என் மலர்
நீங்கள் தேடியது "New"
- நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார்.
- இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், பணிஇட மாறுதல் பெற்று வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
- தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, தேசிய நோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி, அஸ்காட் திட்டத்தின்கீழ் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.
மாவட்டத்தில் கால்நடை கிளை நிலையங்கள் - 9, கால்நடை மருந்தகங்கள் - 149, நடமாடும் கால்நடை மருந்தகங்கள் - 6, கால்நடை மருத்துவமனைகள் - 7, கால்நடை பன்முக மருத்துவமனை- 1, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு-1 ஆகியவை உள்ளன.
விவசாயிகளால் 6 லட்சத்து 11 ஆயிரத்து 161 பசுக்கள், 46 ஆயிரத்து 420 எருமைகள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 733- செம்மறி ஆடுகள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 541 வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் கால்நடைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நேற்று என்.ஏ.என்.டி.ஐ. (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு அமைப்பின் சுகம் ஆகியவை இந்த இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படை த்தன்மை யுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என அவர் கூறினார்.
இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
- வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
- தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தியில் இருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும் விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.
இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர். தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.
பரமத்தியில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் பரமத்தி மெயின் சாலையிலேயே உள்ளதால், இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலும் வாகன விபத்தும் ஏற்படுகிறது. இந்த அரசு அலுவலகங்க ளுக்கு வேலை நாட்களில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர்.
மேலும் திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலை மற்றும் கபிலர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையாக பரமத்தி உள்ளதால் மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.
இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள், பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றன.
தற்போது வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்து மிகுந்த பரமத்திக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் புதிய கட்டடம் கட்டினால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
அதனால் மக்களின் நலன் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பரமத்தி வேலூரில் அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பரமத்தி வேலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் முருகனிடம் கேட்டபோது, தற்போதுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள் வதற்கு என தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.
சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு, அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்படும் என கூறினார்.
- நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.
நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.
- நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
- வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன
கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிதாக சாம்சங் 'கேலக்ஸி ரிங்' என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக உள்ள மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்து உள்ளன.

நவீன ஸ்மார்ட் வாட்சுகளை விட, கேலக்ஸி ரிங் ஒரு ஆரோக்கிய சாதனம் என்று அழைக்கப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். புதிய ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மோதிரத்தின் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.