என் மலர்
நீங்கள் தேடியது "Hall"
- திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
- கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தை பார்வையிட்டார்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுர ஆதினத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி தேவதானத்தை சேர்ந்த குமரக்கோவில் பிடாரிவடக்கு வீதியில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1986ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் நடைபெ ற்றது.
அதன்பிறகு இக்கோ யிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதினம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனிடையே திருப்ப ணிகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயில் விமானகலச பணிகள், மூலவர் சந்நிதி பணிகள், வெளிமண்டபம் பணிகள், கருங்கற்கள் பிரகார பதிப்பு பணிகள், முகபு மண்டபம் திருப்பணிகள் ஆகியவற்றையும், வர்ணபூச்சு பணிகளையும் தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தையும் பார்வை யிட்டார்.
அப்போது சட்டைநாதர் கோயில் கணக்கர் செந்தில், தமிழக கோயில் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் பந்தல்.முத்து, தி.மு.க. நிர்வாகி பாபு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய கோவில்.
- காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஸ்தலமாகவும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவதாகவும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் கோயிலில் தேரோட்டம் நான்கு வீதிகளில் வலம் வந்தது.
இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரெங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி சன்னதியை வந்தடைந்தது.
பின்னர் மதியம் 1:30 மணி அளவில் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நிர்வாக அலுவலர் ரம்மியா, கோயில் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொன் சாமிதரிசனம் செய்தனர்.
- இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
- விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்து றை அமைச்சர் சாமிநாதன், தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ரூ.89.54 லட்சம் செலவில் நினைவக கட்டட புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-
தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கம் செய்தித்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் இருந்துள்ளனர்.
தற்போது முதல்-அமைச்சர் கவனத்தி ற்கு கொண்டு சென்று ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று சரியான முறையில் பராமரிக்கும் அரசு நிர்வாகத்துறையிடம் ஒப்படைத்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.உ.அ ர்ச்சனா அவர்கள், பொதுப்ப ணித்து றை செயற்பொறி யாளர் திரு.பால ரவிக்குமார் அவர்கள், உதவி செயற்பொறி யாளர்கள் திருமதி. அல்மாஸ் பேகம் அவர்கள், திரு.ராமர் அவர்கள், மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் திரு.என்.செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.