனால் நகைகளை பத்திரமாக கைபையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து செல்லுங்கள் என எச்சரிப்பது போல் கூறிவிட்டு சென்றான்.

    இதை நம்பிய மோகனா தனது 11பவுன் நகை மற்றும் செல்போனை கை பையில் வைத்து விட்டு நின்றார். அப்போது அதே வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்து மோகனாவின் கைப்பையை பறித்து தப்பி சென்று விட்டான்.

    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அமீர் அகமது சென்னை கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவரது நண்பர் மிர்சாஅலி ஓ.எம்.ஆரில் உள்ள கம்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.

    இவர்கள் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சென்னை அரும்பாக்கத்தில் தனி வீடு எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு சென்று நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி இருளர்கள் காலனி அருகே வந்தபோது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அமீர் அகமதும் மிர்சா அலியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மிர்சா அலி இன்னும் ஓரிரு மாதத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    மாமல்லபுரத்தில் காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). இவர் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதி வளாகத்தில் தங்கி காவலாளியாக வேலை பாத்து வந்தார்.

    இந்த நிலையில் தங்கியிருந்த அறையில் சம்பத் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சம்பத் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர். #KannumPongal
    பொன்னேரி:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

    பழவேற்காட்டில் இன்று காலை முதல் பொது மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரை டச்சுகல்லறை, லைட்அவுஸ் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லைட்அவுஸ் குப்பம், செம்பாசிபள்ளி குப்பம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படகு சவாரி, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட காலையிலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரதான சின்னங்களான கடற்கரை கோவில், புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, பட்டர் பால், ஐந்துரதம் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அவர்கள் கண்டு ரசித்தனர்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி, முதலை பண்ணை, திருவிடந்தை, பட்டிபுலம், தேவநேரி கடற்கரை பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்தது.  #KannumPongal
    மாமல்லபுரம், கோவளம் கடலில் குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதி காணும் பொங்கலையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் குவியும் முக்கியமாக கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் பயணிகள் கடலில் குளிப்பார்கள்.

    கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் ராட்சத அலை, புதைமணல்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.

    மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே 700 மீட்டர் தூரத்திற்கு சவுக்கு மர தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.



    மாமல்லபுரம் அருகே பஸ், கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். திருமண கோஷ்டியினர் 16 பேர் படுகாயம் அடைந்தனர். #Accident
    மாமல்லபுரம்:

    சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (வயது23). இவர் சென்னை தரமணியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் தனது பள்ளிக் கூட நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் அதிராம்பட்டனத்தைச் சேர்ந்த முகமது தகீம் அப்சுரா (22), பெரம்பூரைச் சேர்ந்த சாய்சதீஷ் (22) மற்றும் 2 பேருடன் நேற்று காலை காரில் சென்னையில் இருந்து புதுவைக்கு சென்றார்.

    அங்கு நண்பர் ஒருவரை பார்த்து விட்டு நேற்று மாலை மீண்டும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திக் ஓட்டியதாக தெரிகிறது.

    நேற்று இரவு மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எண்ணூரில் இருந்து திருமண கோஷ்டியினர் 50 பேர் ஒரு பஸ்சில் கடலூர் துறைமுக பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    முன்னாள் சென்ற அரசு பஸ்சை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த கார் நிலைதடுமாறி ஓடி திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதில் காரில் இருந்த கார்த்திக், முகமது தகீம், சாய்சதீஷ் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 5 பேரின் உடல்களும் காருக்குள் சிக்கிக் கொண்டது.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி காருக்குள் இருந்த 5 பேரின் உடல்களையும் எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமண கோஷ்டி சென்ற பஸ் டிரைவர் ராகவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Accident



    மாமல்லபுரம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த சாலவான் குப்பத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அர்ச்சனா (வயது14). நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் தினசரி மது அருந்தி விட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார். இதை தட்டிக்கேட்ட மனைவி அர்ச்சனாவை அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் மன முடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ×