என் மலர்
நீங்கள் தேடியது "Flashing lights"
- 3 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக புதிதாக போடப்பட்டது.
- கடந்த 2 வாரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து மடித்தோரை பகுதி வரையிலான சாலை அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளது. இந்த சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக புதிதாக போடப்பட்டது. இந்த சாலையின் இரு புறங்களிலும் எச்சரிக்கை கோடுகள் மற்றும் சாலை நடுவில் ஒளிரும் விளக்குகள் தற்போது வரை போட படாமலே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் சாலை தெரியாமல் சாலை ஓரத்தில் இருக்கும் மரங்களிலும், பள்ளங்களிலும் வானங்களை மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து ஒளிரும் விளக்குகளையும், எச்சரிக்கை கோடுகளையும் போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவையில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
- கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
கோவை,
கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப் பட்டு உள்ளன. கோவை மாநகரம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு களைகட்டி உள்ளது.
நாளை (25-ந்தேதி) இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.
கிறிஸ்தவர் வீடுகளில் வண்ண அலங்கார தோரண மின் விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார சீரியல் விளக்குகள் ஜொலித்து வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கு வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவையில் பீளமேடு பன்மால், புருக் பாண்ட் ரோட்டில் உள்ள புருக் பீல்டு மால், சரவணம்பட்டியில் உள்ள புரோசோன் மால்களிலும் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை பார்க்க பொதுமக்கள் கூட்டம் திரண்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இன்று நள்ளிரவு கோவை பெரியக்கடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இன்று இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் வழி பாட்டு பாடல் பாடப்படுகிறது.
இதனைதொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்குமேடையில் இருந்து குழந்தை ஏசுவை குடிலில் கொண்டு சென்று வைக்கும் நிகழ்வு நடக்கிறது. பின்னர் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது.
புலியகுளம் புனித அந் தோணியர் ஆலயம், புனித பாத்திமா அன்னை தேவாலயம், ரத்தினபுரி புனித சின்னப்பர் தேவாலயம், புரூக்பாண்ட் சாலையில் உள்ள சிரியன் சர்ச், அத்திப்பாளையம் புனித பிரான்சிஸ் அசிசி யார் ஆலயம், கோவைப்புதூர் புனித ஏயேசு ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
மேலும், திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், இம்மானுவேல் ஆலயம், ஆல்சோல்ஸ் சர்ச், காந் திபுரம், மதுக்கரை, பட் டணம், கோவைப்புதூர், மலுமிச்சம்பட்டி, பேரூர், ஆலாந்துறை, போத்தனூர், ஒண்டிப்புதூர் ,சுந்தராபுரம் கிறிஸ்துநாதர் ஆலயம் உள் ளிட்ட அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் நாளை (25-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை நடக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கிறிஸ்துமஸ் குடில், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரார்த் தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒரு வருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
உடுமலை:
உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் ரூ. 48.87 கோடி நிதி ஒதுக்கீட்டில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நகரில் திருப்பூர் ரோடு, தளி ரோடு, எலையமுத்தூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டின் மையத்தடுப்புகளில் இரு புறமும் ஒளிரும் வகையில், தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், 5.91 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, அனுஷம் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றன. அதேநேரம், தாராபுரம் ரோட்டில் மின் கம்பங்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதற்கான தொகை மின்வாரியத்திற்கு செலுத்தப்படாமல் இருந்தது.
நீண்ட இழுபறிக்குப்பின் சமீபத்தில்அதற்கான தொகை நகராட்சியால் மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள மின் விளக்குகள் ஒளிர உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், உரிய தொகை செலுத்தப்பட்டுள்ளதால் மின் இணைப்பு வழங்கி மின் விளக்குகள் ஒளிரச்செய்யப்படும்என்றனர்.