என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Again"

    • கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.

    இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிக மாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதா

    ரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்க ளில் எங்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது. இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள்.
    • சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்கூர் பகுதியில் கால்நடைகளை கொன்று குவிக்கும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறை மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ஜினீயர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது.

    இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 5-ந் தேதி இருக்கூர்

    கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தேன். வனத்துறை சார்பில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சிறுத்தை புலியை பிடிப்பதற்கு, 2 கூண்டுகள் மற்றும் 4 விலங்குகள் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா மூலமாக சிறுத்தை புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இச்சிறுத்தை புலியை தேடும் பணியில் 42 வனத்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் நுட்பம் தெரிந்த விலங்குகளை கண்காணிக்கும் 3 மலைவாழ் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.

    இது மட்டுமின்றி வன உயரடுக்கு படையை சேர்ந்த 4 நபர்கள், கோயம்புத்தூர் மற்றும் வைகை அணை பகுதியிலிருந்து சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நவீன தொழில் நுட்ப கருவிக ளுடன் வந்து உள்ளனர். 2 வனத்துறை கால்நடை மருத்துவர்களும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கான பணியில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

    சிறுத்தை புலியை பிடிப்ப தற்கு வனத்துறை சார்பில் அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. பாதச்சுவடு மூலம் சிறுத்தை புலியின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற்கும், கூண்டுகளை அதிகப்படுத்துவதற்கும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுத்தை புலி நடமாடும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த

    வழிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் கபிலர் மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பா.ஜ.க மாவட்ட துணைச் செயலாளர் பழனியப்பன், தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் (திருச்சி மண்டலம்) சதீஸ், சேலம் மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் (ஓய்வு) மனோகரன், பிரகாஷ் , கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், துரைசாமி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து விரைந்து சிறுத்தை புலியை பிடிக்க கோரி, பா.ஜ.க.வினர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு கொடுத்தனர்.

      சேலம்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

      பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      உதான் -5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. வருகிற 16-ந்தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு-சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமா னம் இயக்கப்பட உள்ளது. அதேபோல் கொச்சின்- சேலம்- பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் விமானம் இயக்கப்படும்.

      வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.

      இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில் வருகிற 29-ந் தேதி முதல் பெங்களூரு-சேலம்-ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத்-சேலம்- பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும்.

      அதே சமயம் வாரத்தின் 7 நாட்களிலும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது.

      சேலம்- சென்னை விமான சேவை மீண்டும் 29-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையானஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

      சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சேலத்திற்கு நாள் ஒன்றுக்கு 5 முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கூறினார்.

      இந்த பேட்டியின் போது விமான நிலைய இயக்குனர் ரமேஷ், வக்கீல்கள் லட்சுமணபெருமாள், அய்யப்பமணி, குட்டி, பனமரத்துபட்டி ராஜா, ஆலோசனை குழு உறுபினர் சிங்கால் உள்பட பலர் உடனிருந்தனர்.

      திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்கு புறையூர் வழியாக மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
      குரும்பூர்:

      திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்கு அங்கமங்கலம், புறையூர் வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையையடுத்து நேற்று இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது.

      நிகழ்ச்சிக்கு ஆழ்வை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் பாதாளமுத்து தலைமை தாங்கினார். ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் வரவேற்றார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசு பஸ்சை கொடிசையத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

      இதில் ஏரல் தாசில்தார் கண்ணன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், கே.டி.சி. பொதுமேலாளர் மேலாளர் சரவணன், உதவி மேலாளர் (இயக்கம்) பூல்ராஜ், நாலுமாவடி கிளை செயலாளர் செந்தில், புறையூர் வெல்பேர் டிரஸ்ட் நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
      ×