என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட விபத்து"

    • தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.
    • புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் கட்டுமானத்திலிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

    பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

    புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
    • அமைச்சர் சேகர்பாபு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

    சென்னை:

    சென்னை சவுகார்பேட்டை தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது.

    கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் இந்த கட்டிடம் வலுவிழந்து காணப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை இந்தக் கட்டிடம் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது. இதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு , காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    கனமழையால் கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்
    • இந்த விபத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாத பழைய கட்டிடத்தை ஜேசிபி எந்திரம் மூலம் இன்று இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மதுரையை சேர்ந்த பிரியா என்பவர் உயிழந்தார்.

    இந்த விபத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுச்சுவர் இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு ஊழியர் விக்னேஷ் குமார் காயமடைந்தார்.
    • ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் ஆனந்த் தியேட்டர் அருகில், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பழமையான கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது. ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடட்னர். அப்போது அந்த கட்டிடத்தின் காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய ஐடி பெண் ஊழியர் பத்ம பிரியா உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் விக்னேஷ் குமார் காயமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசிபி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    • அண்ணா சாலையில் பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
    • பத்ம பிரியா இறந்ததை கேள்விப்பட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் தோழிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் இன்று காலையில் பழமையான கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் தியேட்டர் அருகில் பழமையான கட்டிடம் ஒன்று நீண்ட காலமாக ஆபத்தான முறையில் இருந்து வந்தது. இதனை இடிக்கும் பணி இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது.

    ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து சாலையோரமாக விழுந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது.

    காலை நேரம் என்பதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அண்ணா சாலையில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள் வேக வேகமாக தங்களது அலுவலகங்களுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது நிரம்பிய பத்ம பிரியா மற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் விக்னேஸ் குமார் இருவரும் அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். பலத்த சத்தத்துடன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.

    இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட இருவரையும் பத்திரமாக மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இதனால் அண்ணா சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் அகற்றி பார்த்தனர். அப்போது ஐ.டி. பெண் ஊழியரான பத்ம பிரியா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். வாலிபர் விக்னேஷ் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டருந்தது.

    உடனடியாக பத்ம பிரியாவை ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பத்ம பிரியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அவரது அலுவலக ஊழியர்கள் மற்றும் தோழிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    திடீரென ஏற்பட்ட கட்டிட விபத்தில் இளம்பெண் பத்ம பிரியா உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர், உறவினர்கள் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பத்ம பிரியா பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

    பத்ம பிரியாவின் சொந்த ஊர் மதுரை உசிலம்பட்டி ஆகும். தந்தை பெயர் பாண்டி முருகேசன். தாய் பாண்டி முருகேஸ்வரி. பத்ம பிரியா ஐ.டி. படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் தான் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பத்ம பிரியா கடந்த டிசம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்து உள்ளார். பெற்றோரும் தங்கள் மகளை ஆசை ஆசையாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பத்ம பிரியாவின் சித்தி வீடு பல்லாவரம் அருகில் உள்ள பம்மலில் உள்ளது. அங்கு தங்கி இருந்து தான் தினமும் இவர் வேலைக்கு சென்று வந்தார். மெட்ரோ ரெயிலில் ஆயிரம் விளக்கு வந்து அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக அலுவலகத்துக்கு நடந்து செல்வதை பத்ம பிரியா வழக்கமாக வைத்திருந்தார்.

    இன்று காலையிலும் அது போன்று அவர் நடந்து சென்றார். அப்போது தான் திடீரென இடிந்து விழுந்த கட்டிட சுற்றுச்சுவர் பத்ம பிரியாவின் உயிரை பறித்ததும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொது இடங்களில் பழமையான கட்டிடங்களை இடிக்கும்போது யாருக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் தனியார் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் எந்தவித முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யாமல் கட்டிடத்தை இடித்துள்ளனர். இதன் காரணமாகவே அநியாயமாக இளம்பெண் ஒருவரின் உயிர் ஒரு நொடியில் பறிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பத்ம பிரியா உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கட்டிட விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கட்டிடத்தை இடிக்க கடந்த 13-ந் தேதி மாநகராட்சி அனுமதி தந்துள்ளது.
    • இறந்த பெண் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நடைபாதையில் நடந்தால் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா? உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா பேசியதாவது:-

    இந்த கட்டிடத்தை இடிக்க கடந்த 13-ந் தேதி மாநகராட்சி அனுமதி தந்துள்ளது. ஆனால் எந்த வகையிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வில்லை. ஆய்வு மேற்கொள்ளாததால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஒரு இளம் பெண் உயிரிழந்துள்ளார். சாலை வரி செலுத்தும் மக்களுக்கு உரிய பாதுகாப்புடன் சாலைகள் அமைத்து தர வேண்டும். அது அரசாங்கத்தின் பொறுப்பு. இறந்த பெண் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
    • தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது 10 முதல் 15 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் கூறினர்.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    • பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
    • கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    சென்னை:

    சென்னை பிராட்வேயில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழைய கட்டிடத்தின் 4வது தளத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

    கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
    • கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

    சென்னை:

    சென்னை பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் பழமையான 4 மாடி கட்டிடம் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிகள் இன்று காலை நடைபெற்று வந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 'டமார்' என்று வெடிச்சத்தம் போன்று பயங்கர சத்தம் கேட்டது. கடுமையான புகை மூட்டமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு ஓடி வந்தனர். கட்டிடத்தின் இடிபாடுகள் மலை போல குவிந்து கிடந்தன. கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு வீரர்கள் 50 பேர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். பெரிய பெரிய துண்டுகளாக கிடந்த கட்டிட இடிபாடுகளை மிஷின் மூலமாக உடைத்து எடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை முடுக்கி விட்டனர்.

    கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இன்று காலையில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது அப்பகுதியில் அதிர்ந்துள்ளது.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்த வழியாக நடந்து சென்றவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து உள்ளனர். அரண்மனைகாரன் தெரு வழியாக நடந்து சென்ற 2 பெண்களில் ஒருவர் கட்டிட இடிபாட்டில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காக 100-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் களம் இறங்கி வேலை செய்து வரும் நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டிடத்தின் தூண்களை புதுப்பிப்பதற்காக செதுக்கியபோதுதான் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் பாரிமுனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக 6 மாதத்திற்கு முன்பே அங்கு தங்கி இருந்தவர்கள் காலி செய்துள்ளனர்.
    • கட்டிடம் இடிந்த போது குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது.

    சென்னை பிராட்வேயில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழைய கட்டிடத்தின் 4வது தளத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடத்தின் கீழ் பகுதியில் லாரி செட் செயல்பட்டு வந்தது. மற்ற பகுதிகளில் ஆட்கள் குடியிருந்து வந்துள்ளனர். கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக 6 மாதத்திற்கு முன்பே அங்கு தங்கி இருந்தவர்கள் காலி செய்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கட்டிடம் இடிந்து விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கட்டிட இடிபாட்டில் பாளையம் என்பவரின் ரிக்ஷாவும் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. ரிக்ஷாவை நிறுத்தி விட்டு தூரத்தில் இருந்ததால் தொழிலாளி பாளையம் உயிர் தப்பி உள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது ரிக்ஷாவும் சிலரின் வாகனங்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளன. கட்டிடம் இடிந்த போது குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. அப்பகுதியே அதிர்ந்தது என்றார்.

    • கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது.
    • உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

    தற்போது கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது. இன்று காலை கட்டிடத்தின் படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (52), மூக்காயி (50), தொண்டிச்சாமி (55), கட்டையன்(43) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது படிக்கட்டு, சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேரும் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றினர்.

    அப்போது அதில் சிக்கியிருந்த மூக்காயி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தலைமறைவான கட்டிட பொறியாளர், காண்டிராக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
    • ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

    பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள பெர்னாம்புகோ மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர நகரமான ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரெசிப் அருகே உள்ள ஜங்கா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 3 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடிவருகின்றனர்.

    இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி 2010ம் ஆண்டு மூடப்பட்டதாகவும், அதன்பின்னர் பல குடும்பங்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    ×