என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"

    • பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர்
    • காவல் துறையினரை நோக்கி எச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து, பாஜக தலைவர்களான அண்ணாமலை, தமிழிசையை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடைய தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர். அப்போது, நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்"... நான் என்ன குற்றவாளியா? என்று கூறி காவல் வாகனத்தில் ஏற அவர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து எச்.ராஜாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    • மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    • தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    சென்னையில், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அண்ணாமலை, "ஒருவருடைய மடியில் கனமிருந்தால் மட்டும்தான் வழியில் பயம் இருக்கும். இன்றைக்கு தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது. அதனால் பயத்தில் இருக்கிறார்கள்.

    ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்யும் போது குரல் வளையை நசுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவல் துறைக்கு இதுதான் வேலையா? தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் தடுத்து நிறுத்துகிறார்கள்.

    இன்றைக்கு தடுக்கட்டும். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22-ந்தேதி நடக்கலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எதை வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம். அது முதலமைச்சரின் வீடாக கூட இருக்கலாம்.

    எங்களை பொருத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேதி சொல்ல மாட்டேன். இந்த முறை காவல் துறைக்கு மரியாதை கொடுத்து தேதியை சொல்லி இருந்தோம். அவர்கள் இதுபோல் செய்வதால், ஒரு அரசியல் கட்சியாக நாங்களும் வேறு ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம்.

    நான் பேசினால் பல விஷயங்கள் வெளிவரும் என்பதால் என்னை பேச விடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டத்துக்கு போக விடாமல் செய்கிறார்கள். காவல் துறை என்ன வேண்டுமானாலும் முயற்சி எடுக்கட்டும்.

    எங்களை பொறுத்தவரை டாஸ்மாக் ஊழலில் யார் குற்றவாளிகள் என்று நாங்கள் கருதுகிறோமோ எல்லோரையும் ஜனநாயக முறையில் முற்றுகையிட எங்களுக்கு உரிமை இருக்கிறது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடத்தி இதை தெரிவித்து உள்ளது.

    தமிழ்நாட்டு அரசியலை உலுக்குவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொண்டு வருவதற்கு பா.ஜ.க. முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டம் அச்சாணியாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பது எனது அனுமானம். நான் பொறுப்பான பதவியில் இருப்பதால் அமலாக்கத்துறை சொல்லி இருப்பது போல ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கும் என்று கூறுகிறேன். பா.ஜ.க. மீதுள்ள பயத்தால் போராட்டம் தடுக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

    • போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்கள் பலர் கைது
    • போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது.

    அதற்கு போலீசார் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. ஆர்ப்பாட்டம் வேண்டுமானால் நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதையடுத்து எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.

    ஆனால் இப்போதைக்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. சில நாட்கள் கழித்து ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று போலீசார் கூறி அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதையடுத்து போலீஸ் தடையை மீறி சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று தமிழக பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க.வினர் இன்று முயன்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்று திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக சென்று டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக இன்று காலையிலேயே பா.ஜ.க. தொண்டர்கள் ராஜரத்தினம் மைதானத்துக்கு வர முயன்றனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்த வர முடியாதபடி போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


    இதேபோல் தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள்.

    மேலும் ராஜரத்தினம் மைதானம் அருகே பா.ஜ.க.வினர் வராமல் தடுப்பதற்காக அங்கு வரும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் அருகில் இன்று காலையிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதேபோல் ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் பின்னி சாலை சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    எழும்பூர் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வரும் சாலை, புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் வழியாக ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் சாலை ஆகிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


    தடையை மீறி போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை 9.45 மணி வரை பா.ஜ.க. தொண்டர்கள் யாரையும் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வர போலீசார் அனுமதிக்கவில்லை. வரும் வழியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் காலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

    இதேபோல் சென்னை முழுவதும் ஆங்காங்கே பா.ஜ.க.வினர் தடுத்தி நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணியில் ஒன்று கூடி போராட்டம் நடத்த புறப்பட்ட பா.ஜ.க.வினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சாலிகிராமத்திலும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அவர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வராமல் தடுப்பதற்காக அவரது வீட்டு முன்பு 15-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


    ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழக பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் வீடுகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீடு சென்னை பனையூரில் உள்ளது. அவர் போராட்டம் நடத்த வெளியே வராமல் தடுப்பதற்காக இன்று அதிகாலையிலேயே அவரது வீட்டு முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அவரது வீடு அருகே வந்த வாகனங்களையும் தடுத்து நிறுத்தினார்கள். இன்று காலை 11.00 மணியளவில் அண்ணாமலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    பா.ஜ.க. அறிவித்தது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட ஆயத்தமான அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத் தொடர்ந்து ராஜரத்னம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மற்றும் காவல் துறையினர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு சூழல் உருவானது.

    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில், அக். 27-

    தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொன்.ராதாகிருஷ்ணன்

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் பொன்ரத்தினமணி முன்னிலை வைத்தார்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. 1967-ம் ஆண்டு தமிழை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். 50 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு இருக்கை அமைக்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆனால் பிரதமர் மோடி காசி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.

    உலகத்திலேயே பழமை யான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறினார். சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமை யான மொழி என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் இங்குள்ள தி.மு.க.விற்கு தமிழைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

    துரோகம்

    இலங்கையில் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் தான் தி.மு.க.,-காங்கிரஸ் எம்.பி., க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். குமரி மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அது மோச மான விளைவுகளை ஏற்ப

    டுத்தும்.

    குமரி மேற்கு மாவட்ட த்தில் மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்த பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாண வர்கள் தொடர்ந்து அங்கு கல்வி கற்க வேண்டும்.

    குரல் கொடுப்போம்

    தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி. வேறு மொழியை திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது.

    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
    • பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    திருப்பூர் :

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற கவனம் செலுத்தாமல் தமிழ் மொழியை பாதுகாப்பதாக கூறி தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    • மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • இந்தி திணிப்பை கண்டித்து நடந்தது

    புதுக்கோட்டை

    மாநிலங்கள் மீது மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர்கள், மாணவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதீர் ரூபவ் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர் சங்க மாநில துணை செயலாளர் ஜனார்த்தனன்ரூபவ் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் குமாரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெறறது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    கரூர்:

    வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மாற்றுத்தி றனாளிகளுக்கான ஊர்தி படியை உடனே வழங்கிட வேண்டும். பிறதுறை ஊழியர்களுக்கு வழங்குவது போல் கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் வழங்கிட வேண்டும். 2021-2022 ஆண்டுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட விஏஓ பதவி உயர்வு உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி

    அரியலூர்,

    தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கட்சியினர் மொழி அரசியலை செய்ய வேண்டாம். பொறியியல், மருத்துவம் படிப்புகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட மேற்பார்வையாளர் சந்திரசேகரன், அரியலூர் நகரத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
    • இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.

    இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

    இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.

    போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.

    • 4 வழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்
    • கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செல்ல நாடார், ஹரி குமார், ஆறுமுகம்பிள்ளை, வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    4 வழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க மத்திய அரசும் நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    துணை செயலாளர் விஜி, பொருளாளர் சின்னத்தம்பி. செண்பக சேகரன் பிள்ளை, சுனில்குமார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விவசாய சங்கத்தினர், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துச் சென்றனர்.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இஸ்லாமியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மை மக்களுக்கான வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பாக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்

    ×