என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையில்"

    • கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை திருடிய பிரபல கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.
    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதி சேர்ந்தவர் பழனிவேல் (வயது 57). இவர் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பழைய பித்தளை பொருட்கள், காப்பர் பொருட்கள், மற்றும் ஒயர்கள் செல்ப் மோட்டார்கள், போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பழனிவேல் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இதனிடையே பொருட்களை திருடியது சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சங்கர் (32) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் நேற்று சங்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது.
    • இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் சமீப காலமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

    உடனே அங்கு விரைந்து சென்ற எஸ். ஐ. சங்கீதா மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் திருச்சி மாவட்டம் முசிறி ஜம்புகாடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 33), சுரேஷ் (40), சங்கர் (27), நாமக்கல் நல்லிபாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த நல்லி என்ற குலசேகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிப்பட்ட மர்ம கும்பல் மேலும் சில இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் வைத்தியலிங்கம் (வயது 48) என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார்.

    அப்போது, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வைத்தி யலிங்கம் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
    • சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர்.

    சேலம்:

    சேலம் அன்ன தானப்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64). இவரது மகன் விஷ்ணுகுமார் (37). இருவரும் அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆத்துகாரன் காடு பகுதியைச் சேர்ந்த லலித்குமார் (23) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார்.

    வாகனங்கள் வழியில் நின்றதால் காரில் செல்ல முடியாத அவர் வெங்கடேசன் மற்றும் விஷ்ணுகுமாரிடம் ஏன் இப்படி சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தினீர்கள் என கேட்டுள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து லலித்குமாரை இரும்பு கரண்டியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த லலித்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசன், விஷ்ணுகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.
    • மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருச்செங்கோடு:

    எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் பஸ்நிறுத்தத்தில் எலச்சி பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்தி ரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் சிக்கி னார். அப்போது அங்கு வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பேசினார்.

    சந்தேகமடைந்து போலீ சார் விசாரித்த போது அவர் சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடியைச் சேர்ந்த மோகன்குமார் (39) என்பதும், அவர், எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.

    கைது

    மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் எலக்ட்ரானிக் கடையில் திருட்டு சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் கடந்த 1-ந் தேதி ஷட்டரை உடைத்து பொருட்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. 

    இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் அங்கு உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் என்பது தெரியவந்தது. 

    அவர்களை போலீசார் நேற்று இரவு மடக்கி பிடித்தனர் .தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×