என் மலர்
நீங்கள் தேடியது "ப சிதம்பரம்"
- காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற ப.சிதம்பரம் திடீரென மயக்கமடைந்தார்.
- ப.சிதம்பரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற ப.சிதம்பரம் திடீரென மயக்கமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் இப்பொழுது நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "கடும் வெயிலின் காரணமாக நீரிழப்பு (dehydration) ஏற்பட்டது; மருத்துவமனையில் எல்லாச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது நலமாக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்தார்.
- என் தந்தை நலமுடன் உள்ளார் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சிதம்பரம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் என தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என் தந்தை நலமுடன் உள்ளார், மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்டார்.
- திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- பாரத பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டுமல்லவா?
- அதை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம். வரலாற்றுப் பிழை.
சென்னை:
பிரதமர் மோடி நேற்று ராமேசுவரத்தில் பேசும் போது தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று புள்ளி விபரங்களுடன் தெரிவித்தார். ஆனால் நிதி ஒதுக்கீடு வருடத்துக்கு வருடம் அதிகரிக்கும் என்பது பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கே தெரியும் என்று ப.சிதம்பரம் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதலாம் ஆண்டு படிக்கும் பொருளாதார மாணவ, மாணவியருக்கு கூட தெரியும் ஆண்டாண்டு காலமாக இதுதான் நடைமுறை என்பது. ஆண்டுக்கு ஒரு முறை எல்லாத் துறைக்குமான நிதி அதிகரிக்கும் என்பது முதல் ஆண்டு படிக்கும் பொருளாதாரம் மாணவர்களுக்கு கூட தெரியும் என்று பிரதமரை விமர்சிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை என்றும் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. வெறும் திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள் என்றும் கேலி பேசும் உங்கள் கூட்டணியின் முதல்வர், துணை முதல்வர், தமிழக அமைச்சர்களுக்கும் பதில் அளிக்கும் விதமாகத்தான் நேற்றைய மேடையிலே தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் சொன்ன விளக்கத்தை ஏற்க பயந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குளுகுளு ஊட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே தரவில்லை என்று அங்கே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அதே நேரத்திலே இங்கே ரூ.8000 கோடிக்கு அதிகமான மக்கள் நலத் திட்டங்களையும் சாலை விரிவாக்கத் திட்டங்களையும் ராமேஸ்வரத்தில் அர்ப்பணித்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. உண்மையை சொன்னால் அல்வா கூட கசக்கிறது. ராமேஸ்வரம் வந்த பாரத பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டுமல்லவா? அதை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம். வரலாற்றுப் பிழை.
அதை விடுத்து தி.மு.க. செய்யும் விமர்சனத்திற்கு சிதம்பரம் போன்றவர்கள் வக்காலத்து வாங்குவது ஏதோ அறிவாலயத்தின் வாசலில் நின்று ஒவ்வொரு தேர்தலிலும் சில எம்.பி. சீட்டுக்களை பெறுவதற்கு தான் என்பதை மக்கள் உணர்வார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 2152 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை.
- இந்த நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாயை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது என பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ப.சிதம்பரம் "மத்திய அரசுக்கு இப்பொழுதாவது வெட்கம் வந்து, அவர்கள் நிதியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக,
2025-2026ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது" எனக் கூறினார்.
- 2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது.
- தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி இந்தி, அரசு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி என்று அனைத்தும் இந்தி தான்.
2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களையே நியமிக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி, மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த பிரச்சனையில் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்.
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- உத்தரபிரதேசத்தில் ‘சி’ பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
- 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுடெல்லி
நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநிலத்தில 'சி' பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களின் வேதனைக்குரலை அரசு காது கொடுத்து கேட்கிறதா?
நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு வேறு வழியில்லை.
கடந்த 8 ஆண்டு கால மத்திய அரசின் பாரம்பரியமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 8 சதவீதமாம். இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான மத்திய நிதி அமைச்சக ஆய்வு அறிக்கை, வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- குஜராத் முதல்-மந்திரியால் ஆட்சி செய்யப்படவில்லை.
- அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை பா.ஜனதா உத்தரவுபடி செயல்படுகிறது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
இந்த நிலையில் மோர்பி பாலம் விபத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பா.சிதம்பரம் கூறியதாவது:-
மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. அல்லது ராஜினாமா செய்யவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குஜராத் முதல்-மந்திரியால் ஆட்சி செய்யப்படவில்லை. டெல்லியில் இருந்து ஆட்சி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை பா.ஜனதா உத்தரவுபடி செயல்படுகிறது. இதுபோன்ற அமைப்புகளால் கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
- தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.
சென்னை:
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கடந்த வாரம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. விசுவநாதன் ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து புகார் செய்தனர்.
மாநில தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதற்கிடையில் 11 எம்.எல்.ஏ.க்கள் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றக்கூடாது என்று வற்புறுத்தினார்கள்.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையை தினேஷ் குண்டுராவ் ரத்து செய்தார். இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், தினேஷ் குண்டுராவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
இதையடுத்து தினேஷ் குண்டுராவையும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியையும் டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.
கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. அதே நேரம் 3 ஆண்டு செயல்பாடுகள், தற்போது மாநிலம் முழுவதும் 23,400 கொடியேற்றும் திட்டம் ஆகியவற்றையும் டெல்லி மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அழைத்து கார்கே ஆலோசனை நடத்தி இருக்கிறார். அரைமணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி கருத்து கேட்டுள்ளார்.
அப்போது 'துடிப்பாக கட்சிக்கு வேலை செய்பவர்களை பார்த்து நியமியுங்கள்' என்று சிதம்பரம் கூறியதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
என்னதான் நெருக்கடி இருந்தாலும் ராகுல் நடைபயணம் நடந்து வருவதால் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் மாற்றம் இருக்கும் என்று பேசப்பட்டது.
ஆனால் ஆந்திரா, பீகார் ஆகிய மாநில உட்கட்சி பிரச்சினைகளில் அந்த மாநில தலைவர்களை அதிரடியாக மாற்றி உள்ளார்.
எனவே தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள். மேலிடத்தின் முடிவுக்காக தொண்டர்கள் காத்து இருக்கிறார்கள்.
- அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை.
- அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது.
சிவகங்கை :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசியது உரையல்ல. குறிப்பாக எதிர்க்கட்சிகளை திட்டினார். காங்கிரஸ் கட்சி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை என்று கூறவில்லை. முந்தைய காலத்தில் இருந்த சூழ்நிலையில், 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் அரசை தண்டித்து இருப்பார்கள்.
இவர்கள் 356-ஐ பயன்படுத்தி அரசை நீக்குவது கிடையாது. அதற்கு பதிலாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அண்மையில் விலைக்கு வாங்கியது கோவாவில் நடந்தது. 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கினார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தல். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலா இருந்தார்கள்?.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 2024-ல் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அது தொடரட்டும். பா.ஜனதா என்ற பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு அ.தி.மு.க. வரட்டும். அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திலும் அதை மறுக்கவில்லை
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருகிறது.
- இந்தியப் பொருளாதார நிலைமை மிகச் சிறப்பாகக் கையாளக் கூடியது என்று அரசு கூறி வருகிறது.
புதுடெல்லி :
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குறைந்த வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை மக்கள் மீது, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்துகின்றன' என கூறியுள்ளார்.
உலக வங்கியின் கடந்த மாத சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையில் இந்த ஆண்டின் உலக வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், ஆனாலும், இந்தியப் பொருளாதார நிலைமை 'மிகச் சிறப்பாகக் கையாளக் கூடியது' என்று அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து கூறி வருவதாகவும் சாடியுள்ளார்.
- ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகம் எதிர்பார்க்கிறோம்.
புதுடெல்லி :
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்குமா? என கேட்கப்பட்டது.
அதற்கு ப.சிதம்பரம் பதில் அளித்து கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பலத்தை கூட்டணிக்கு கொண்டுவருகிறது. காங்கிரசைத் தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநில கட்சிகள் என்பதை ஒப்புக்கொள்வதும் உண்டு.
பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு காங்கிரசே மையமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பணிவுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் அணுக வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகம் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அதன் மாநில அளவிலான பார்வையை விட்டுவிட்டு, அகில இந்திய பார்வையை கொண்டிருக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்களும், சரத்பவார், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி மற்றும் மு.க.ஸ்டாலின் போன்ற கூட்டணி கட்சி தலைவர்களும் புதிய கண்ணோட்டத்துடன் தேர்தலை அணுக அனைத்து கட்சிகளையும் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
இதைப்போல காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் குறித்தும் ப.சிதம்பரம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக உறுப்பினர்களில் பாதி பேர் தேர்தல் மூலம் நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதேநேரம் இந்த தேர்தலுக்கான வாக்காளர் விவகாரத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்த ப.சிதம்பரம், இந்த பிரச்சினைகள் அனைத்தும் கட்சியின் தேர்தல் கமிஷன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் கட்சியின் அதிகாரம் மிக்க காரிய கமிட்டியில் இளம் தலைவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராய்ப்பூரில் 24-ந் தேதி தொடங்கும் நிலையில், காரிய கமிட்டி குறித்து ப.சிதம்பரம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.