என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Premium"

    • பயிர் காப்பீடு கட்டிய அனைவருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு கிடைக்க கலெக்டரிடம் பேசி முயற்சி செய்கிறோம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஐ, தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஎம் இணைந்து, பயிர் காப்பீடு கட்டிய அனை வருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தினுடைய சமாதான கூட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தன கோபாலகிருஷ்ணன் தலைமை நடைபெற்றது.

    இந்த சமாதான கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயசீலன் வட்டார புள்ளியல் துறை அலுவலர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன், (சி பி ஐ) தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் (சி பி எம்) இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் பயிர் காப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி முயற்சி செய்கிறோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமாதான கூட்டம் நிறைவுற்றது.

    • family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆக உயர்வு.
    • தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்வு.

    வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைத்தளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் யூடியூப் தனது பிரீமியம் சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், மாணவர் மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.89 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தனிநபருக்கான ப்ரீபெய்ட் மாதாந்திர கட்டணம் ரூ.139ல் இருந்து ரூ.159 ஆகவும், தனிநபருக்கான ப்ரீபெய்ட் காலாண்டு (3 மாதம்) கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.459 ஆகவும், தனிநபருக்கான ஆண்டு கட்டணம் ரூ.1290ல் இருந்து ரூ.1490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரீமியம் தொகை அதிகரிப்பு சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
    சேலம்:

    இந்திய அரசு ரூ.2 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா ேயாஜனா ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

    இதில் ஜீவன் ேஜாதி காப்பீடு திட்டத்தில் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரையிலானோர் சேர்ந்து கொள்ளலாம்.   அதே போல் சுரக்‌ஷா திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது  வரையிலானோர் இணைந்து கொள்ளலாம் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டங்களில் தினமும் பல ஆயிரம் பேர் சேர்ந்து வருகிறார்கள். அதுமிட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குடும்பங்கள் இந்த திட்டங்களினால் பயனடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பேர்  தபால் மற்றும் வங்கிகள் மூலமாக மேற்கண்ட திட்டங்களில் சேர்ந்து உள்ளனர்.  ஜீவன் ேஜாதி திட்டத்துக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ. 330 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.436 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுரக்‌ஷா காப்பீடு திட்டத்துக்கான ஆண்டு பிரீமியம் தொகையும் ரூ.12-ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிரீமியம் மூலமாக கிடைக்கும் வருவாயை விட காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகமாக இருப்பதாக நிறுவனங்கள் ெதரிவித்து வந்த நிலையில் பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிகள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

    கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி நிலவரப்படி ஜீவன் ேஜாதி திட்டத்தில் 6.4 கோடி பேரும், சுரக்‌ஷா திட்டத்தில் 22 கோடி பேரும் இணைந்துள்ளனர்.  இந்த 2 திட்டங்களின் கீழும் காப்பீடு தொகை கோருவோருக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது.
    ×