என் மலர்
நீங்கள் தேடியது "வால்பாறை"
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து வால்பாறையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே வால்பாறையில் கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சுவர் இடிந்து விழுந்து சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்.
- வால்பாறை, பொள்ளாச்சியில் மழைக்கு 3 பேர் பலி.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (வயது 57) மற்றும் தனப்பிரியா (வயது 15) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியருக்குச் சொந்தமான ஓட்டுவீட்டின் மேற்குப்பக்கச் சுவர் இன்று இரவு பெய்த மழையினால் அதிகாலை சுமார் 3 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்தன.
- யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை, கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சிமுனை, பிர்லா நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலாதலங்களை காண ஏராளமான சுற்றுலாபயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் அமைந்துள்ள வால்பாறை மலைப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வனப்பகுதியில் பசுமை நிறைந்து காணப்படுவதால் மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் யானைகள் பல்வேறு எஸ்டேட்களில் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன.
குறிப்பாக குரங்கு முடி, வில்லோனி, பன்னிமேடு, அய்யர்பாடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் அச்சத்துடனேயே ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழைக்கு பின் வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால் தேயிலை எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் திருப்திரகமாக இருப்பதால் யானைகள் இங்கு வருகின்றன.
மனித விலங்கு மோதலை தடுக்க யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வால்பாறையில் எஸ்டேட் தொழிலார் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் விரும்பி உட்கொள்ளும் வாழை, பலா, கொய்யா மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. யானைகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி உணவு கிடைப்பதால் குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.
யானைகளுக்கு பிடித்தமான தோட்டப்பயிர்களை குடியிருப்பு பகுதிகளில் பயிரிட வேண்டாம் என்று வனத்துறையினர் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அதை எஸ்டேட் நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
- தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற தேயிலை தோட்டங்களும், இயற்கை காடுகளும் நிறைந்து காணப்படுகிறது.
இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு என்று நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் வால்பாறை இருந்து வருகிறது. அவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்து, கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
வால்பாறையில் உள்ள வனப்பகுதிகளில், காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்குள்ள தண்ணீர் தேங்கும் பகுதியில் தண்ணீர் குடிப்பதுடன், குளித்து நீந்தி மகிழ்ந்தும் வருகிறது.

சம்பவத்தன்று 8 காட்டு யானைகள் கூட்டம் குட்டியுடன் வனத்தை விட்டு வெளியேறி, தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு வந்தன. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.
பின்னர் யானைகள் தேயிலை தோட்டங்களையொட்டி உள்ள தண்ணீர் தேக்கும் பகுதி வழியாக காட்டு யானைகள் கூட்டம் நடந்து சென்றன.
அங்கு தண்ணீரை பார்த்ததும் யானைகள் கூட்டத்தில் இருந்த யானை ஒன்று மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தது.
தண்ணீரை கண்ட யானை துள்ளிகுதித்த படி தண்ணீருக்குள் இறங்கி, தண்ணீரை பருகியது. மேலும் தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது. அத்துடன் துதிக்கையால் தண்ணீரை ஊறிஞ்சி அதனை தனது உடல் முழுவதும் பீய்ச்சி கொண்டு மகிழ்ச்சியடைந்தது.
சில மணி நேரம் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்ட யானை, அதன்பிறகு யானை கூட்டத்துடன் சேர்ந்து, வனத்தை நோக்கி சென்றது.
அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் சிலர் வெகுதூரத்தில் இருந்து இந்த காட்சியை கண்டு ரசித்தனர். அதனை தங்கள் செல்போனில் வீடியோ, புகைப்படமும் எடுத்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிரவே தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
- 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
- சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஹினில்அன்சாரி-நசீரான்கதூம். இவர்களது மகள் அப்சார்கதூம் (வயது 4). இவர்கள் வால்பாறை ஊசிமலைமட்டம் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அவர்கள் தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது அங்கு வந்த ஒரு சிறுத்தை குழந்தை அப்சார்கதூமை தாக்கி கொன்றது. தகவலறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், சிறுத்தையை கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் பொருத்தி உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரிகள், "வால்பாறை தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ள 6 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி உள்ளோம். கண்காணிப்பு காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவான உடன் அந்த பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறுத்தையின் கால் தடம் மற்றும் புதர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. வீட்டில் இருந்து வெகுதொலைவில் தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் புதர்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர இறைச்சி மற்றும் உணவுக்கழிவுகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிறுத்தையை பிடிக்கும்வரை சம்பவம் நிகழ்ந்த தேயிலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டாமென சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.
- Leopard movement is currently increasing in residential areas, குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
- தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின.
வால்பாறை:
வால்பாறை பகுதியில் பொதுவாக பனிக்காலம் தொடங்கும் நிலையில் அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் சிறுத்தைகள் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி தின்றுவிட்டு தப்பி செல்வது வழக்கம்.
வால்பாறை கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் தேயிலைத்தோட்டத்தில் இருந்து குடியிருப்புக்குள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தன. தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின. பின்னர் அவை மீண்டும் குடியிருப்பில் இருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்திலும் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் மிதமான அளவில் மழை பெய்தது. இன்று காலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருள்போல காட்சியளித்தது.
தொடர்ந்து மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால், பாப்ப நாயக்கன்பாளையம், அண்ணாசிலை, லட்சுமில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
காலை நேரத்தில் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர். ஆங்காங்கே உள்ள நிழற்குடைகள், பாதுகாப்பான இடங்களில் மக்கள் நின்றனர். பலர் குடைபிடித்தபடியும், பிளாஸ்டிக் கவர், ஜர்க்கின் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான அளவில் மழை பெய்தது. மாலையிலும் மழை நீடித்தது.
இரவில் 7 மணிக்கு பிறகு கனமழை பெய்ய தொடங்கியது. இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை வெளுத்து வாங்கி வருகிறது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அக்காமலை, பச்சைமலை, சோலையார் அணை, சின்னக்கல்லார், பெரியகல்லார், கவர்க்கல் எஸ்டேட், ரொட்டிக்கடை, உருளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
மழையால் வால்பாறை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.
இரவு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக, வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, சூலூர், சுல்தான்பேட்டை, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் கோவையில் குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
வால்பாறை தாலுகா-57 நீரரார்-40, சோலையார் அணை-26
- எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
- மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரா எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
வனத்தை விட்டு வெளி யேறி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து, வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை அருகே உள்ள முடீஷ் பகுதியில் 2 தினங்களாக 13 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி முடீஸ் பகுதிக்குள் நுழைந்தது.
அங்கு வெகுநேரமாக சுற்றித்திரிந்த காட்டு யானைகள், மணிவண்ணன், கண்ணன் ஆகியோரின் மளிகை கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. உள்ளே இருந்த பொருட்களையும் தூக்கி போட்டும், தின்றும் சூறையாடி சென்றது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
ஊருக்குள் யானை நுழைந்தது குறித்து வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மானாம்பள்ளி வன சரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனத்திற்குள் விரட்டினர். குடியிருப்பு பகுதிக்குள் யானை நுழைந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- யானை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது.
- வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் உள்ளது.
இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து வருகிறது.
சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஈட்டியார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்பு பகுதியில் வெகுநேரமாக சுற்றிய காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றது.
அங்கு ரேஷன் கடையின் கதவை உடைத்து தள்ளியது. இந்த நிலையில் ரேஷன் கடையில் இருந்து சற்று தொலைவில், அன்னலட்சுமி (67) என்ற மூதாட்டியின் வீடு உள்ளது.
இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் அன்னலட்சுமி, கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தார். அப்போது யானை நின்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து ஓட முயன்றார்.
ஆனால் யானை அவரை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது. இதில் மூதாட்டி இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் அங்கு நின்றருந்த யானையை சத்தம் போட்டு காட்டுக்குள் விரட்டினர். பின்னர், காயம் அடைந்த மூதாட்டி அன்ன லட்சுமியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மானாம்பள்ளி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயம் அடைந்த அன்னலட்சுமிக்கு, மானாம்பள்ளி வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
- வால்பாறை மலைப்பாதையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாவுக்கு பெயர் போன ஊராகும். இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் அணைகளை கண்டுகளிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருப்பர்.
வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து விட்டு வால்பாறைக்கு செல்வார்கள்.
அங்குள்ள தேயிலை தோட்டங்களை பார்த்து விட்டு, அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்துக் கொள்வார்கள்.
கடந்த சில நாட்களுக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியான மைக்கேல் (வயது73), என்பவர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார்.
அவர் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் வால்பாறை நோக்கி சுற்றுலாவுக்காக பயணித்து கொண்டிருந்தார்.
வாட்டர் பால்ஸ் அருகே சென்றபோது காட்டு யானை ஒன்று சாலையை மறித்து நின்றிருந்தது. ஆனால், மைக்கேல் யானை நிற்பதையும் தாண்டி, அந்த பகுதியை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது அந்த யானை, மைக்கேலை தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
வால்பாறை மலைப்பாதையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கவியருவி, நவமலை, வாய்க்கால் மேடு, 1-வது கொண்டை ஊசி வளைவு, 14-வது கொண்டை ஊசி வளைவு, அட்டகட்டி, வாட்டர் பால்ஸ், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதை அடுத்து, பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரை தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் மற்றும் துணை கள இயக்குனர் அறிவுறுத்தலின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வால்பாறையில் வசிக்கும் மக்களுக்கும் பொருந்தும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.