என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.2 thousand"

    • கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
    • மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

    ஈரோடு:

    பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தெகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதார் மூலம் விபரங்களை சரி செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த (13-வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 28,000 தகுதியான விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.

    பி.எம்.கிசான் நிதித்திட்டத்தில் பயன் பெற்றுவரும் அனைத்து விவசாயிகளும் தங்களது ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டும். அதற்கு தங்களது ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை ஏற்கனவே இணைத்துள்ள விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால் ஓ.டி.பி. எண் தங்களது செல் போனுக்கு அனுப்பப்படும்.

    அந்த ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது நாள் வரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ரூ.15 செலுத்தி பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

    எனவே இத்திட்டத்தில் பயனடைந்து வரும் அனைத்து விவசாயிகளும் அடுத்த (13-வது) தவணைத்தொகையை பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்வதுடன் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டு ள்ளதால் உடனடியாக துரிதமாக செயல்பட்டு வரும் 31-ந் தேதிக்குள் பதிவை புதுப்பித்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 82 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின்  (பி.எம்.கிசான் திட்டம்)  மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை  தலா ரூ.2 ஆயிரம்  என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய்  பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில்  விவசாயிகளுக்கான நிதியுதவித் திடடத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு 11-வது தவணையாக ரூ.21,000 கோடியை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக  தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும்  அதிகமான விவசாயிகளுடைய  வங்கி கணக்கில் தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. 10-வது தவணை பணம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி புத்தாண்டு தினத்தில்  பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 475 விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளின் மூலம் உழவர் கடன் அட்டை (கிசான் கார்டு) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×