என் மலர்
நீங்கள் தேடியது "வர்த்தகர்கள்"
- தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள்
- பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு
திருப்பூர்,நவ.21-
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ஜெர்மனி. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 4 சதவீதம் ஆடைகள் ஜெர்மனிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. ஜவுளி இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி.
ஜெர்மனியில் ஜவுளி வர்த்தகர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர்களும் சந்தித்து வர்த்தக வாய்ப்புகளை பறிமாறிக்கொள்ள ஏதுவாக அடிக்கடி வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் இந்தாண்டு எழுச்சியுடன் நடத்தப்படுகிறது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27, 28ந் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையே ஜவுளித்தொழில் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக அபாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டில் 3.09 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 3.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்ததை மேம்படுத்தும் வகையில் ஏ.இ.பி.சி., ஊக்கமளித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனியுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும். வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படுகிறது.
எதிர்பாராத வகையில் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தக நாடுகளில் உருவாகும் அசாதாரண சூழல், பஞ்சு -நூல் உற்பத்தியில் மாறுபாடு, பணமதிப்பில் உருவாகும் ஏற்றத்தாழ்வு போன்ற நேரத்தில் தொழிலை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுகிறது.
கடந்த 2015ல் உருவாக்கிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போதைய தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுமென தொழில்துறையினர் எதிர்பார்த்தனர்.புதிய அம்சங்களுடன் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படும் என தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். வெளிநாட்டு வர்த்தகம் 'டாலர்' பணமதிப்பின் அடிப்படையில் நடக்கிறது.
இந்நடைமுறையை மாற்றம் செய்து இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்வது குறித்தும், தொழில்துறை அமைச்சரகம் தீவிரமாக ஆராய்ந்து வந்தது. விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகம் வெளிநாட்டு வர்த்தக கொள்கை புதுப்பிக்கும் முடிவை 6 மாதம் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நாடுகளில் இயல்பான வர்த்தகம் நடைபெறுவதில்லை. இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்களாகும்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியும், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாகவே வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2023 ஏப்ரல்) இருந்து புதிய திருத்தங்களுடன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
- நூலிழை ஆடை உற்பத்தியிலும் முத்திரை பதித்துள்ளதை வெளிநாட்டு வர்த்தகர்கள் கண்காட்சி வாயிலாக உணர்ந்தனர்.
- புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ஆயத்த ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், விளையாட்டு சீருடைகள் வரவேற்பு அதிகரித்துள்ளது.
திருப்பூர் :
இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம்(ஐ.கே.எப்.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியன சார்பில் திருப்பூரில் 49வது இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி கடந்த மாதம் நடந்தது.கண்காட்சி, கருத்தரங்கு மற்றும் பேஷன் ேஷா அனைத்தும், செயற்கை நூலிழை ஆடை மற்றும் மறுசுழற்சி முறை ஆடைகளை மையப்படுத்தியே அமைந்திருந்தது. தூக்கி எறியும் பெட் பாட்டில் களில் இருந்து, பாலியஸ்டர் நூல் தயாரித்து, அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் சாயமேற்றி புதிய தொழில்நுட்பத்தில் தயாரித்த ஆடைகள் பெரும் வரவேற்பை பெற்றன.
அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, வங்கதேசம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனத்தினர் கண்காட்சியை பார்வையிட்டனர். அத்துடன் டெல்லி, பெங்களூரு வில் உள்ள பிராண்டட் ஆயத்த ஆடை வர்த்தக நிறுவனங்களும் பங்கேற்றன. பருத்தி நூலிழை ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த திருப்பூர், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியிலும் முத்திரை பதித்துள்ளதை வெளிநாட்டு வர்த்தகர்கள் கண்காட்சி வாயிலாக உணர்ந்தனர். திருப்பூரின் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தி திறமையை கண்டு பெரிதும் வியப்பில் ஆழ்ந்தனர்.
கண்காட்சி நிறைவடைந்து 10 நாட்களான நிலையில் திருப்பூரின் சூழலியல் பாதுகாப்பு தனிச்சிறப்புகள், வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஜீரோ டிஸ்சார்ஜ் , சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ஆகிய நீடித்த நிலையான பசுமை இயக்க பணிகள் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து இந்திய பின்னலாடைக் கண்காட்சி தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
கண்காட்சி வாயிலாக முக்கிய நாடுகளில் திருப்பூரின் தனிச்சிறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காட்சிப்படுத்தியிருந்த செயற்கை நூலிழை துணிகள், புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ஆயத்த ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், விளையாட்டு சீருடைகள் குறித்தும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச பசுமை கொள்கை, திருப்பூர் நிறுவனங்களால் பின்பற்றப்படுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் 50வது கண்காட்சியை அக்டோபர் மாதம் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
திருப்பூரில் வடிவமைத்த செயற்கை நூலிழை ஆடைகளை காட்சிப்படுத்திய பேஷன் ேஷா , வெளிநாட்டு வர்த்தகர்களை கவர்ந்துவிட்டது.அதுதொட ர்பான வர்த்தக விசாரணை வேகமெடுத்துள்ளது. பருத்தி நூலிழை பின்னலாடைக்கான நகரம் என்ற பெயர் மாறி செயற்கை நூலிழை ஆடையிலும் திருப்பூர் முக்கிய இடத்தை பிடிக்கப்போ கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படை யில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நடக்கிறது. டாலர் மதிப்பை குறைக்கவும் மற்ற நாட்டு பணமதிப்பின் அடிப்படையில் வர்த்தகம் செய்யவும், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.சர்வதேச அளவில் இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன; அதன்படி மத்திய ரிசர்வ் வங்கி 18 நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜெர்மனி, பிரிட்டன், கென்யா, இஸ்ரேல், மலேஷியா, மொரீசியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா உட்பட, 18 நாடுகள் அனுமதி பெற்றுள்ளன.இவற்றில் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், இந்திய ரூபாய் அடிப்படையில் வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் இந்திய வங்கியில் 'வோஸ்த்ரோ' கணக்கு துவக்க வேண்டும். அதன்படி, 'யூனியன் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் வோஸ்த்ரோ கணக்கு துவங்கிய மலேசியா இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், இந்தியா - மலேசியா இடையே 1.59 லட்சம் கோடி ரூபாய் (19.4 பில்லியன் டாலர்) அளவுக்கு வர்த்தகம் நடந்து வருகிறது. இந்திய ரூபாயின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய மலேசியா முன்வந்துள்ளது. ரஷ்யா, அரபு நாடுகளை தொடர்ந்து மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் ரூபாயை சர்வதேச கரன்சியாக பயன்படுத்தும் போது பின்னலாடை ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்தியாவின் பொருளாதாரம் உயரும். மலேசியாவுக்கு செயற்கை நூலிழை ஆடைகள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றனர்.
- தடுப்பணை கட்டி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
- தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில்பொறுப்பாளர்கள்ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஞானமணி தலைமை வகித்தார்.
செயலாளர் சத்யநாராயணன், பொருளாளர் வெங்கட்ராஜ், கௌர வதலைவர் கார்த்தி கேயன், ஆலோசகர் சேதுராமன், இளங்கோவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்னாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
வரும் காலத்தில் இது போன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் கூடுதலாக தடுப்பணைகளை தமிழக அரசு கட்டவேண்டும்.
அவ்வாறு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக்கிடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.