என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னர்"

    • வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது.

    வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. வாலென்சியா பகுதியில் மட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. பலர் மாயமாகி உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. ஆனாலும் மீட்புப் பணி சரியாக நடக்கவில்லை என்று மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

    இந்த சூழலில் வாலென்சியாவில் பைபோர்ட்டோ நகரில்  வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் அவரது மனைவி, ராணி லெட்டிஸியா வருகை தந்தனர். அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.

    பாதுகாலவர்கள் புடை சூழ ராணியுடன் மன்னர் ஃபிலிப் வருவதை பார்த்த மக்கள் ஆத்திரத்தில் அவர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே சாலையில் கிடந்த சேற்றை அள்ளி மன்னர் மீதும் ராணி மீதும் வீசினர். இதனால் மன்னரின் முகம் மற்றும் ஆடைகள் சேறானது. உடன் வந்த ஸ்பெயின் பிரதமரும் இதில் சிக்கிக்கொண்டார்.

    உடன் இருந்த பாதுகாவலர்கள் உடனே மன்னரை சுற்றி அரணாக நின்றனர். அவர்களை விலக்கி ஆத்திரமுற்றிருந்த மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மன்னர் பேசினார். ஆனால் கோபத்தில் இருந்த மக்கள் அவரை கடுமையாக திட்டித் தீர்த்தனர். நிலைமை சரியில்லாததால் ராணியுடன் அந்த இடத்தில் இருந்து மன்னர் அகன்றார். மன்னர் மீதே சேறு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 77-வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏ விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார்.
    • குல தெய்வ கோவிலான ஏக்லிங்நாத் கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மேவார் அரசு குடும்பத்தைச் சேர்த்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை உதய்பூர் அரண்மனையில் மோதலாக வெடித்துள்ளது. மேவார் அரச குடும்பத்தின் 77-வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏவும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார். மன்னர் குடும்பத்தைச் சேர்த்த விஸ்வராஜ் சிங்கின் தந்தை மகேந்திர சிங் மேவார் கடந்த 10 ஆம் தேதி காலமானதை அடுத்து யார் முடிசூட்டுவது என்று உறவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் விஷ்வராஜ் முடிசூட்டிக்கொண்டது அரண்மனை அறக்கட்டளையை நிர்வகித்து வரும் விஷ்வராஜ் சிங்கின் சித்பவாவுக்கும், ஒன்றுவிட்ட சகோதரர் லக்ஷ்ய ராஜ்ஜுக்கும் பிடிக்கவில்லை. ஏற்கவனே இவர்களுக்குள் பகை இருந்த நிலையில் நேற்று முடிசூட்டிக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு சடங்கு சம்பிரதாயப்படி , விஸ்வராஜ் சிங் உதய்பூர் அரண்மனைக்கு வந்துள்ளார்.

     

    ஆனால் அவருக்கு உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குல தெய்வ கோவிலான ஏக்லிங்நாத் கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த விஷ்வராஜ் சிங், பாஜக எம்எல்ஏ 3என்ற தனது செல்வாக்கை பய்னபடுத்தி தனது ஆதரவாளர்களுடன் அரண்மை வசாலில் நின்றபடி உள்ளே கற்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளார்.

    பதிலுக்கு அரண்மனை உள்ளே இருந்தவர்களும் கற்களை வீசியதால் மோதல் பெரிதாகி அரண்மனை பகுதியே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. பதற்றம் அதிகரித்தால் அரண்மனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் விஷ்வராஜ் தரப்பில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். விஸ்வராக் ஆதரவாளர்களான பாஜக தொண்டர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்தது.

    இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அரண்மனை கதவு முன்பாக விஷ்வராஜ் சிங் தனது ஆதரவாளர்களுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தால் உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் தலையிட்டுள்ளார். இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்க்க உள்ளதாக விஸ்வராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

    • கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை
    • டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

    ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன்லாந்து என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

    22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.

    இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் 2019 இல் அவர் அதிபராக இருந்தபோதே விருப்பம் தெரிவித்தார்.

    அதற்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்தது. 2020 இல் நடந்த தேர்தலில் டிரம்ப் ஜோ பைடனுடன் ஆட்சியை பறிகொடுத்தார்.

    ஆனால் 2024 நவம்பரில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். எனவே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கிரீன்லாந்து தீவை வாங்கும் பேச்சை கொளுத்தி போட்டுள்ளார்.

    கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை என்று தனக்கு சொந்தமாக ட்ரூத் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் டிரம்ப் பதிவிட்டார்.

    இதற்கு கடும் கண்டம் தெரிவித்த டென்மார்க் பிரதமர் Múte Egede, கிரீன்லாந்து எங்களுடையது, நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தை நாம் இழக்கக் கூடாது என்று தெரிவித்தார்

    இந்நிலையில் தற்போது டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக் நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த அரச கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தில் அவற்றில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.

    புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு [raam] குறியீடு இடம்பெற்றுள்ளது.

    முன்னதாக டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் இடையே உள்ள கல்மார் யூனியன் மரபை குறிக்கும் விதமாக முந்தைய அரச கோட்கள் ஆப் ஆர்ம்ஸ் சின்னம் இருந்தத நிலையில் தற்போது அதை மாற்றி டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

    முன்னதாக அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணச் செலவைக் குறைக்காவிட்டால், பனாமா கால்வாய் மீதான உரிமையை மீண்டும் அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    கனடாவை நாடு என்ற அந்தஸ்தில் இருந்து குறைத்து அமெரிக்காவின் மாகாணமாக மாற்றுவோம் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இவ்வாறு வெளிநாடு அரசுகளில் டிரம்ப்பின் அதிக பிரசங்கித்தனம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    மரணம் அடைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சேதுபதி மன்னா் பரம்பரை வாரிசான குமரன் சேதுபதி, இளைய மன்னா் என அழைக்கப்பட்டு வந்தாா். பல மாதங்களாக உடல் நலப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவா் நேற்று காலையில் வீட்டிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாா்.

    அவருக்கு மனைவிலக்குமி குமரன் சேதுபதி, மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திரசேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியாா் உள்ளனா்.குமரன் சேதுபதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    குமரன் சேதுபதி, ராமேசுவரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

    அவரது உடல் அரண்மனை வளாகம் ராமலிங்க விலாசத்தில் உள்ள தா்பாா் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    சகோதரரின் உடலுக்கு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியாா், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    அமைச்சர் ராஜகண்ணப்பன்,  ராமநா தபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கா்லால் குமாவத், கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன், அரண்மனை வகையறாவைச் சோ்ந்தவரும், தி.மு.க.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி, பா.ஜனதா பிரமுகா் சுப.நாகராஜன்.

     மதுரை 4-ம் தமிழ்ச்சங்க செயலா் மாரியப்பமுரளி, முன்னாள் அமைச்சா் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆா்.ராமசாமி, முதுகுளத்தூா் முருகன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வத்தின் மகன் பிரதீஷ், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிா்வாகி திருமாறன், ராமநாதபுரம் நகரசபை தலைவா் காா்மேகம் உள்பட பிரமுகர்கள், பொதுமக்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். 

    இன்று (புதன்கிழமை)மாலை அரண்மனை வளாகத்தில் உள்ள ராமலிங்க விலாசத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 
    ×