என் மலர்
நீங்கள் தேடியது "Relocation"
- அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அதிரடி
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
அரியலூர் மாவட்டம் அரியலூர் வருவாய் வட்டாட்சியர் கண்ணன், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும், அரியலூர் மாவட்ட கலெக்டர் நிலம் எடுக்கும்பிரிவு நேர்முக உதவியாளர் ஆனந்தவேல் அரியலூர்வருவாய் வட்டாட்சியராகவும், உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் துரை அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும் அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் முத்துலெட்சுமி அரியலூண மாவட்ட கலெக்டர் நேர்முகஉத வியாளர்(நிலஎடுக்கும் பிரிவு) வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டு உளளனர்.
இதே போல ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வருவாய் வட்டாட்சியராகவும், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் கலிலுர்ரகுமான் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சி யராவும் மாவட்ட கலெக்டர் அலுவலக உசூர் தலைமை உதவியாளர் செல்வம் உடையார்பாளையம் வட்ட வழங்கல் அலுவலராகவும் ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால் ஆண்டிமடம் தேர்தல்பிரிவு துணைவட்டா ட்சியராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், ஆண்டிமடம் தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் அய்யப்பன் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சி யராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் பழனிவேல் அரியலூர்வட்டவழங்கல் அலுவலராகவும், செந்துறை வட்டவழங்கல் அலுவலர் பாஸ்கர் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், அரியலூர்கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் இளவரசு செந்துறை வட்டவழங்கல் அலுவலராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நிலை குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.
- இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் திக்காவன் கிராமத்தை சேர்ந்தவர் அசோகா பீமாராய புடபக் (54). இவர் சேடம் நகராட்சியல் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நலக் குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.
மறுநாள் 13-ந் தேதி அவரது கிராமத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் அவர் இறந்து 6 மாதம் ஆன நிலையில் கடந்த 9-ந் தேதி அவரை குடகு மாவட்டம் மடிக்கேரி நகராட்சிக்கு இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரி இறந்து 6 மாதம் கழித்து அவருக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.