என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 107604"

    மதுரை கீரைக்கார மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
    மதுரை

    மதுரை நன்மை தருவார் கோவில் தெருவில் உள்ள கீரைக்கார மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 

    விழாவில் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு ஆற்றில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    28-ந் தேதி 11 மணிக்கு அன்னதானம், அன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இரவு 8 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், 9 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் முளைப்பாரி யுடன் 4 மாசி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி மதியம் 2 மணிக்கு விளையாட்டுப்போட்டிகள், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 30-ந்தேதி அம்மன் பூஞ்சோலைக்கு அனுப்பும் வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    அவனியாபுரத்தில் டூவீலரில் லிப்டு கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அவனியாபுரம்

    பெருங்குடியை சேர்ந்தவர் சந்திரகிஷோர்  (வயது18) சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்குடியில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்ய வந்து கொண்டிருந்தார். 

    அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் பெருங்குடி செல்ல வேண்டும் என லிப்டு கேட்டுள்ளார். 

    அவரை ஏற்று கொண்டு அவனியாபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு மற்றொரு வாலிபர் லிப்டு கேட்கவே அவரையும் அழைத்து விட்டு பெருங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அவனியாபுரம் குருதேவ் நகர் பகுதியில் வாகனத்தை நிறுத்தச் சொல்லிய 2 வாலிபர்களும் சந்திரகிஷோரின்  செல்போன், செயின்,வாட்ச்,பணம் உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்து விட்டு தப்பினர்.இதுகுறித்து சந்திர கிஷோர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதனமுறையில் லிப்டு கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    மதுரை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 95 சதவீதம் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
    மதுரை

    மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம், தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, விமான நிலைய அதிகாரி பாபுராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    இந்த கூட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மதுரையை மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    மதுரை விமான நிலையத்தில் புதியதாக 5 விமான நிறுத்தும் இடம், 2 ஹெலிபேடுகள், கூடுதல் பயணிகள் பாதை, வாகன நிறுத்தம், பேருந்து வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. 

    இதற்கான விரிவாக்கப் பணிகளுக்காக 95 சதவீதம் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடிந்து உள்ளன. எனவே மீதமுள்ள பணிகளை முடிக்கும் வகையில் தமிழக அரசு நீர்நிலை வகை மாற்றம் குறித்து உத்தரவுகளை வெளியிட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

    தொண்டி - மதுரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 3 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திலேயே பழையனகோட்டை அருகே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை சரி செய்யப்படவில்லை. 

    இந்த பள்ளத்தால் இரவில் வரும் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளான சம்பவமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன்பு இதே பள்ளத்தில திருவெற்றியூரைச் சேர்ந்தவர் விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களின் மெத்தனப்போக்கால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    மேலும் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக அடிக்கடி தோண்டிய பள்ளங்கள் சாலைகளின் ஓரங்களில் சரி செய்யப்படாமல் இச்சாலை தரமற்ற நிலையில் உள்ளது. இதேபோல் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பழுதாகி உள்ளது. 

    அந்த பள்ளத்தில் கடந்த மாதம் ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த டி. கிளியூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சித்திரவேலு சம்பவ இடத்திலேயே பலியானார். இப்படி தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    புதுவிளாங்குடியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
    மதுரை

    மதுரை மேற்கு  கோட்ட மின்வாரிய  செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆனையூர் துணை மின் நிலையம் சாந்திநகர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் நாளை(4-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். பாலமேடு மெயின் ரோடு,சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர்,புது விளாங்குடி, கூடல் நகர், சொக்கநாதபுரம்,ராஜ் நகர்,பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர்,துளசி வீதி,திண்டுக்கல் மெயின் ரோடு,விஸ்தாரா குடியிருப்பு,பரவை சந்தை, பாண்டியன் தியேட்டர்,வருமான வரி காலனி,டெய்சி காலனி,வைகை தெரு, கணபதி நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையம், தெற்குமாசி வீதி பீடர் மற்றும் தெற்கு வெளிவீதி பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 

    இதன் காரணமாக நாளை (4-ந் தேதி) காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை தெற்காவணிமூலவீதியின் ஒரு பகுதி, தெற்குமாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிக்கார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி, பெருமாள் கோவில் சன்னதியின் ஒரு பகுதி.

    தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ேராடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்தியாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனகார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னைஓலைகார சந்து முகமதியர் சந்து ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    மதுரை:

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார்.

    தல்லாகுளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கார்த்திகாதேவி (21). இவர் சம்பவத்தன்று அதிகாலை காந்தி மியூசியம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திகாதேவி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இந்த 2 சம்பவங்களும் கடந்த மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் நடந்துள்ளன.

    நகையை பறிகொடுத்தவர்கள் உடனே தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் நடந்த 1 மாதத்துக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மதுரையில் வங்கி கடன் செலுத்த முடியாததால் ஏற்பட்ட நெருக்கடியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் அகிம்சா நகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 38). இவர் அதே பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் வங்கியில் சுந்தரமகாலிங்கம் கடன் வாங்கினார்.

    வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மாதத் தவணையை சரிவர செலுத்த முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இதனால் மன வேதனை அடைந்த அவர், சம்பவத்தன்று வீடடில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் சுந்தரமகா லிங்கத்தை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiGovernmenthospital #HighCourt
    மதுரை:

    மதுரையில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டானது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேர் இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்டதும் ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி தான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைப்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

    தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #MaduraiGovernmenthospital #HighCourt
    மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    சென்னை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை. ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்தனர். சிகிச்சை பலனின்றிதான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழு காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழு பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை என பதிவிட்டுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள், திருப்பரங்குன்றம், கப்பலூர், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.
    மதுரை:

    தமிழகம் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பானி புயலால் மழை வரும் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு புயல் திசை மாறியதால் ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    ஆனால் மதுரை மாவட்டத்தில் மட்டும் மழையின்றி வறண்ட வானிலை நிலவியதால் வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. நாள்தோறும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அளவு பதிவானது. மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் மதுரையில் மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கத்தை விட அனல்காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்தது. மாலை 4 மணியளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு வந்தன. குளிர்ந்த காற்று, இடி-மின்னலுடன் 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.

    முதலில் சாரலாக விழுந்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. மதுரை நகரின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 5 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை கொட்டித்தீர்த்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய பகுதிகளான மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள், விளக்குத்தூண், மாசி வீதிகள், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.

    இதே போல் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள், திருப்பரங்குன்றம், கப்பலூர், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    மதுரை கூடல்புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூரில் உள்ள செல்லையா நகரைச் சேர்ந்தவர் செல்வன் தினேஷ் டேவிட்சன் (வயது51). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவுக்குள் இருந்த 30 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய செல்வன்தினேஷ் டேவிட்சன், கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×