என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பாட்டம்"

    • அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் பயிற்சி அளிக்கவேண்டும்.
    • திறமையான ஆசான்களுக்கு தமிழக அரசு சார்பில் சிலம்ப விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

    சென்னை:

    உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    துணை தலைவர், அகத்தியா, அ. ஞானம், இணை செயலாளர் ராஜா, பொருளாளர் ராஜவேலு, துணை செயலாளர்கள் விஜயன், அருண் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆர். முருககனி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக எஸ்.வி.எஸ். குரூப்பின் நிறுவனர் டாக்டர். சி.எம்.சாமி கலந்துகொண்டார். சிலம்ப ஆசான்கள் கிருஷ்ண சாமி,சண்முகம் , குரு ஏழுமலை. கண்ணன். பவர் பாலாபாலசேகர், சௌந்தர்,முகமது அப்துல்காதர், பரசுராமன், விஸ்வநாதன், ராஜன், சண்முகராஜா, சரவணன், வில்சன், ரிஷ்வான் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசை வலியுறுத்தி சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும், அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் பயிற்சி அளிக்கவேண்டும், சிறந்த மூத்த ஆசான்களுக்கு மாதாந்திர ஊதியமும், திறமையான ஆசான்களுக்கு தமிழக அரசு சார்பில் சிலம்ப விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் சிலம்ப மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிலம்பம் ஆடியபடி தங்களின் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • மதுரை வீரர்கள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்தனர்.
    • அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பரவை தனியார் கல்லூரியில் ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி, ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி, பாரத சமூக பண்பாட்டுக் கழகம் இணைந்து நோபல் சாதனை சிலம்ப நிகழ்ச்சியை நடத்தியது. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் குழு சிலம்பம், மரக்காலில் கண்ணை கட்டிக்கொண்டு 32 வகை சிலம்பம், ஆணிப்பலகை யில் ஒற்றை சிலம்பம், நீர்சிலம்பம், நெருப்பு வளையத்திற்குள் சிலம்பம் என்று 5 மணி நேரம் திறமைகளை வெளிபடுத்தினர்.

    அவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப் பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மங்கையர்க்கரசி கல்வி குழும செயலாளர் அசோக்குமார், மதுரை இலக்கிய மன்ற துணைத் தலைவர் சம்பத், தமிழ் தேசிய சான்றோர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா நகரில் இளையோர் மேம்பாட்டு விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பு நடத்தியது
    • தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே கொக்கோட்டு மூலை கிராமத்தில் சிலம்பம் பயிற்சிப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளராக மாலதி ராதாகிருஷ்ணன் உள்ளார்.

    இந்தப் பயிற்சிப் பள்ளி மாணவர்களான தனுஷா ராதாகிருஷ்ணன் (வயது 15), ஜெனீஷ் ( 9), ராம்ஹரி (14), பெர்லின் ஜோ (14), ஜே. ஜெனீஷ் (18), அபினேஷ் (19), ராம் கார்த்திக் (17), ராகுல் கார்த்திக் (17), அகில் (21) ஆகிய 9 பேர் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா நகரில் இளையோர் மேம்பாட்டு விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பு நடத்திய தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் தனிஷா ராதாகிருஷ்ணன், ஜெனீஷ், ராம்ஹரி, அபினேஷ், ராம்கார்த்திக், அகில் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், பெர்லின், ஜே. ஜெனீஷ், ராகுல் கார்த்திக் ஆகியோர் வெள்ளி பதக்கங்களையும் வென்றனர். இதையடுத்து சொந்த கிராமத்திற்கு வந்த அவர்களை ஊர்மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    ×