என் மலர்
நீங்கள் தேடியது "குடியரசு துணை தலைவர்"
- கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
73 வயதான ஜகதீப் தன்கர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 நாள் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் கொண்டுள்ளதால் இன்று (மார்ச் 12) மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு துணைத் தலைவரின் உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வந்தோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்த பிறகு, எய்ம்ஸ் மருத்துவக் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையிலான உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செனகல் நாட்டின் தலைநகரான டாக்காரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த குழுவில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் இடம்பெற்று கலந்துகொண்டார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் கவுரவத்தையும், சிறந்த எதிர்காலத்தை பற்றிய அதன் பார்வையை குறிக்கும் ஆப்பிரிக்க மறுமலர்ச்சியின் நினைவு சின்னத்தை பார்வையிட்டனர். பின்னர் டாக்கரில் உள்ள ஆப்பிரிக்க கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் களஞ்சியமாக உள்ள கருப்பு நாகரீகங்களின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
இது ஆப்பிரிக்காவின் கலாச்சார மற்றும் அறிவியல் பங்களிப்புகளை முன்னிலைப் படுத்துவதின் நோக்கமாக அமைந்துள்ளதாக இந்திய குழுவினர் பாராட்டினர். தொடர்ந்து டக்கார் பைனாலே 2022 என்னும் சமகால ஆப்பிரிக்க கலை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சர்வதேச கலைக்கண்காட்சியை உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இந்திய குழுவினருக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்கப்பட்டனர்.