என் மலர்
நீங்கள் தேடியது "இனிப்பு"
- புதிய ரெயிலுக்கு ரெயில் பயணிகள் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் இணைந்து வரவேற்பு அளித்தனர்.
- ரெயிலின் கார்டு சேகருக்கு மாலை, சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
பாபநாசம்:
கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் தஞ்சை திருச்சி மதுரை வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதை அடுத்து தனது முதல் பயணத்தை தொடங்கிய வண்டிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டா டப்பட்டது.
டெல்டா பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறை கும்பகோ ணம் பாபநாசம் வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.
தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம், தென்காசி சங்கரன்கோவில் பகுதிகளை சேர்ந்த பயணிகள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே புதிய ரயில் வண்டி இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதை அடுத்து செங்கோட்டை விரைவு ரயில் முதல் சேவை மயிலாடுதுறையில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக பாபநாசத்திற்கு பகல் 13.30 மணிக்கு வந்து சேர்ந்தது.
புதிய ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வணிகர் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ராஜராஜன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி குழுத்தின் நெறியாளர் எஸ்.கே.ஸ்ரீதர் ரயில் வண்டியின் ஓட்டுனர்கள் மது, விஸ்வநாதன் மற்றும் ரயில் வண்டியின் கார்டு சேகர் ஆகியோருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
மேலும் திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன், சங்க தலைவர் சோமநாதராவ், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சாமிநாதன், சங்கர், பாபநாசம் வணிகர் சங்க செயலாளர் கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், அசோகன் ஆகியோரும் ஓட்டுனர்களுக்கு சால்வை கள் அணிவித்து சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியில் பாபநாசம் நகர தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பூம்புகார் கைவினை கழகத்தின் முன்னாள் தலைவர் சுவாமிமலை ஸ்ரீகண்டன் ஸ்தபதி, பாபநாசம் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சம்மந்தம், பாபநாசம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செந்தில்நாதன், பிரான்சிஸ்சேவியர், வெங்கடேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, பிரகாஷ், முத்துமேரிமைக்கேல்ராஜ், தேன்மொழிஉதயக்குமார், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ஓய்வு பெற்ற செய்திதுறை இணை இயக்குனர் கண்ணதாசன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த செங்கோட்டை விரைவு ரயில் வண்டி பாபநாசம் ரயில் நிலைத்திற்கு பகல் 12.20 மணிக்கு வந்து தஞ்சை, திருவெறும்பூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், தென்காசி வழியாக இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் செங்கோட்டை வழியாகவும், குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் தென்காசி வழியாகவும், வியாபார நிமித்தமாக அடிக்கடி செல்லும் வணிகர்களுக்கு உதவியாக மதுரை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்லமுடியும்.
குறைவான கட்டணத்தில் பாதுகாப்போடு பயணம் செய்யும் விதத்தில் பயணிகள் அனைவரும் இந்த ரயில் வண்டியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பாஸ்தாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று பாஸ்தாவில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மக்ரோனி - 1 கப்
பால் - 2 1/2 கப்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக்
கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.
அடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி
விட வேண்டும்.
பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி!!!
- விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கல்.
- பாட்டு போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றியதொடக்க ப்பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனைவரையும் தலைமையாசிரியர் மகாதேவன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளைய ராஜா நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மேரி, கிராம கமிட்டி உறுப்பினர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுகம் நேரு படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அப்போது மேலநம்ம ங்குறிச்சி கிராம கமிட்டி உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, மேசை, நாற்காலி, மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் என சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு உபகரண பொருட்களை பள்ளிக்கு வழங்கினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப ட்டது.
தொடர்ந்து,பாட்டு போட்டி, பேச்சு போட்டி களில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.
- இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.
- எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா?
இனிப்பு என்பது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒரு சுவை அன்று.
அது என்றோ ஒரு நாள் கிடைத்தால் தான் அதற்கு மரியாதை.
அதற்கு மேல் இனிப்பு சுவை அனுதினமும் கேட்பது மூளையில் ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கி விட்டதன் அர்த்தம்.
மூளையில் பரிசில் தரும் மையம் உள்ளது.
அதை Reward centre என்று கூறுவோம் .
மதிமயக்கும் விசயம் ஒன்றை நாம் செய்தால் அது பரிசில் தரும் இடத்தைத் தூண்டும்.
பிறகு மீண்டும் மீண்டும் அதையே செய்யச்சொல்லி மூளை நம்மை கட்டாயப்படுத்தும் .
மூளைக்கு அது நமது உடலுக்கு நன்மையான காரியமா? தீமை தரும் காரியமா? என்றெல்லாம் தெரியாது.
தனக்கு விருப்பமான தன்னை குதூகலத்தில் ஆற்றும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யச்சொல்லி நம்மை உந்தும் இந்த கூறுகெட்ட மூளை.
போதைப்பொருட்களான மது, கொகெய்ன் போன்றவை போலவே இந்த இனிப்பு சுவையும் அதிகமான அளவு மூளையின் பரிசில் தரும் மையத்தை தூண்டுகிறது .
இன்னும் சொல்லப்போனால் கொகெய்ன் போதைப்பொருளை விட சில மடங்கு அதிகமாக நாம் அனுதினம் உண்ணும் சீனி/சர்க்கரை போன்ற இனிப்பு சுவை தரும் உணவுகள் தூண்டுகின்றன என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
இந்த இனிப்பு சுவை இவ்வாறு மூளைக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துகின்றது.
இதில் இருந்து எப்படி வெளியே வருவது?
என்னதான் மூளை அடம்பிடித்தாலும் இனிப்பு உண்பதை ஒரு மாதம் நிறுத்தி விட்டால் தானாக மூளை வழிக்கு வந்துவிடும்.
இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.
எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா?
நீரிழிவு நோயர்களே.. தயவு செய்து இனிப்பு சுவை தரும் அத்தனை உணவுகளையும் இன்றிலிருந்து ஒரு மாதம் நிறுத்துங்கள்.
அதற்குப்பின்பு இனிப்பு கலக்காத பாலில் உள்ள தித்திப்பைக்கூட உங்கள் நாவின் சுவை அரும்புகள் உங்களுக்கு காட்டும்.
இனிப்பு சுவை என்பது மனிதனின் உடலுக்கு தீது உண்டாக்கவல்லது .
அதை மருந்தைப்போல எப்போதாவது பண்டிகைகளின் போது எடுக்கலாம்.
தேன் கூட மருந்து தான். அதை தினமும் எடுப்பது தவறு.
நம் முன்னோர்கள் எந்த காலத்திலும் நம்மைப்போல தினமும் சீனி/சர்க்கரை கலந்த இனிப்புகளை கண்டதுமில்லை... உண்டதுமில்லை...
இட்லி தோசை கூட ஆடம்பரமாக பண்டிகைகளுக்கு மட்டுமே வீட்டில் செய்யப்பட்ட காலங்கள் உண்டு. இன்று தினமும் இட்லி, தோசை உண்ணாத வீடுகள் இல்லை .
பப்ஸ், சமோசா டொரினோ கலர் போன்றவை எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் வீட்டுக்குள் வரும்.
ஆனால் இன்று நமது குளிர்சாதனப்பெட்டிகளில் எங்கும் குளிர்பானங்கள்.
மாலை நேர ஸ்நேக்ஸாக இத்தனை பண்டங்கள்.
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இனிப்பு சுவை.
நாம் இந்த இனிப்பு சுவைக்கு பிறந்த குழந்தை முதற்கொண்டு அடிமைப்படுத்துகிறோம்.
ஆறு மாதம் வரை நன்றாக பால் பருகி எடை கூடிய குழந்தை அதற்குப்பிறகு பிஸ்கட்/ இனிப்பு கலந்து பால் / இனிப்பு கலந்த உணவுகள் கொடுக்கப்பட்டு அதற்கு அடிமையாக்கப்படுகின்றன.
பிறகு இனிப்பு இல்லாத உணவுகளை அவை உட்கொள்ள மறுக்கின்றன.
இனிப்பு என்பது மருந்து போன்றது.
இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளலாம்.
-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
- புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்படும்.
- டிரைவர், கண்டக்டருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
வல்லம்:
தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு செங்கிப்பட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து கொரோனா பொது முடக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டிருந்தது.
இப்பேருந்தை மீண்டும் அதே வழிதடத்தில் இயக்கிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த செப்டம்பர் 26 அன்று செங்கிப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைதொடர்ந்து செப்டம்பர் 24 அன்று பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் திருஞானம் ஆகியோர் தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு நகர பேருந்து மீண்டும் இயக்கப்படும் என உறுதியளித்த அடிப்படையில் இன்றைய தினத்திலிருந்து மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.
இந்நிலையில் செங்கிப்பட்டியில் இன்று காலை 07 மணிக்கு வந்த இப்பேருந்திற்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேருந்திற்க்கு மாலை அணிவித்து, ஓட்டுனர், நடத்துனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் இரா.முகில், செங்கிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் லதா சுப்பிரமணியன், நிர்வாகிகள்ஜி.தங்கமணி, அய்யாராசு, பெரியசாமி, சம்சுதீன், இப்ராகிம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேருந்திற்க்கு வரவேற்பளித்தனர்.
- சர்க்கரை நோயாளிகளும் இந்த பாயாசத்தை குடிக்கலாம்.
- இதை ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
ஜவ்வரிசி - அரை கப்
தண்ணீர் - 3 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப்
தேங்காய் பால் - 3 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - விருப்பத்திற்கேற்ப
நெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.
இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.
- இந்த இனிப்பை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
- இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
பால் பவுடர் - 2 கப்
பால் அரை கப்
பொடி செய்யப்பட்ட சர்க்கரை - அரை கப்
நெய் - விருப்பத்திற்கேற்ப
விருப்பமான நட்ஸ் - விருப்பத்திற்கேற்ப
குங்குமப்பூ - 4 சிட்டிகை
செய்முறை
நட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்றவும்.
பின்னர் அதில் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கட்டி சேராதவாறு கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
இடையிடையே நெய்யை சேர்த்துக்கொண்டே வர வேண்டும்.
பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, ஓரங்களில் நெய் பிரிந்து வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும்.
அப்படி நன்கு கெட்டியாகி வரும் போது, சிறிது கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும். அவ்வாறு உருட்டும் போது, எளிதில் பந்து போலானால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் ஒரு அகலமான தட்டில் நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு, அதன் மேல் குங்குமப்பூ மற்றும் நறுக்கிய நட்ஸ்களை தூவி, ஒரு நெய் தடவிய ஸ்பூன் கொண்டு லேசாக அழுத்தி விட்டு, 30 நிமிடம் அறை வெப்பநிலையில் அப்படியே வைக்க வேண்டும்.
இறுதியில் ஒரு கத்தியால் அதை சதுர துண்டுகளாக வெட்டினால், சுவையான பால் பவுடர் பர்ஃபி தயார்.
- கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
கேரட் - 250 கிராம்
வெல்லம் - கால் கப்
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் பால் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - இரண்டு டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.
இப்போது சூப்பரான கேரட் பாயாசம் ரெடி.
- தென்னிந்திய விருந்துகளில் முக்கிய இடம் பிடிப்பது 'பாயாசம்'.
- இதில் பொட்டாசியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.
தேவையான பொருட்கள்:
இளநீர் - 200 மில்லி லிட்டர்
இளம் தேங்காய் - 200 கிராம்
பால் - ½ லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
மில்க்மெய்ட் - 1 கப்
சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்
முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 8
ஏலக்காய்த்தூள் - ¼ டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரிக்கவும்.
பின்பு முந்திரி, பாதாம், பிஸ்தா இவற்றை பொடிதாக நறுக்கவும்.
இளம் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு சிறிது பாலூற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் இளநீரை சேர்த்துக் கலக்கவும்.
அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடுபடுத்தவும்.
அதில் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
பிறகு அதில் பச்சைக்கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
வாணலியில் நெய் ஊற்றி சாரைப்பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அவற்றைப் பாலில் சேர்த்து கலக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து பாலை அடுப்பில் இருந்து இறக்கவும்.
பால் அறை வெப்பநிலைக்கு வந்ததும், அதில் இளநீர் மற்றும் இளம் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான 'இளநீர் பாயாசம்' தயார்.
- சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
- அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி
வெந்தயம் - 2 ஸ்பூன்
கருப்பட்டி - 300 கிராம்
ஏலக்காய் - 2
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.
ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.
அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.
- கார்த்திகை தீபத்திற்கு நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை செய்யலாம்.
- இந்த ரெசிபி ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
பால் - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
ஒரு வெறும் வாணலியில் அரிசி மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.
4 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டி காம்பால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சிறிது சிறிதாக போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும். வேகும் வரை பொறுத்திருந்து கிளறி விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.
சூப்பரான வெல்லம் பால் கொழுக்கட்டை ரெடி.
குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். சாதாரணப் பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.
- கார்த்திகை தீபமான இன்று இறைவனுக்கு படைக்க தேங்காய் பால் பாயாசம் செய்யலாம்.
- இந்த பாயாசம் செய்வது சுலபம், சுவையோ அருமை.
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
பச்சரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
காய்ந்த திராட்சை - 10
செய்முறை :
முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் வெந்நீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லம் சேர்த்து கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
தற்போது, தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
அதனுடன், வடிகட்டிய வெல்லம் சேர்த்து இந்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு திக்கான பதம் வரும் வரை கிளறவும்.
இறுதியாக, கடாயில் நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் பாயாசம் ரெடி..!.