என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கோடா"

    • ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
    • கார்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் இவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் கார் மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனை ஸ்கோடா இந்தியா பிரான்டு இயக்குநர் பீட்டர் ஜனேபா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.


     

    ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற மிட்சைஸ் செடான்கள், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடல்களில் தற்போது லெவல் 2 ஆட்டோனோமஸ் டிரைவல் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதி வழங்கப்பட்டு விட்டது. எனினும், ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜனேபா, "ADAS 2.0-வை பொருத்தவரை MQB AO-IN பிளாட்ஃபார்மில் உருவான அனைத்து கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களிலும் படிப்படியாக வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்தார்.


     

    தொடர்ந்து பேசிய அவர், "இந்திய சந்தை மிகவும் அதிவேகமான ஒன்று. எங்களது போட்டியாளர்கள் இன்றைய சூழலில் அதிவேகமாக செயல்படுகின்றனர், ஆனால் நாங்கள் விரைவில் இந்த நிலையை எட்டிவிடுவோம். ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மட்டுமின்றி இடையில் வேறுசிலவற்றையும் கொண்டுவருவோம்."

    "அந்த வகையில், 2.5 மாடல்களான காம்பேக்ட் எஸ்.யு.வி.-யில் தற்போது குஷக் மாடலில் இல்லாத சில அம்சங்களும் வழங்கப்படும். இதில் ஒன்று 360-டிகிரி கேமரா," என்று அவர் தெரிவித்தார்.

    அதன்படி மார்ச் 2025 அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்.யு.வி.-க்களில் லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    • டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
    • காரில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

    ஸ்கோடா நிறுவனம் தனது கோடியக் எஸ்.யு.வி.-இன் வேரியன்ட்களை மாற்றியுள்ளது. முன்னதாக மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோடியக் தற்போது டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், இதன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.

    ஸ்கோடா கோடியக் L&K வேரியண்ட் ரூ. 41 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை தற்போது ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. விலை, வேரியண்ட் மாற்றப்பட்டது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    கோடியக் மாடலில் 190 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக கோடியக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • அதிக அம்சங்கள் கொண்ட டாப்-எண்ட் மான்ட் கார்லோ தற்போது ப்ரெஸ்டீஜ் வேரியண்டின் கீழே உள்ளது.
    • டாப் 10-ல் முதலிடம் வகிக்கும் ஸ்லாவியாவின் விலைகள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளன.

    ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மிட்சைஸ் செடான் மற்றும் குஷாக் மிட்சைஸ் எஸ்யூவியின் மாடல்களின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை குறைத்துள்ளது. இத்துடன் கார் வேரியண்ட்களுக்கு புதிய பெயர்களையும் ஸ்கோடா வைத்துள்ளது.

    மேற்கூறிய மாடல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இந்தக் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

    குஷாக் மாடல் இப்போது ரூ.10.89 லட்சம் முதல் ரூ.18.79 லட்சம் வரையிலும், ஸ்லாவியாவின் விலை ரூ.10.69 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 11.99 லட்சமாக இருந்த குஷாக் ஆக்டிவ் தொடக்க விலை இப்போது ரூ.1.1 லட்சம் குறைந்துள்ளது.


    இந்த காரின் டாப் எண்ட் மாடல் இப்போது ப்ரெஸ்டீஜ் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 16.09 லட்சம் முதல் ரூ. 18.79 லட்சம் வரை உள்ளது. இது முந்தைய டாப்-எண்ட் வேரியண்ட் உடன் (ரூ. 17.29 லட்சம்-20.49 லட்சம்) ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் குறைவு ஆகும்.

    அதிக அம்சங்கள் கொண்ட டாப்-எண்ட் மான்ட் கார்லோ தற்போது ப்ரெஸ்டீஜ் வேரியண்டின் கீழே உள்ளது. மேலும் இதன் விலை ரூ.15.60 லட்சம் முதல் ரூ.18.30 லட்சம் வரை இருக்கும்.

    ஸ்லாவியா ஆக்டிவ், மிட்சைஸ் செடான் பிரிவில் எண்ட்ரி லெவல் மாடலாக இருந்தது. இதன் விலை ரூ.11.63 லட்சம். இருப்பினும், புதிய ஸ்லாவியா கிளாசிக் தொடக்க நிலை விலையை ரூ.94,000 குறைந்து ரூ.10.69 லட்சமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, டாப் 10-ல் முதலிடம் வகிக்கும் ஸ்லாவியாவின் விலைகள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளன.

    • ரூ. 5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம்.

    ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடல் கோடியக் வாங்குவோருக்கு குறுகிய கால சிறப்பு சலுகை அறிவித்து இறுக்கிறது. அதன்படி இன்று (நவம்பர் 19) நள்ளிரவுக்குள் புதிய ஸ்கோடா கார் வாங்குவோருக்கு ரூ. 5 லட்சம் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஸ்கோடா கோடியக் மாடல் ஒற்றை டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவை 2023 மாடலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தவிர கோடியக் எஸ்யுவி மாடலின் புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய தலைமுறை கோடியக் மாடல் தற்போதுள்ள மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பவர்டிரெயின் ஆப்ஷன்களிலேயே கிடைக்கும் என்று தெரிகிறது. எனினும், வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படலாம்.

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் புது வேரியண்ட் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இதில் சன்ரூப் மற்றும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஸ்கோடா குஷக் மாடலின் புது வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR (non-sunroof -NSR) என்று அழைக்கப்படுகிறது. புது மாடல் ஸ்கோடா குஷக் ஸ்டைல் வேரியண்டை விட ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும்.

    பெயருக்கு ஏற்றார் போல் புது வேரியண்டில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டைல் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் ஸ்டைல் வேரியண்டை அப்டேட் செய்து 8 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கியது.


    ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR மாடலில் டிஜிட்டல் டையல்கள் நீக்கப்பட்டு வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. குஷக் ஸ்டைல் NSR மாடலில் 1.0 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

    புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறியது.
    • ஸ்லேவியா கார் ஸ்கோடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செடான் ரக மாடல் ஆகும்.

    வாகன நிறுத்தம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கோடா ஸ்லேவியா மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடந்த ஜூன் மாத வாக்கில் இந்த சம்பவம் அரங்கேறியது. ஸ்கோடா கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

    வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் கார் உரிமையாளரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளது. சம்பத்தன்று காரின் உரிமையாளர் தனது ஸ்லேவியா மாடலை இரவு 10 மணிக்கு வாகன நிறுத்தத்தில் நஇறுத்தி இருக்கிறார். விடியற்காலை 3 மணி அளவில் கார் தானாக தீப்பிடித்து எரிந்து இருக்கிறது. இது குறித்து வெளியான வீடியோவில் கார் வாகன நிறுத்தத்தின் தரைதளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

    கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதனை நிறுத்த பல முறை முயற்சித்தும் தீ கட்டுக்கள் வரவில்லை. மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த போதிலும் காரில் பற்றிய தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கார் வாங்கியதில் இருந்து வெறும் 4 ஆயிரம் கிலோமீட்டர்களே ஓடிய நிலையில், ஸ்லேவியா கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது பற்றிய வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் தரப்பில் உரிமையாளரிடம் அவற்றை நீக்க வலியுறுத்தப்பட்டது.

    பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து காரின் உரிமையாளர் கார் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்தார். அதன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா சார்பில் குழு ஒன்று எரிந்த காரில் சோதனை நடத்தியது. எனினும், ஸ்கோடா தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின் காரின் உரிமையாளர் கார் காப்பீடு செய்யப்பட்ட நிறுத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.

    நான்கு மாத போராட்டத்திற்கு பின் காரின் உரிமையாளருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய கார் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய விசாரணையில் கார் உற்பத்தியின் போது தவறுகள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனினும், ஸ்கோடா இந்தியா சார்பில் தவறுக்கு பொறுப்பேற்கப்படவில்லை என்றும் தொடர்ந்து வாக்குவாதம் செய்யப்பட்டதாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது மாடல் ஸ்கோடா குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும்.

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகை மற்றும் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன் இணைந்துள்ளது.

    ஏற்கனவே ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், ஆனிவர்சரி எடிஷன் குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன்- கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் என இரண்டு விதமான நிறங்களில் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் காரின் பக்கவாட்டு கிளாடிங், டோர் எட்ஜ் கார்டு உள்ளிட்டவைகளில் சில்வர் இன்சர்ட் மற்றும் சி பில்லர் டீக்கல் மீது ஆனிவர்சரி எடிஷன் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர புதிய ஆனிவர்சரி எடிஷனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஷக் ஸ்பெஷல் எடிஷன் மாடல் குஷக் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது ஸ்கோடா குஷக் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என இருவித என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொருத்தவரை புதிய ஸ்கோடா குஷக் ஆனிவர்சி எடிஷன் ரூ. 15 லட்சத்து 59 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 09 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஸ்கோடா நிறுவனம் பல்வேறு புது கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

    ஸ்கோடா நிறுவனம் கடந்த மாதம் நெக்ஸ்ட் விஷன் கான்செப்ட் மாடல் வரைபடங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த காரின் டிசைன் வரைபடங்களை ஸ்கோடா வெளியிட்டு உள்ளது. கான்செப்ட் மாடல் விஷன் 7S என அழைக்கப்படுகிறது. இந்த கார் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட 7-சீட்டர் மாடல் ஆகும். டிசைன் வரைபடங்களில் இந்த கார் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய விஷன் 7S எஸ்யுவி மாடல் என ஸ்கோடா தெரிவித்து உள்ளது. வரைபடங்களின் படி இந்த காரின் வீல் ஆர்ச்கள் மீது பிளாக்டு-அவுட் கிளாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட், ஏழு செங்குத்தான ஸ்லிட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கிரில் மெல்லியதாக மாற்றப்பட்டு, ஹெட்லேம்ப் அதிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய டிஆர்எல்கள் காணப்படுகிறது.


    காரின் பின்புறம் டி டிசைன் டெயில் லேம்ப்கள், ரேன்க்டு ரியர் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளது. ஒட்டுமொத்த டிசைனுக்கு ஏற்ப இந்த காரின் விங் மிரர்கள் மெல்லியதாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    வரும் வாரங்களில் இந்த கார் பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் எஸ்யுவி மாடல் விலை மீண்டும் முன்பதிவு செய்யப்படுகிறது.
    • புதிய ஸ்கோடா கோடியக் மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கி இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் விலை ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ல்கோடா கோடியக் மாடல் ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் L&K என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்பதிவு துவங்கிய கையோடு கார் மாடல் விலையையும் ஸ்கோடா நிறுவனம் உயர்த்தி இருக்கிறது. ஸ்கோடா கோடியக் எஸ்யுவி மூன்று வேரியண்ட்களின் விலையும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.


    இந்த காருக்கான புதிய முன்பதிவுகள் 2023 முதல் காலாண்டுக்கானது ஆகும். 2023 ஆண்டுக்கான முன்பதிவு பல கட்டங்களாக பின்னர் துவங்கும். 2023 முதல் காலாண்டிற்கான வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    ஸ்கோடா கோடியக் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ஸ்கோடா கோடியக் ஸ்டைல் ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம்

    ஸ்கோடா கோடியக் ஸ்போர்ட்லைன் ரூ. 38 லட்சத்து 49 ஆயிரம்

    ஸ்கோடா கோடியக் L&K ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்திய சந்தையில் இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. என்யாக் iV எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் மாடலே இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்பை படங்கள் பூனேவுக்கு அருகாமையில் எடுக்கப்பட்டுள்ளன. சாலையில் காணப்பட்ட ஸ்கோடா என்யாக் iV மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காணப்படுகிறது.


    Photo Courtesy: Twitter / @madhavrajpuroh2

    இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் என்யாக் iV மாடல் தான் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா என்யாக் iV மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஸ்கோடா என்யாக் iV மாடல் 55 கிலோவாட் ஹவர், 62 கிலோவாட் ஹவர் மற்றும் 82 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவை முறையே 340 கிமீ, 360 கிமீ மற்றும் 510 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. சர்வதேச சந்தையில் ஸ்கோடா என்யாக் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய குஷக் மாடல் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை மாற்றியமைத்து இருக்கிறது.

    ஸ்கோடா குஷக் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை அடியோடு மாற்றியமைத்து இருக்கிறது. குஷக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் குஷக் மாடல் அறிமுகமாகி ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இந்த நிலையில், ஸ்கோடா நிறுவனம் 28 ஆயிரத்து 629 குஷக் யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. ஜூன் 2022 வரையிலான விற்பனையில் இத்தனை யூனிட்கள் பதிவாகி உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரத்து 386 யூனிட்களை ஸ்கோடா நிறுவனம் விற்றுள்ளது.


    விற்பனையை மேலும் அதிகப்படுத்த ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மற்றொரு புது வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. செமி கண்டக்டர் குறைபாடு மற்றும் விலை உயர்வு காலக்கட்டத்தில் மற்றொரு புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது அசத்தல் முடிவாக பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா அறிமுகம் செய்த புதிய குஷக் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குஷக் ஸ்டைல் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மாடல் ஆகும். இதில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது. 

    • ஸ்கோடா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 7 சீட்டர் மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடல் மிகவும் வித்தியாசமான இண்டீரியர் கொண்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் புதிய விஷன் 7S கான்செப்ட் மாடல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஸ்கோடா விஷன் 7S டீசரில் புதிய காரின் இண்டீரியர் எப்படி காட்சியளிக்கும் எனதெரியவந்துள்ளது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் ஆகும்.

    ஸ்கோடா விஷன் 7S கான்செப்ட் மாடலில் 7 சீட்டர் செட்டப் உள்ளது. இது மிகவும் வித்தியாசமான 6+1 வடிவில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரியவர்கள் ஆறு பேரும், ஒரு இருக்கை குழந்தைகளை அமர வைக்க பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டு கார் கதவுகள் வரை நீள்கிறது. முன்புற இருக்கையில் உள்ள ஹோல்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    புதிய விஷன் 7S மாடல் டிரைவிங் மற்றும் ரிலாக்சிங் என இருவித சூழல்களுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிரைவிங் மோடில் கண்ட்ரோல்கள் வழக்கமான கார்களில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. ரிலாக்ஸ் மோடில் பின்புற இருக்கைகள் சற்றே பின்புறம் நகர்ந்து அதிக இடவசதியை ஏற்படுத்துகிறது. இது சவுகரியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

    கடந்த மார்ச் மாத வாக்கில் ஸ்கோடா அறிவித்த முற்றிலும் புதிய டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டு ஸ்கோடா விஷன் 7S உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் மொழியில் ஸ்கோடா நிறுவனத்தின் மதிப்புகளை எடுத்துரைக்கும் திடத்தன்மை, செயல்பாடு மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றை சார்ந்து கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    ×