என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்ணை"

    • காளீஸ்வரன் தனது மனைவி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.
    • இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் பாபு தோட்டத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன் (26). டிரைவர். இவரது மனைவி மைவிழி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    காதல் திருமணம் செய்து கொண்டதால் 2 வீட்டு பெற்றோர்களிடமும் எதிர்ப்பு இருந்து வந்தது.இந்த நிலையில் காளீஸ்வரனுக்கும், அவரது மனைவி மைவிழிக்கும் கருத்து வேறுபாடுகாரணமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து கடந்த 2மாதங்களுக்கு முன்பு மைவிழி கணவரை விட்டு பிரிந்து சென்று ஈரோடுஅக்ரகாரம் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மேலும் அவரது கணவர் காளீஸ்வரன் குழந்தையை பார்க்க வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் மைவிழி கணவர்வீட்டிற்கு வராமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இவர்களது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் மைவிழி இரவு 9 மணியளவில் தனது குழந்தையை பார்க்க தனது கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த காளீஸ்வரன் தனது மனைவி மைவிழியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.

    மேலும் நீ உயிரோடு இருந்தால் தான் எனக்கு பிரச்சினை, உன்னைகொன்றால் தான் நானும்எனது மகளும் நன்றாகஇருக்க முடியும்என்று கூறி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.

    இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    இதனைப்பார்த்த உறவினர்கள் மைவிழியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இது குறித்து மைவிழி மொடக்குறிச்சி போலீசில் புகார்செய்தார். போலீசார் காளீஸ்வரன்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம்அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய சேலம் வாலிபர் மீது தாக்குதல் பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    குமாரபாளையம்:

    சேலம் தாதகாபட்டி சண்முகா நகரை  சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் சிரஞ்சீவி  குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா (19) என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார் மற்றும் சித்திக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    கடந்த 27-ந்தேதி சிரஞ்சீவி தனது  கள்ளக்காதலி வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  வினோதாவின் உறவினர்கள் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  நம்பியூர் என்ற இடத்தில்  இருவரும் தங்கியிருந்தபோது, வினோதாவின் பெற்றோர், அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் அங்கு சென்று 2 பேரையும்  குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

    அப்போது வழியில்  சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு வினோதாவின் உறவினர்கள், சிரஞ்சீவியிடம் ஏற்கனவே உனக்கு திருமணம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் எதற்கு வினோதாவை காதல் வலையில் மயக்கி அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய்? என கேள்வி கேட்டு  சரமாரியாக தாக்கினர். 

    இதனால் உயிருக்கு  பயந்து சிரஞ்சீவி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது  புறவழிச்சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல்  சாலையை  கடந்தபோது  அவர் மீது  வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார்.   ஈரோடு  அரசு ஆஸ்பத்திரியில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×