என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை அதிகாரிகள்"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
    • போதை பொருள் மற்றும் இணைய வழி குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது உண்டு.

    ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் குற்றச் செயல்கள், ரவுடிகள் அட்டகாசம், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும்.

    அதேபோல் கடந்த மாதமும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாடி கூட்ட அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

    இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப் பிரிவு அதிகாரி டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள், போதை தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இவர்களுடன் ஒவ்வொரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எந்தெந்த மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பது பற்றியும் அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இதுவரை எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்ற புள்ளி விவரங்களும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 16 மாவட்டங்களில் கொலை-கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தது பற்றியும் அதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் விளக்கி கூறியதாக தெரிகிறது.

    திருப்பூர், தர்மபுரி, தேனி, கடலூர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இதுவரை நடந்த கொலை-கொள்ளை சம்பவங்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் கேட்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்தும் அதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக புலனாய்வு மேற்கொண்டு முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் போதை பொருளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் போதை பொருள் விற்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு குற்றச் சம்பவங்களையும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டு குற்றச் சம்பவங்களையும் ஒப்பிட்டு பார்த்து எந்தெந்த ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்திருந்தது? எந்த ஆண்டில் குற்றங்கள் அதிகரித்தது என்பது பற்றியும் விரிவான புள்ளி விவரங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

    குறிப்பாக போதை பொருள் மற்றும் இணைய வழி குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    • தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    • சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    நெல்லை சரக டிஐஜி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    இதுவரை கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

    ஜெயக்குமாரின் எலும்புகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது.

    • புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை.
    • கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை.

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தினார்.

    கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

    சட்டம்- ஒழுங்கு குறித்தும் கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பொது மக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.
    • கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள சங்கராபுரம், மூங்கில் துறைப்பட்டு, வடபொன் பரப்பி, பகண்டை கூட்டு ரோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக் டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர், குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களை போலீஸ் நிலை–யங்களில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    கைது செய்யப்படும் குற்றவாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், சிகிச்சைக்காக அவரை உடனடியாக ஆஸ்பத்தி–ரிக்கு அழைத்துச் செல்ல–வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடு–பவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவரும் கடைபிடிக்க–வேண்டும் என பேசினர்.

    இதில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கரா–புரம் இன்ஸ்பெக்டர் பால–கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், முருகன், சூர்யா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    ×