என் மலர்
நீங்கள் தேடியது "tag 115062"
வேதாரண்யம் அருகே சிலம்ப கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி கிராமத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.
சிலம்பாட்டக் கழக மாவட்டச் செயலாளர் கருணாகரன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, கவிஞர் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் தியகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மூத்த ஆசான் ராமையா, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், துணைத் தலைவர் பார்த்தசாரதி, சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில், முனைவர் ராமஜெயம், தலைமையாசிரியர் பாஸ்கரன், நாடக ஆசிரியர் ராசேந்திரன், கவிஞர் ராசேந்திரன், விவசாய சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சங்கரன், சுப்ரமணியன், கவிஞர் அசோக், ஆசிரியர் சத்தியசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.
மோடி திரைப்படத்திற்கான சான்றிதழ் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. #PMNarendraModi #ModiBiopic
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனடியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. தணிக்கை வாரியம் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி (நாளை) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #PMNarendraModi #ModiBiopic
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி, மும்பை ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால், படத்தை வெளியிடுவது குறித்து நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனடியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. தணிக்கை வாரியம் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி (நாளை) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #PMNarendraModi #ModiBiopic
காவல்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வேலூரில், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
வேலூர்:
தமிழக காவல்துறையில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான விபரம் சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பார்ஸ்போர்ட்டு மற்றும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு நன்னடத்தை சான்றிதழ் பெறுவது அவசியமான ஒன்றாகும்.
இந்த சேவையில் பொதுமக்களின் வீண் அலைச்சலை தடுக்க முதன் முறையாக இணையதளம் மூலம் நன்னடைத்தை சான்றிதழை பெறும் வசதியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு சேவை உள்ளிட்ட 4 விதமான சேவைகளை இணையதளம் மூலம் வழங்கும் புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவல்துறையின் இந்த சேவைகளை பெற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gon.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் கடிதம் அல்லது அடையாள அட்டை போன்றவற்றை இணைக்க வேண்டும். ஒருவர் யாருடைய விபரத்தை கேட்டும் விண்ணப்பிக்கலாம். காவல்துறையினர் விசாரணைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா? என விசாரிப்பார்கள். ஒருவேளை ஒப்புதல் பெறவில்லை என்றால் விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படாது. இந்த புதிய நடைமுறையால் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அனைத்து விபரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
விண்ணப்பித்த நபரின் செல்போனுக்கு 4 இலக்க எண்கள் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சேவையை பெற தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஆயிரம் ரூபாயும் இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் வழியாக சேவையை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
தமிழக காவல்துறையில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான விபரம் சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பார்ஸ்போர்ட்டு மற்றும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு நன்னடத்தை சான்றிதழ் பெறுவது அவசியமான ஒன்றாகும்.
இந்த சேவையில் பொதுமக்களின் வீண் அலைச்சலை தடுக்க முதன் முறையாக இணையதளம் மூலம் நன்னடைத்தை சான்றிதழை பெறும் வசதியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு சேவை உள்ளிட்ட 4 விதமான சேவைகளை இணையதளம் மூலம் வழங்கும் புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவல்துறையின் இந்த சேவைகளை பெற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gon.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் கடிதம் அல்லது அடையாள அட்டை போன்றவற்றை இணைக்க வேண்டும். ஒருவர் யாருடைய விபரத்தை கேட்டும் விண்ணப்பிக்கலாம். காவல்துறையினர் விசாரணைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா? என விசாரிப்பார்கள். ஒருவேளை ஒப்புதல் பெறவில்லை என்றால் விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படாது. இந்த புதிய நடைமுறையால் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அனைத்து விபரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
விண்ணப்பித்த நபரின் செல்போனுக்கு 4 இலக்க எண்கள் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சேவையை பெற தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஆயிரம் ரூபாயும் இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் வழியாக சேவையை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூரில் காகிதப்பைகள் தயாரிக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கு வருவாய் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மதன கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் காகிதப்பைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி 2 வாரங்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற 34 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாற்று வழி முறையான காகிதப்பைகளை வியாபாரிகள் அதிகளவு பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் காகிதப்பை தயாரிப்பை அனைவரும் ஊக்கப்படுத்திட முன்வர வேண்டும் என்று கூறினார். இதில் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் மதன கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் காகிதப்பைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி 2 வாரங்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற 34 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாற்று வழி முறையான காகிதப்பைகளை வியாபாரிகள் அதிகளவு பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் காகிதப்பை தயாரிப்பை அனைவரும் ஊக்கப்படுத்திட முன்வர வேண்டும் என்று கூறினார். இதில் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.