என் மலர்
நீங்கள் தேடியது "வீடுகளுக்கு"
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடந்து வருகிறது. இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
- நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 70) என்பவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீ சார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசே கரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பா ளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் மேலும் அசம்பாவி தங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேடர்பாளையம் பகுதி யில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் நித்யாவின் உறவினர்க ளுக்கு இந்த தீ வைப்பு சம்ப வத்தில் தொடர்பு இருக்க லாம் என்று கூறப்படும் நிலையில், அவர்களை அழைத்து போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வன்முறை களுக்கு தீர்வு காண வேண்டும். பதட்டமான சூழ்நிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஈரோடு ஊராட்சி ஒன்றிய சமத்துவபுரத்தில் 63 வீடுகளுக்கான ஆணையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்
- மேலும் இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள புறவழிச் சாலையினை கடக்க ஏதுவாக மேம்பாலம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ள்ளதை யொட்டி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சித்தோடு ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி–யின் வகுப்பறை வெளிப்பு–றத்தில் புகை வண்டி மாதிரி ஓவியங்கள் வரையப்பட்டி–ருந்ததை பார்வையிட்டார். மேலும் இப்பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான பாடப்புத்தகங்களை வழங்கினார்.
இதனைதொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றியம், சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் 63 வீடுகளுக்குபணி ஆணை வழங்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு வீட்டிற்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசுதல் மற்றும் சிறு சிறு பழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆ ய்வு மேற்கொண்டார்.
மேலும் இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள புறவழிச் சாலையினை கடக்க ஏதுவாக மேம்பாலம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து சமத்துவ–புரத்தில் உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகளின் வருகை குறித்து கேட்டறிந்து வருகை தராத குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, சமத்து வபுரத்தில் உள்ள ரேஷன்க்கடையில் ஆய்வு செய்து பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாநகராட்சி ஆசிரமம் மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் கனரா வங்கியின் சார்பில் கிராமசுயவேலை வாய்ப்பு பயிற்சியில் 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் மற்று ம்வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், கம்ப்யூட்டர்டேலி பயிற்சி, பெண்களுக்கா ன தையற்கலை, ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயின்டிங், ஜுட் பொருட்கள் தயாரித்தல், செயற்கை நகை தயாரித்தல், அழகுக்களை போட்டோ கிராபி, வீடியோ கிராபி பேப்பர் பை தயாரித்தல், பைல் தயாரித்தல், செல்போன்கள் சர்வீஸ், வீட்டு உபயோகப் பொருள் தயாரித்தல், சோப்புபவுடர், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் வீட்டுமின் சாதனப் பொருட்கள் பழுது பார்த்தல், மூங்கில், பிரம்ப நாற்காலி மற்றும் அழகு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த ஆய்வுகளின் போது, முதன்மைகல்விஅலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, தங்கவேல், உதவி பொறியாளர் செந்தில்கு–மார், முதன்மை வங்கி பொது மேலாளர் ஆனந்தகுமார், உத வி பொது மேலாளர் சங்கர், கனரா வங்கி பயிற்சி நிலைய இயக்குநர் கவுரிசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
- கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடிஇன்று முதல் வழங்கப்படுகிறது.
- இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 75-வது சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் போது அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக இலவசமாக வீடு தோறும் கொடி வழங்கும் நிகழ்வுக்காக நிதி சேகரிக்கப்பட்டது.
நகரில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலமாக ரூ.1 லட்சம் சேகரிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ 75 ஆயிரத்தை வழங்கினார்்கள். மேலும் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 18 ஆயிரம் கொடிகள் அச்சிடப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.
இன்று முதல் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுகள் தோறும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், நகரமைப்பு அலுவலர் சேகரன், உதவி பொறியாளர்கள் கோமதி, ராஜேஷ், மேலாளர் ஜோதி–மணி ஆகியோர் மேற்பார்வை–யில் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன் உள்ளிட்டவர்கள் தலைமையிலான குழுவினர் தேசிய கொடியினை வீடுகள் தோறும் வழங்க உள்ளனர்.