என் மலர்
நீங்கள் தேடியது "தாக்குதல்"
- வீரன் மற்றும் அண்ணாமலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
- படுகாயமடைந்த வீரன்,அண்ணாமலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடலூர்
வடலூர் வள்ளலார் நகர் சித்தர் தெருவை சேர்ந்தவர் ராஜவன்னியன் என்பவரின் மகன் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை. இவர்கள் இருவரும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி மாலையில் வீரனும் தம்பி அண்ணாமலையும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த வீரன் மற்றும் அண்ணாமலை வழியில் செல்கின்ற பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு இளைஞர்கள் நாங்கள் இப்படி தான் செய்வோம் எனவும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி வீரன் மற்றும் அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் செய்துள்ளனர்.
இந்நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பினால் இருவரையும் தாக்கினர். இதில் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வீரன்,அண்ணா மலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் கோபிநாத் என்கிற விக்னேஷ் (வயது 19) கோட்டக்கரை மாருதி நகரைச் சார்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய் (19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (18) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து கடலூர் சிறையிலும் மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார்.
- எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சட்டியை சுப்பிரமணியன் மீது மாரிச்சாமி தள்ளி விட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் புது மனை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருவேங்கடம் சாலை பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்டதற்கு சுப்பிரமணியன் மாரி சாமியிடம் பணம் கேட்டுள் ளார்.
ஆத்திரமடைந்த மாரிசாமி நான் யார் தெரியுமா என கேட்டு எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சிக்கன் சட்டியை சுப்பிரமணியன் மீது தள்ளி விட்டார். இதில் எண்ணை கொட்டி சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். மேலும் மாரிச்சாமி சுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்த சுப்பிர மணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்.
- 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
- குழித்துறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மெர்சி ரமணி பாய்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி நீரோடு டி துறை மீனவ கிராமத்தில் ரோந்து சென்றார். அப் போது, இரும்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கும்பலை கலைந்து செல்ல கூறினார்.
ஆனால் அந்த கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெரி பாய், சாலேட், சைஜு, வியாகுல அடிமை, யேசுதாஸ், ராஜூ, கிறிஸ்து தசன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகினார்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டுகளும், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டுகளும் விதித்து உத்தரவிட்டார். இந்த 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
- பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார்.
- சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையின் போது அந்த ஊரை சேர்ந்த பொது மக்களுக்குள் பணம் வசூல் செய்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் கடந்த தீபாவளி அன்று பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார். அப்போது அதே ஊரை சேர்ந்த பூபதி, முருகேசன், சின்னதுரை, முத்துசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரிடம் தகராறு செய்தனர்.
பின்னர் சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் சண்டையை விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் விசாரிக்கிறார்கள்.
- குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் சிவா (வயது 37). கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போனிபாஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவதினம் சிவா செந்தறை பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது அங்கு வந்த போனிபாஸ் தகாத வார்த்தைகள் பேசி கம்பால் அடித்து சிவாவை காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த சிவா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தேவகோட்டையில் வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கினர்.
- தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தேவகோட்டை
ராமநாதபுரம் மாவட்டம் வீரசங்கிலி மடத்தை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மகன் முகம்மது ஆசிப்(23). கூலி தொழிலாளி. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முகமதியர் பட்டணம் பகுதியில் உள்ள தனது உறவினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முகமதுஆசிப் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது நகராட்சி சமுதாய கூடம் அருகில் வந்தபோது எதிரே இருசக்கர வாக னத்தில் வந்த ஒருநபர் மோதுவது போல் வந்துள்ளார்.
இதனை முகமதுஆசிப் கண்டித்தார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போன் மூலம் சிலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமது ஆசிப்பை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை பொது மக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
10-க்கும் மேற்பட்ட நபர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து 5-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார்.
- அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு
- கொலைமிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு
கன்னியாகுமரி:
நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). இவர் குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிகிறார்.
சம்பவ தினம் மார்த்தா ண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் துறைமுகம் வழியாக செல்லும் பஸ்ஸில் பணிபுரிந்துள்ளார். அப்போது தேங்காப்பட்டணம் பஸ்நிறுத்ததில் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த பெல்லஸ்பர் என்பவர் பஸ்சில் ஏறி முள்ளூர்துறை என்ற இடத்துக்கு டிக்கட் எடுத்துள்ளார்.
பஸ் அரையன்தோப்பு பகுதியில் செல்லும்போது பஸ்ஸை நிறுத்த கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பெல்லஸ்பர் ஓட்டுநர் இருக்கை சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ராஜன் தேங்காப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின்பேரில் அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
இது போன்று பெல்லஸ்பர் அளித்துள்ள புகாரில் பஸ்ஸில் ஏறி, தேங்காப்பட்டணம் துறைமுகப்பகுதியில் இறங்க வேண்டும் என டிக்கட் எடுத்ததாகவும், குறிப்பிட்ட இடம் வந்ததும் நடத்துனர் விசில் அடித்தும், டிரைவர் நிறுத்தாமல் சென்றதாகவும், இதை கேட்டதால் டிரைவர், நடத்துனர் இருவரும் சேர்ந்து பெல்லஸ்பரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார். இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார்.
மதுரை
மதுரை எழுமலை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 39). இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் மகளுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் முத்து ராஜா புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாமனார் பிரபாகரன் (48), மாமியார் பிச்சைமணி (45) மற்றும் மகன் பிரபு (28) ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று முத்துராஜா வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இரும்பு கம்பி, மண்வெட்டியால் முத்துராஜாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
எனவே முத்துராஜா இதுதொடர்பாக, எழு மலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பிரபாகரன் மற்றும் பிச்சைமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதே வழக்கில் பிச்சை மணி கொடுத்த புகாரின் பேரில் முத்துராஜாவை யும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
- கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை.
நீடாமங்கலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோ ட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகம் புளியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வைரப்பன் (33) அவரின் மனைவி குடும்பபிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோபித்த க்கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக வைர ப்பன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்இரவு இறந்துள்ளார்
ஜெயலட்சுமி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், இறந்தவரின் பிரேதம் கும்பகோணம் அரசு மருத்து வமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்களர்.
இறந்த வைரப்பனுக்கு மகன் ஹரிஹரன் (6) மகள் சிவானி (3)இருவரும் அவரது அம்மாவுடன் திருப்பூரில் இருந்துள்ளார்கள்
இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அவரது சொந்த அண்ணன் வேலப்பன்(39) என்பவர் வைரப்பனை கட்டையால் தாக்கியது போலீஸ் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.
- டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் இருந்து நேற்று மாலை திருவக்கரைக்கு சென்ற, தடம் எண் 12என்ற எண் கொண்ட அரசு பஸ், மீண்டும் திருவக்கரையிலிருந்து பயணிகளை ஏற்றி க்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டு இருந்தது. பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்எ ன்பவர் ஓட்டி சென்றார். அப்போது மயிலம் பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அரசு பஸ் மீது மோதுவது போல் கட்டடித்து சென்றுள்ளனர். இதனால் பஸ் டிரைவர் அவர்களிடம் எதற்காக இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில், பைக்கில் வந்தவர்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மயிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது ரமேஷ் உட்பட 3 பேர் பஸ்சை மோதுவது போல் வந்து டிரைவரை தாக்கி விட்டு, ஓடி விட்டதாக தெரிவி த்தனர். இதனையடுத்து ரமேஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
- உசிலம்பட்டியில் பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
மதுரை
உசிலம்பட்டி, மாயன் நகரை சேர்ந்த காட்டுராஜா மனைவி சீதாலட்சுமி (வயது 42). இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சீதா லட்சுமி அங்குள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார். இதற்கான தவணையை செலுத்தி வந்தார். அவர் 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லையாம்.
சம்பவத்தன்று இரவு சீதாலட்சுமி கடையில் இருந்தார். அப்போது தனியார் வங்கி ஊழியர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சீதாலட்சுமிக்கு அடி உதை விழுந்தது. இதை கணவர் காட்டுராஜா தட்டி கேட்டார். அவருக்கும் அடி- உதை விழுந்தது.
கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சீதாலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீதாலட்சுமியை தாக்கியது ஆரியப்பட்டி விக்னேஷ், பெருங்காமநல்லூர் தங்கம் மற்றும் 2 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்காலில் ேபாலீசாரை தாக்கிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி பூவம் சிவன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி அதிகாலை 12.05 மணிக்கு, சொந்தவேலையாக காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் சந்தைதிடலருகே மோட்டார் சைக்களில் சென்று போது மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பிரகாஷ், காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் திருட்டுப் போன பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து, காரைக்கால் நகர் பகுதியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த அத்திக்கு ரகுமான் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.