என் மலர்
நீங்கள் தேடியது "மேக்னஸ் கார்ல்சன்"
- உலக கோப்பை செஸ் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.
- அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார். அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.
அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சாதனையால் தமிழகம் பெருமைக் கொள்கிறது. இறுதிப்போட்டியில் வெற்றியடைய வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று நாளை நடைபெற இருக்கிறது.
- பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிரா ஆனது.
- இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் முதல் சுற்று இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் நடைபெற்றது. 35 நகர்வுகள் வரை இந்த போட்டி நீடித்தது. ரூக் நைட் பான் எண்டிங்கை நோக்கி போட்டி சென்ற காரணத்தால், இருவரும் போட்டியை சமன் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.
கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இறுதிப்போட்டி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி அளித்துள்ளார். அதில், "கடினமான போட்டியாகத்தான் இருக்கும், வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார். ஓய்வு எடுத்துவிட்டு, நாளை புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சியை செய்வேன்," என்று தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரரானார் பிரக்ஞானந்தா.
- இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று இன்று நடைபெற இருக்கிறது.
- இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
- இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போட்டியின் 2-வது சுற்று இன்று நடைபெற்றது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. டைபிரேக்கர் சுற்று நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று துவங்கியது. இந்த சுற்றும் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையைாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
- உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.
- இன்றைய டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு சுற்றுகளில் சமனில் முடித்தார். ஐந்து முறை சாம்பியன் பெட்டம் வென்றிருந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இறுதிப் போட்டியில் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக்கிய பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், "செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன்- ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் பிர்கஞானந்தா இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.
- இன்றைய டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இதன் காரணமாக தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று இருந்த மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி கடைசி தருவாயில் இரண்டாவது இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். அதில், "உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். அவர் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, தன்னை எதிர்த்து விளையாடிய மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தினார். இது சிறிய தோல்வியே கிடையாது. அடுத்து வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
- கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் கறுப்புக் காய்களுடன் கார்த்திகேயன் விளையாடினார்.
- செஸ்ஸில் முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் ஆனார்.
கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி புதன்கிழமை கிளாசிக்கல் செஸ்ஸில் முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் ஆனார்.
நடந்து வரும் கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய 24 வயதான இந்திய வீரர் கார்ல்சனை வீழ்த்தினார்.
இந்நிலையில் கார்த்திகேயனுக்கு பிரதம் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வாழ்த்துக்கள் கார்த்திகேயன். கத்தார் மாஸ்டர்ஸ் 2023-ல் சிறந்து விளங்கியவர். அவரது வெற்றி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது. நடப்பு செஸ் சாம்பியனும், உலகின் நம்பர் 1 வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபாரமான சாதனை படைத்துள்ளார்.
அவர் அற்புதமான வேலையைத் தொடரட்டும், மேலும் அடுத்த சுற்றுக்கு அவருக்கு சிறந்ததாக இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நார்வே செஸ் தொடரில் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தத் தொடரில் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.
நார்வே:
நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சமும், நகமுராவுக்கு ரூ.27 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல், மகளிர் பிரிவில் சீனாவின் ஜுவெஞுன் முதலிடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வைஷாலி 4வது இடமும், கோனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்.
நார்வே செஸ் தொடரில் 3-வது பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
- போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.
- ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும்
செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 தொடங்கி வரும் 23-ந்தேதி வரை நடக்கிறது. ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] கொலம்பிய நாடு வீரரை எதிர் கொள்ள இருந்தார். இந்த வருட ஒலிம்பியாடில் கார்ல்சனின் முதல் போட்டியான இதில் கலந்து கொள்ளாமலேயே அவர் தோற்கும் நிலைக்கு சென்ற சம்பவம் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதாவது, நேற்றய போட்டிக்கு கார்ல்சன் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதிக டிராபிக் இருந்ததால் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து போட்டி நடக்கும் இடத்துக்கு வர தாமதம் ஆகும் என்பதால் சைக்கிளில் வர கார்ல்சன் முடிவெடுத்துள்ளார். போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.
இதனால் எல்லாம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு படம் பிடித்துக்கொண்டிருந்த மரியா எமிலியானோவா என்ற புகைப்பட கலைஞர் கார்ல்சனுக்கு அந்த வளாகத்தில் இருந்து ஆட்டம் நடக்கும் களத்துக்கு செல்வதற்கான குறுக்கு வழியை காண்பித்து வழிகாட்டியுள்ளார்.
இதனால் களத்துக்கு 10 நிமிடம் மட்டுமே தாமதமாக களத்துக்கு சென்று சேர்ந்த கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார். ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும். இதற்கிடையே இந்த போட்டியில் கார்ல்சன் 40 நகர்வுகளுடன் கொலம்பிய வீரரை தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.