என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை"

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    ஜெனீவா:

    உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.

    குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பதிவாகின.

    இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

    • முந்தைய குரங்கு அம்மை வைரஸிலிருந்து இது வேறுபட்டது.
    • குரங்கு அம்மை இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு.

    மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கியது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் மங்கி பாக்ஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருவதால், விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளை கண்காணிக்க அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.

    மத்திய மருத்துவமனைகளான சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவமனைகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,

    மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வைரஸ் குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. முந்தைய குரங்கு அம்மை வைரஸிலிருந்து இது வேறுபட்டது.

    மாநிலங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்துடன் (NCDC) ஆலோசனை நடத்தினோம். கொரோனா வைரசுடன் குரங்கு அம்மைக்கு எந்த தொடர்பும் இல்லை.

    நோடல் அதிகாரிகள் ஏற்கனவே மருத்துவமனைகளில் உள்ளனர். சோதனை 32 ICMR மையங்களில் குரங்கு அம்மையின் அறிகுறிகள் சிக்கன் பாக்ஸை போன்றது.

    இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் அவை இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்தனர்.

    • பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது.
    • இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால், பல்வேறு மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிங்கப்பூரில் எம்பாக்ஸ் கிளேட் 2 நோய்த் தொற்றினால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தாய்லாந்தில் இந்த வாரம் பதிவான ஒரு எம்பாக்ஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது.

    பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மையின் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால் இது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அவ்வாறு அறிகுறிகள் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட பயணி 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம்: ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்- 17 பேர் கைது
    ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய குரங்கு அம்மை நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது.
    காசியாபாத்:

    கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய இந்த நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது

    இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 5 வயது சிறுமி க்கு திடீரென உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்த அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படடு பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார். பரிசோதனை முடிவில் தான் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும். தற்போது அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ×