என் மலர்
நீங்கள் தேடியது "Heavy"
- மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.
- அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.
அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட பார்க்க முடியாமல் நிலை காணப்பட்டது. வாகனங்கள் சாலையில் முகப்ப விளக்கை எரிய விட்டபடியே சென்றன. ராசிபுரம், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே போல் பனிமூட்டம் இருந்தது. பனி காரணமாக கடும் குளிர் நிலவியது. காலை 8 மணிக்கு மேல் தான் வெயில் வந்தது. குளிரால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பனி பொழிவு அதிகாமாக இருந்தாலும், இன்று வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.
- நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.
- காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.
நாமக்கல்:
நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் மிகுந்து காணப்பட்டது. அருகே இருப்பவர்கள் யார் என தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.
காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அன்றாட வேலைக்கு சென்றனர்.
நகரப் பகுதி கோடை வாசஸ்தலம் போல் காட்சியளித்த நிலையில், கடும் குளிரால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
- சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
- மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை சாரல் மழையுடன் பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்காட்டில் காபி அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் காபி தோட்டங்களில் காபி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக காபி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.