என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்ஹாரன்"

    • அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன் பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    • வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகமது கூறியதாவது:-

    மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். அதன்படியே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இருசக்கர வாகனங்களில் சைலன்சர் மற்றும் கைப்பிடிகளில் தாங்களாகவே மாற்றம் செய்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் சைலன்சர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக ஒலியுடனோ, விசித்திரமான ஒலிகளுடனோ மாற்றம் செய்து அதிக ஒலி மாசு ஏற்படும் வகையில் இயக்கினால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல மோட்டார் சைக்கிளில் ஹேண்டில் பார்களில் மாற்றம் செய்து இயக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிக ஒலி கொண்ட ஏர்ஹாரன்களை இயக்கி வருகின்றனர். இத்தகைய ஏர்ஹாரன்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இதுதவிர காரில் முன் இருக்கைகள் மற்றும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட்பெல்ட் அணிய தவறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் காவல்துறையுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஸ்-லாரிகளில் ஏர்ஹாரன் பயன்படுத்தக் கூடாது என போலீசார் அதிரடி உத்தரவு.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது குறித்து அரசுபணிமனை மேலாளர்கள், தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. 

    விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர்  உத்தரவின் பேரில், ராஜபாளையம் பொறுப்பு டி.எஸ்.பி சபரிநாதன் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த கூட்டத்தில்  போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் (நெடுஞ்சாலை), நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா  ஆகியோர்  தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    அப்போது அவர்கள் பேசியதாவது:-

    ராஜபாளையம்- தென்காசி ரோடான மெயின்ரோடு,மதுரை ரோடுகளில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தி ற்காகவும்,பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் குழா ய்கள் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

    போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் இரவில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன.இருப்பினும் சாலைகள் சீரமைக்கப்படும் வரை வாகனங்கள் ஒருவரை ஒருவர் முந்தாமல்   சீரான வேகத்தில் கவனமாக இயக்கி ஒத்துழைப்பு தரவேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை தாங்களே முன்வந்து அகற்றிவிடக்கோரி கல்விநிறுவன பஸ்கள், நூற்பாலை பஸ்கள் மற்றும் லாரிகள்,தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு உத்தரவு கடிதம் அனுப்பட்டு விட்டது. இதையும் மீறி பயன்படுத்தப்படும் ஏர்ஹாரன்கள் போலீஸ் மூலம் அகற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    மேலும்தென்காசி ரோட்டில் காந்திகலை மன்றம் அருகே சாந்தி தியேட்டர் அருகே ஸ்டேட் பேங்க் முன்பு பஸ் நிறுத்தம் செயல்பட அனுமதி கிடையாது.அங்கு வாகனங்களை நிறுத்தி ஆட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது.

    இது ஆட்டோக்களுக்கும் பொருந்தும். தெற்கே இருந்து வடக்கு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்திசிலை ரவுண்டானாவில் இருந்து இடது புறமாக சென்று நீதிமன்றம் வழியாக மாடசாமிகோவில்தெருவை அடைந்து பஞ்சுமார்க்கெட் நேரு சிலை வழியாக மதுரை ரோட்டை சென்றடைய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிரோடு வரையிலான இணைப்பு சாலை,கூடிய விரைவில் வர இருப்பதாலும், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிசாலையும் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாலும் போக்குவரத்து இயல்பு வாழ்க்கை திரும்ப வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
    ×