என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழைக்கு"

    • மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.
    • மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கொல்லங்கோடு:

    கொல்லங்கோடு - ஊரம்பு சாலையில் சிலுவை புரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஒரு மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்ப டுத்தும் பணியை மேற் கொண்டனர். மேலும் இது குறித்து மின்வாரிய அலுவல கத்திற்கும் தகவல் கொடுக் கப்பட்டது. மின் ஊழியர் களும் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார கம்பியை சரி செய்தனர். எனினும் சாலை யின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    நாமக்கல்:

     நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம்   வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 70.7 டிகிரியாக நிலவியது. 

    நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவானது. அடுத்த 3 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். 

    காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு 8 முதல் 10 கி.மீ. என்றளவில் வீசும். இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×