என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்புகள் அமைப்பு"

    • பாராளுமன்றம் நோக்கி ‘டெல்லி சலோ’ பேரணி செல்ல உள்ளனர்.
    • இன்று மதியம் 1 மணிக்கு பேரணி செல்ல உள்ளனர்.

    புதுடெல்லி:

    சம்யுக்தா கிசான் மோட்சா மற்றும் மஸ்தூர் கிசான் மோட்சா விவசாய சங்கம் தலைமையில் பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு பகுதியிலிருந்து பாராளுமன்றம் நோக்கி 'டெல்லி சலோ' பேரணி செல்ல உள்ளனர்.

    பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதிசெய்யவும், மின்சார மானியம் வழங்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும், லக்கிம்பூரில் கடந்த ஆண்டு விவசாயிகள் மீது நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு நியாயம் வழங்க வலியுறுத்தியும் ஜத்தா பகுதி பஞ்சாப் விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி இன்று மதியம் 1 மணிக்கு பேரணி செல்ல உள்ளனர்.

    இதற்காக இன்று காலை முதல் திரண்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் கடுமையான நெரிசல் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி போலீசார் விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

    டெல்லியில் பாதுகாப்பை போலீசார் அதிகப்படுத்தி உள்ளனர். முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    விவசாயிகள் பேரணியை தடுக்க அம்பாலா சாலையில் போலீசார் கான்கிரீட் தடுப்புகள் அமைத்துள்ளனர். விவசாயிகள் திரண்டு வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

    ஹரியானா மாவட்ட போலீசாரும் இப்பேரணிக்கு அனுமதி வழங்காத நிலையில் விவசாயிகள் பேரணி செல்ல இருப்பதால், அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    டெல்லிக்கு வரும் விவசாயிகளை அங்கேயே தடுத்து நிறுத்த போலீசார் வியூகங்கள் வகுத்து வருகின்றனர்.

    விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி செல்வதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.

    100 விவசாயிகள் கொண்ட குழு டெல்லியை நோக்கி அமைதியான முறையில் செல்ல உள்ளது. தடுப்புகளை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. டெல்லி நோக்கி சென்று அமைதியான போராட்டம் நடத்த அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறோம்.

    விவசாயிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பேச விரும்பினால் மத்திய அரசின் கடிதத்தையோ அல்லது ஹரியானா, பஞ்சாப் முதலமைச்சர் அலுவலகத்தையோ காட்டுங்கள்... நாங்கள் வருகிறோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் சர்வான்சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

    • வாகன ஓட்டிகள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
    • விபத்து நடக்காமல் தடுக்க, திருச்சி ரோடு உயர் மட்ட பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது.

    கோவை

    கோவை மாநகரில் 4 வழித்தடங்களில் உயர்மட்டப்பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களில் வாலிபர்கள் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் இயக்குவது வாடிக்கையாக உள்ளது. விபத்து சம்பவங்களும் அடக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த 12-ந் தேதி மாலை ரெயின்போ காலனியில் இருந்து ராமநாதபுரம் சிக்னல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பிரசாந்த் (வயது 28) என்பவர் மேம்பால சுவரில் மோதி உயிரிழந்தார்.

    இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர் ராஜூ, சரவணன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் ஆகியோர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து விபத்து நடக்காமல் தடுக்க, திருச்சி ரோடு உயர் மட்ட பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது,

    மேம்பாலங்களில் விபத்து ஏற்படுவதை தடுக்க தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள மேம்பாலங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வா கனங்களை இயக்க வேண்டும். கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் உக்கடம் பைபாஸ் சாலையில் மேம்பா லத்தின் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் எதிர்திசையில் வாகனங்களில் செல்ல கூடாது. பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வலைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்றார். 


     



     


    ×