என் மலர்
நீங்கள் தேடியது "தேமுதிக"
- அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
- லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.
இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.
லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.
தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேமுதிக-வின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.
- பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு.
சென்னை:
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டி.வி.யில் நானும் பார்த்தேன். தெரிந்துகொண்டேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப்பற்றி நாங்க எந்த கருத்தும் சொல்ல முடியாது.
* தேமுதிகவை பொறுத்தவரைக்கும் ஏப்ரல் 30-ந்தேதி செயற்குழு - பொதுக்குழு நடத்த இருக்கிறோம். அதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்காகத்தான் தேமுதிக நிர்வாகிகள் வந்துள்ளனர்.
* தேமுதிக-வின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம். செயற்குழு-பொதுக்குழு நடந்துமுடிந்தவுடன் யாருக்கெல்லாம் பதவிகள் என்று அறிவிக்கப்படும். 6 மாதம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம்.
* தேர்தலுக்கு இன்னும் ஒருவருட காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்தமுறை மிகவும் யோசித்து, நிதானமாக தான் முடிவு எடுப்போம்.
* பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம்.
* கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்.
* தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன்.
* அமைச்சர் பொன்முடியின் பேச்சு கேவலமானது. அசிங்கமாக பார்க்கிறேன்.
* பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தே.மு.திக. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.
நேற்று அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் விரிவடைகிறது.
பா.ம.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
நேற்றே கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தியதாகவும், 9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.
பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்ட பின் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
- இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
- பெண்களுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. எரிவாயு சிலிண்டர் குறையும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும், விலை குறையவே இல்லை.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டுதான் போகிறது. அதனால் இன்றைக்கு இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை பரிசீலனை செய்து பெண்களினுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
- பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.
- பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறுித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 30.04.2025 புதன்கிழமை காலை 09.00 மணியளவில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.
அதில் தேமுதிக பொதுச் செயலாளர் .பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், கழக வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் (ஒரு நபர் மட்டும்), மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
- சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்.
மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
- எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து, விஜயகாந்த் இல்லாமல் எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன். ஆனால் அவர்கள்தான் இந்த பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறினார். மேலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, 2026 மார்ச் 18-ந்தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாளன்று தெளிவாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
- தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது.
- தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்றது ஏன்? என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை (2006) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது. இதில் உள்ள நிறைய விஷயங்களை இந்த முறை பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தே.மு.தி.க சார்பாக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினோம்.
முதியோர் இல்லம், காலை சிற்றுண்டி திட்டம் ஆகிய திட்டங்களை தே.மு.தி.க. வலியுறுத்தி இருந்தது.
தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், முதியோர்கள் இல்லம், வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்ததால் பட்ஜெட்டை வரவேற்றோம் என்று கூறினார்.
- அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- காலை உணவு திட்டம்கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
- ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2006-ல் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எனவே நாங்கள் அதை வரவேற்கிறோம்.
மதிய உணவு திட்டம் மட்டும் இருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் தே.மு.தி.க. கொண்டுவர இருந்த திட்டம்தான். காலை உணவு திட்டம் கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களும், விவசாயிகள் வாழ்வாதத்திற்கான திட்டங்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2006-ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.
தற்போது போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினரை கைது செய்வது தொடர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பிரேமலதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கேள்வி: 2026-ல் தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக தே.மு.தி.க.வின் இந்த பட்ஜெட் பாராட்டை எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது.தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம். தமிழக பட்ஜெட்டில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
கேள்வி: டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரை கைது செய்யப்படுவார்கள் என விஜய் கூறியது?
பதில்: அதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்தி உண் மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப் பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
- தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது.
- மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
பழனி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வரவேற்கத்தக்கது. இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உள்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டார்.
அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்மை தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
- நம்முடைய தொண்டர்கள் நேர்மையாகும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.
கிள்ளியூர்:
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் தே.மு.தி.க. குடும்ப விழாவும், நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடந்தது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பேசியதாவது:-
இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாக புதுக்கடை பகுதி விளங்குகிறது.
குமரி மாவட்டம் தாய்த்தமிழகத்தோடு இணைவதற்கு முக்கிய களமாற்றிய பகுதியாக புதுக்கடை உள்ளது. இந்த புதுக்கடையில் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி வருகிறது. நீங்கள் அனைவரும் கேப்டன் எப்படி இருக்கிறார் என்பது கேட்பது போல் இருக்கிறது. கேப்டன் சிறப்பாக இருக்கிறார். நலமாக இருக்கிறார். இன்றைக்கு சென்னை ஏர்போர்ட்டில் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.
உண்மை தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையினுடைய இரு பக்கங்களாகும். குறுகிய காலகட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் என்று அந்தஸ்தை பெற்ற கட்சி தே.மு.தி.க. ஆகும்.
தற்பொழுது தொய்வை சந்தித்தாலும் மீண்டும் எழுவோம் புதுக்கடையில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இது நேர்மையானவர்கள், அரசியல் தூய்மையானவர்கள் இருக்கக்கூடிய கட்சியினுடைய கூட்டம். பல்வேறு நிகழ்வுகளில் செல்வதற்காக வந்தபோது போலீசார் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூ டாது என அனுமதி மறுத்தனர். எதற்கு இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை நாங்கள் அதை எதிர்த்து போலீசாரிடம் பேசி இந்த விழாக்களை நடத்தி உள்ளோம்.
10-க்கும் மேற்பட்ட உபசரிப்பு நிகழ்வுகள் நடந்தது. நம்முடைய தொண்டர்கள் நேர்மையாகும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். நான் நல்லவர்களாக இருந்தது போதும் இனி வல்லவர்களாக மாற வேண்டும். நல்லவர்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள் முதுகில் குத்துவிடுகிறார்கள்.
இதனால் நம்மால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை. குமரி மாவட்டத்தில் வலுமிக்க கட்சிகளாக விளங்கும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் குமரி மாவட்டத்தை சீரழித்து வருகிறது.
பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. தற்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக பாஜக உள்ளது.
குமரியில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.