என் மலர்
நீங்கள் தேடியது "5 பேருக்கு"
- மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதம் இல்லாத வகையில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 943 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது நாளொன்றுக்கு 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம்:
கொரோனாவின் தாக்கம் முழுமையாக முடியாத நிலையில்,மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக, கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, குடியிருப்புகளில் வசிக்கும் நபர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சேலத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 2 அல்லது 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி யுள்ளது. இதில் ஓமலூர், தலைவாசல், ஏற்காடு, பனமரத்துப்பட்டியில் தலா ஒருவரும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவரும் என்று 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்த்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்–கையும் அதிகரித்துள்ளது. தற்போது, பள்ளிகள் திறந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கைகளில் சானிடைசர், முக கவசம் ஆகிய வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.