என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poles"

    • சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலைய பகுதியில் நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் மின் வழித்தடத்தில் உள்ள காவேரி கல்யாணமண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் மேரீஸ்கார்னர் மின்பாதையில் அருளானந்ததம்மாள் நகர் 1-வது தெரு வரை உள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குமாரபாளையத்தில் சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மின்சார வாரிய அலுவ லகம் மற்றும் பவர்ஹவுஸ் அருகிலேயே சில மின்கம்பங்கள் சாலை நடுவில் உள்ளது. 

    இந்த மின் கம்பங்களால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரிதும் இடையூறாக உள்ளது.  

    இந்த கம்பங்களால் விபத்துகள் ஏற்படுவதற்குள் சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையின் ஓரமாக  நடப்பட வேண்டும் என வாகன  ஓட்டிகளும் பொதுமக்களும் மின் வாரிய  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×