என் மலர்
நீங்கள் தேடியது "தி.மு.க. இளைஞரணி"
- தென்திருப்பேரையில் தி.மு.க. இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடை பெற்றது.
- கோவி லெனின், வக்கீல் தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணியினருக்கு பயிற்சி அளித்தனர்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. இளைஞர் அணியின ருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடை பெற்றது.
தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமை ப்பாளர்கள் அம்பாசங்கர், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.
மாநில சுயாட்சி என்ற தலைப்பில் கோவி லெனின் மற்றும் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் வக்கீல் தமிழன் பிரசன்னா ஆகியோரும் தி.மு.க. இளைஞர் அணியினருக்கு பயிற்சி அளித்தனர்.
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
மருத்துவம் எல்லாராலும் படிக்க முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போது சமூக நீதி என்பது மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் எல்லாரும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்றாகும். கல்வி, வேலை வாய்ப்பு, பொரு ளாதாரத்தில் மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மாநில சுயாட்சியை வலியுறுத்தினர்.
இப்போது மாநில சுயாட்சியை முடக்கும் வித மாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அவற்றை பெரியார் அண்ணா கலைஞர் வழியில் தற்போது ஸ்டாலின் தொடர்ந்தது எதிர்த்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அருணாச்சலம், ஆறுமுகப்பெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பிரம்ம சக்தி, ஒன்றிய செயலாளர்கள் பார்த்தீபன், நவீன் குமார், இசக்கி பாண்டியன், ரவி, ஜோசப், கொம்பையா, கோட்டாளம், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர்கள் ராமமூர்த்தி, வெற்றிவேல், இசக்கி பாண்டியன், லட்சுமணன், ஜோயல், அந்தோணி ராஜ், ஆபிரகாம், சேவியர் விஜேஸ், பேரூர் இளைஞரணி அமைப்பா ளர்கள் இசக்கி குமார், முருகன், முத்துக்குமார், முகமது பஹ்மி, சத்திய விஜய், ஸ்ரீவைகுண்டம் பேரூர் செயலாளர் சுப்புராஜ், ஆழ்வார் திருநகரி பேரூர் செயலாளர் கோபிநாத், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் சினேகவல்லி, சாத்தான்குளம் பேரூ ராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய், தென்தி ருப்பேரை பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ஆனந்த், நகர செயலாளர் முத்து வீர பெருமாள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வை மத்திய ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த் நன்றி கூறினார்.
- மானாமதுரை பகுதியில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- இந்த முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் தொடங்கியது. இதை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி புதிய உறுப்பினர்கள் பெயர்களை எழுதி தொடங்கி வைத்தார். நகரசெயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். முத்தனேந்தல் பகுதியில் ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் வரவேற்றனர். திருப்புவனம் ஒன்றிய பகுதியில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். அனைத்து இடங்களுக்கு சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் பணியை தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.ராஜசேகரன்,பொங்கலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகு பிரசாத், துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
- துணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளராக வக்கீல் அகஸ்தீசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு மாவட்ட அமைப்பாளராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளராக ஜெயச்சந்திர பூபதி, ஆல்வின் பினோ, தோலடி விஜி, பைஜு, ஜான் ஜெபார்சன், லிஜிஷ் ஜீவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியார் மீது வழக்கு பதிவு
- கைது செய்ய கேட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார்
குழித்துறை :
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியார் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய கேட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அருமனை போலீஸ் நிலையத்தில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லிஜிஸ் ஜூவன் தலைமையில், மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ராஜேஷ் குமார் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஜெபா, மாணவரணி துணை அமைப்பாளர் ஜோயல், மேல்புறம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தோமசிங் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.