என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bypolls"

    • மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸை சிபிஎம், காங்கிரஸ் எதிர்த்து நிற்கிறது
    • உத்தர பிரதேசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்ற விரும்பும் அகிலேஷ் யாதவ்

    ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    விரைவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு இது பரிசோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தன்புர், பகேஷ்வர், துப்கரி தொகுதிகள் பா.ஜனதா வசம் இருந்தவை. உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள தொகுதிகள் முறையே சமாஜ்வாடி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவிடம் இருந்தவை. திரிபுரா மாநில தொகுதி சிபிஎம் இடம் இருந்தவை. புதுப்பள்ளி காங்கிரசிடம் இருந்தவை.

    தாரா சிங் சவுகான் பா.ஜனதாவில் மீண்டும் இணைந்ததால் உ.பி. கோசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி அகிலேஷ் யாதவ் கூட்டணி பலத்தை நிரூபிக்க விரும்பும். அதேவேளையில் கேரளாவில் உம்மன்சாண்டி மகன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    திரிபுராவில் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிக்க இருப்பதாக சிபிஎம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற போது முறைகேடு நடைபெற்றதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக சிபிஎம், காங்கிரஸ் இணைந்துள்ளன. மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாக்குப் பதிவின்போது முறைகேடு நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமிருந்த தொகுதியை கைப்பற்றியது பா.ஜனதா

    திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தன்புர் தொகுதி பா.ஜனதா வசம்தான் இருந்தது. பிரதிமா பௌமிக் மத்திய மந்திரியானதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிந்து டெப்நாத் போட்டியிட்டார். அவர் 30,017 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுசிக் சண்டா 11,146 வாக்குள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பழங்குடியின வகுப்பினரை சேர்ந்த 18,871 வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

    போக்சாநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாம்சுல் ஹக் காலமானதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் 30,237 வாக்குகள் (சுமார் 66 சதவீதம்) சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களுடையது. இதனால், இந்த வாக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா வேட்பாளர் டஃபாஜ்ஜால் ஹொசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மிஜன் ஹொசைன் 3,909 வாக்குகள் பெற்றார்.

    ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தன்புர் தொகுதியில் முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது.

    தேர்தலின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதோடு அயோத்தியின் மில்கிபூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இதே போல் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட் சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். எனினும் அவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது. 

    புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியில் தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் எதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும்  என்பதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சம்பாவத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கைலாஷ் சந்திர கெஹ்டோரி தமது பதவியை ராஜினாமா செய்தார். 

    இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில்  புஷ்கர்சிங் தாமி போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் நிர்மலா கஹ்டோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில் மனோஜ் குமார் பட் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் புஷ்கர்சிங் தாமி முன்னிலை பெற்றார்.  13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தாமி 57,268 வாக்குகளும், கஹ்டோரி 3,147 வாக்குகளும் பெற்றிருந்தனர். 

    வாக்கு எண்ணிக்கை முடிவில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.  

    தமது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாமி, இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும், தமது ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். 

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் இடைத்தேர்தலில் வாக்குகள் மூலம் நீங்கள் (வாக்காளர்கள்)  கொடுத்த அன்பு மற்றும் ஆசீர்வாதத்தால் என் இதயம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டது, நான் அமைதியாக இருக்கிறேன் என்றும் அவர்  தெரிவித்தார்.

    இந்நிலையில் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி மூலம் புஷ்கர்சிங் தாமி புதிய சாதனை படைத்துள்ளதாகவும், இதற்காக பாராட்டுவதாகவும், பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.
     
    ×